Thursday, December 20, 2007
PLEASE HELP..................................................................
தமிழ்மணத்தில் பதிவுகளை எவ்வாறு இனைப்பது என்று யாராவது எனக்கு தெளிவாகக் கூறுங்களேன் என்னுடைய மின்னஞ்சல்:khemkarpaka@yahoo.co.in please....
''ராமேஸ்வரம்''-சீமான் பாய்ச்சல்

என்று தாயகம் திரும்புவோம், எப்போது நமது துயரங்கள் தீரும் என்ற கவலையில் இருக்கும் இலங்கை அகதிகளை மோசமாக சித்தரிக்கும் வகையில் ராமேஸ்வரம் படம் எடுக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் சீமான் கோபத்தை வெளியிட்டுள்ளார்.
புதுமுக இயக்குநர் செல்வம் இயக்க, ஜீவா, பாவனா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ராமேஸ்வரம். அங்குள்ள இலங்கை அகதிகள் முகாமின் பின்னணியில் நடிக்கும் காதல் கதை இது.
இதற்கு சீமான் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் கூறுகையில், இலங்கை இனப் பிரச்சினை குறித்த முழுமையான விவரங்கள், உண்மைகள் நமக்கு தெரியாது. எனவே அந்த விவகாரத்தை திரைப்படமாக எடுக்க நினைப்பதையே தவிர்க்க வேண்டும். அதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் செய்யும் மரியாதை.
இலங்கையிலிருந்து அகதியாக வந்தவர்களின் நிலையை இழிவுபடுத்தும் விதமாக, அவர்களை அவமரியாதை செய்யும் வகையில் படம் எடுப்பது தவறு.
இலங்கையிலிருந்து அகதியாக வந்த ஒரு வாலிபன், காதலிப்பது போல காட்டுவது சரியான செயலன்று. மீண்டும் எப்போது தாயகம் திரும்புவோம், பிரச்சினைகள் எப்போது தீரும் என்ற ஆதங்கத்தில், தவிப்பில் இருப்பவர்கள் காதலிப்பது போல காட்டினால் அது அவர்களை மோசமாக சித்தரிப்பது போலாகும் என்று கூறியிருந்தார் சீமான்.
இதற்கு செல்வம் பதில் கொடுத்துள்ளார். இதுகுறித்து செல்வம் கூறுகையில், இலங்கைத் தமிழர்கள் மீது தான் மட்டுமே பாசத்துடன் இருப்பதாக காட்டிக் கொள்கிறார் சீமான். அடுத்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் குறித்ுத பாசம் காட்டினால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இதனால்தான் எனது படம் குறித்து அவர் விமர்சித்துள்ளார். முதலில் எனது படத்தை அவர் பார்க்கட்டும், பிறகு பேசட்டும் என்று கூறியுள்ளார் செல்வம்.
செல்வம், சீமான் மீது பாய்ந்தாலும் கூட, ராமேஸ்வரம் படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதையும், கதையின் போக்கு, கேரக்டர்கள் குறித்து ஆங்காங்கு சில அதிருப்திகளும் தலை தூக்கியிருப்பதை செல்வம் உணர வேண்டும். இது கூட சீமானின் கோபத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
'அரவாணி' ஆகும் ஆச்சி

ஆச்சி மனோரமாவின் நீண்ட நாளைய ஆசை ஒரு வழியாக நிறைவேறப் போகிறது. புதிய படம் ஒன்றில் ஆச்சி, அரவாணி வேடத்தில் நடிக்கப் போகிறார்.
கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமா, நடிக்காத வேடங்களே இல்லை. அத்தனை வேடங்களிலும் நடித்துக் கலக்கியுள்ள மனோரமா மனதில், அரவாணி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. அது கை கூடாமல் இருந்து வந்தது.
இப்போதுதான் அது நிறைவேற காலம் கனிந்துள்ளது. ஜான் என்று பெயரிடப்பட்ட புதிய படத்தில் அரவாணி வேடத்தில் நடிக்கிறார் மனோரமா.
சோலைக்குயில், மலைச்சாரல், காதலே நிம்மதி ஆகிய படங்களை இயக்கிய இந்திரன் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
நீலகிரி மலைப் பகுதியில் வாழும் படுகர் இனத்தவரின் வாழ்க்கைச் சூழலில், உருவாகும் படம் ஜான். ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் தொடக்க விழா ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தபோது படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் திரளாக வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர்.
மேலும் ஆச்சி மனோரமாவையும் அவர்கள் நடனமாடி வரவேற்றனர். உற்சாகத்தில் ஆச்சியும் அவர்களுடன் சேர்ந்து ஒரு ஆட்டத்தைப் போட்டு அசத்தினார்.
படத்தின் நாயகனும், நாயகியும் புதுமுகங்கள் ஆவர். ஆச்சியிடம் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறி கதையையும் சொன்னபோது முழு திருப்தி அடைந்தாராம். மேலும், அரவாணி கேரக்டர் குறித்து கூறியதுமே திருப்தி அடைந்து நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
ஆச்சிக்கு, இந்தப் படம் நிச்சயம் ஒரு மைல் கல்லாக அமையும் என்கிறார் இந்திரன்.
கல்லூரி கிளைமாக்ஸ் மாற்றம

கல்லூரி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் அதிருப்தியைத் தொடர்ந்து மாற்றியுள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.
இயக்குநர் ஷங்கரின் சிஷ்யரான பாலாஜி சக்திவேல் கொடுத்த முதல் படம் காதல். அந்த தாக்கத்திலிருந்து ரசிகர்கள் இன்னும் கூட மீளாத நிலையில், அடுத்த படமான கல்லூரி வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கல்லூரிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், படத்தின் இறுதியில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில், தர்மபுரியில் நடந்தது போல, மூன்று பெண்களை ஓடும் பேருந்தில் உயிருடன் கொளுத்துவது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது.
இதை ரசிகர்கள் ரசிக்கவில்லை. மீடியாக்கும் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தன. பாலாஜியும் யோசித்துப் பார்த்தார். தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தின் தீர்ப்பு வெளியாகி விட்ட நிலையில் அதுதொடர்பான கோர்ட் காட்சிகளும் தேவையில்லை என்று நினைத்தார் பாலாஜி.
இதையடுத்து கோர்ட் காட்சிகளை நீக்கி விட்டார் பாலாஜி சக்திவேல். மேலும், கிளைமாக்ஸ் காட்சியையும் கூட மாற்றியுள்ளார். புதிய மாற்றங்கள் கல்லூரிக்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் என்ற நம்பிக்கையில் உள்ளார் பாலாஜி.
கல்லூரியை திறந்து விட்ட கையோடு அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி விட்டார் பாலாஜி சக்திவேல். இந்தப் படத்தையும் ஷங்கரின் எஸ். பிக்சர்ஸ்தான் தயாரிக்கவுள்ளது.
நாய்க்கு பாசம் காட்டிய சந்திரசேகர்!

சற்றும் சம்பந்தம் இல்லாமல் தன்னிடம் பாசம் காட்டிய நாய் மீது அன்பு கொண்ட நடிகர் சந்திரசேகர் அதை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்பித்துள்ளார்.
நடிகர் சந்திரசேகர் தனது குடும்பத்தினருடன் நெல்லையில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டுக்காக கடந்த 14ம் தேதி காரில் சென்னையிலிருந்து நெல்லை சென்றார்.
வழியில் திண்டிவனம் அருகே ஒரு மோட்டலில் காரை நிறுத்தி குடும்பத்தோடு சாப்பிட்டார். அப்போது ஒரு நாய் சந்திரசேகரிடம் வந்து நின்று பாசத்துடன் ஒட்டிக் கொண்டது.
அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சந்திரசேகர், நாய் யாருடையது என்று ஹோட்டல்காரர்களிடம் அவர் விசாரித்தபோது, எங்கிருந்தோ வந்த நாய் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து மாநாட்டுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்க்கலாம் என திட்டமிட்டு நெல்லைக்குச் சென்றார்.
பின்னர் நெல்லையிலிருந்து சென்னைக்குத் திரும்பும்போது அந்த ஹோட்டலுக்குப் போய் நாயைப் பற்றி விசாரித்தார். அதற்கு ஹோட்டலில் இருந்தவர்கள், அந்த நாயை வேறு யாரோ வந்து அழைத்துச் சென்று விட்டதாக தெரிவித்தனர்.
ஏமாற்றமடைந்த சந்திரசேகர், அந்த நாயின் பாசத்தை மறக்க முடியாமல் ஒலக்கூர் காவல் நிலையம் சென்று எப்படியாவது அந்த நாயை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.
போலீஸாரும் சந்திரசேகரின் 'நாயுள்ளத்தைப்' பார்த்து வியந்து அந்த நாயைத் தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நாயை வளர்த்து வருபவரிடம் பேசி அதைப் பெற்று சந்திரசேகரிடம் ஒப்படைத்தனர்.
சந்தோஷமடைந்த சந்திரசேகர், நாயுடன் சென்னைக்குத் திரும்பினார். அனாதரவாக திரிந்து கொண்டிருந்த அந்த திண்டிவனம் நாய் இப்போது சந்திரசேகரின் சென்னை வீட்டில் 'ஜம்'மென்று வளைய வந்து கொண்டிருக்கிறது.
ஆக்கிரமிக்கும் ரீமிக்ஸ் பாடல்கள்

தமிழ் திரைப்படங்களில் ரீமிக்ஸ் பாடல்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ படத்திற்கு ஒரு ரீமிக்ஸ் பாட்டு இருந்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தமிழ்த் திரையுலகம் தள்ளப்பட்டுள்ளது.
கோலிவுட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கு முதலில் டைட்டில்களுக்கு தான் திண்டாட்டம் இருந்தது. இதனால் பழைய படங்களின் டைட்டில்களையே மறுபடியும் சூட்ட ஆரம்பித்தனர்.
திருவிளையாடல், பொல்லாதவன் என பழைய ஹிட் படங்களின் தலைப்புகளை சூட்ட ஆரம்பித்தனர். பின்னர் ரீமிக்ஸ் பாடல்கள் வந்தன. லேட்டஸ்டாக பழைய படங்களையே ரீமேக் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
முதலில் நான் அவனில்லை அதே பெயரில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. சமீபத்தில் பில்லாவை ரீமேக் செய்தனர்.
படங்களை ரீமேக் செய்வதை விட ஹிட் பாடல்களை ரீமிக்ஸ் செய்வதில்தான் திரையுலகினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
துள்ளுவதோ இளமை, ஆசை நூறு வகை, தொட்டால் பூ மலரும் என அந்தக் காலத்து ஹிட் பாடல்களை ரீமேக் செய்து அவை வெற்றி பெற்றதால் தொடர்ந்து எல்லாப் படங்களிலும் ரீமிக்ஸ் பாடல்கள் இடம் பெற ஆரம்பித்தன.
அதிலும் மன்மதன் படத்தில் என் ஆசை மைதிலியே பாடலின் ரீமிக்ஸ் சூப்பர் ஹிட் ஆனதால் கிட்டத்தட்ட அத்தனை படங்களிலும் ரீமிக்ஸ் பாடல்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளது..
தற்போது ரிலீசுக்கு ரெடியாக உள்ள 8 திரைப்படங்களில் ரீமிக்ஸ் பாடல்கள் இடம் பெற்றுள்ளதாம். பழைய சிவாஜி நடித்த பராசக்தி பட பாடல் முதல், பிரபு நடித்த அக்னி நட்சத்திரம் பாடல் வரை ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாம்.
சுந்தர்.சியின் பெருமாள் படத்தில் பராசக்தியில் இடம்பெற்ற ஓ ரசிக சீமானே வா என்ற பாடலும், சுந்தர்.சியின் சண்ட படத்தில் அலைகள் ஓய்வதில்லையில் வந்த வாடி என் கப்பக்கிழங்கே என்ற பாட்டும் ரீமிக்ஸ் ஆகியுள்ளதாம்.
சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் சிவாஜி நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் இடம்பெற்ற நலந்தானா பாடலும், சிங்கக்குட்டி என்ற படத்தில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் ஆட்டமா....தேரோட்டமா... என்ற பாடலும்,
உனது விழியில் என்ற படத்தில் வல்லவனுக்கு வல்லவனில் வரும் பளிங்கினால் ஒரு மாளிகை என்ற பாடலும், அர்ஜூன் நடிக்கும் துரை படத்தில் பிரபு நடித்த அக்னி நட்சத்திரம் படத்தின் ராஜா..ராஜாதிராஜன் இந்த ராஜா... என்ற பாடலும் இடம் பெற்றுள்ளது.
சத்யராஜ் நடித்துள்ள தங்கம் படத்தில் நினைத்ததை முடிப்பவனில் வரும் பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிம்புவின் கெட்டவன் படத்தில் அவர் தந்தை நடித்த மைதிலி என்னை காதலி படத்தில் வரும் ராக்கால வேளையிலே... என்ற பாடலை ரீமிக்ஸ் செய்கிறாராம்.
கற்பனை வளம் குன்றி விட்டதா அல்லது எதற்காக மூளையைக் கசக்கி கஷ்டப்பட வேண்டும் என்று நினைத்து விட்டார்களா என்று தெரியவில்லை.
பெண்களுக்காக ஸ்பெஷல் 'மிருகம்'!

பெண்கள் கூட்டம் அதிகம் வராததால், மிருகம் படத்தின் சிறப்புக் காட்சியை பெண்களுக்காக சென்னையில் ஏற்பாடு செய்துள்ளனராம்.
இயக்குநர் சாமி இயக்கத்தில், புதுமுகம் ஆதி, பத்மப்ரியா நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் மிருகம்.
பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. இருப்பினும் படத்திற்கு பெண்களிடையே சரியான வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை நகரில் பெண்கள் மிருகம் படத்திற்கு வராதது தயாரிப்பாளர் தரப்புக்கு சோர்வைக் கொடுத்துள்ளது.
இதையடுத்து பெண்களைக் கவருவதற்காக பெண்களுக்காகவே சிறப்பு இலவசக் காட்சிக்கு தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய் ஏற்பாடு செய்துள்ளார்.
சென்னை உதயம் தியேட்டரில் 22ம் தேதி பகல் 3 மணிக்கு இந்த இலவச சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காட்சியில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஒரு பெண் துணைக்கு இன்னொரு பெண்ணை அழைத்து வரலாம். அவரும் இலவசமாகவே அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பெண்கள் காட்சியின்போது கண்டிப்பாக ஆண்களுக்கு அனுமதி இல்லையாம்.
வர மறுத்த அனுஷ்கா!

தமிழில் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம் அனுஷ்கா.
சரண் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த வட்டாரம் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகவிருந்தவர் அனுஷ்கா. ஆனால் கடைசி நேரத்தில் அனுஷ்காவை நிராகரித்தார் சரண்.
இதனால் வருத்தத்தில் இருந்த அனுஷ்காவுக்கு ஆதரவு தரும் வகையில் சுந்தர்.சியின் ரெண்டு படத்தில் நடிக்க அழைக்கப்பட்டார் அனுஷ்கா. இப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.
அப்படத்தில் ரீமா சென்தான் நாயகி. அனுஷ்கா இரண்டாவது நாயகியாகத்தான் நடித்தார். இருந்தாலும் ரீமாவுக்கு சமமாக அனுஷ்காவும் பேசப்பட்டார்.
இப்படத்திற்குப் பின்னர் அனுஷ்கா தெலுங்குக்குப் போய் விட்டார். இப்போது தெலுங்கில் கை நிறைய வாய்ப்புகளுடன் பிசியாக உள்ளார் அனுஷ்கா.
இந்த நிலையில் சமீபத்தில் பயணிகள் கவனத்திற்கு என்ற புதுப் படத்தில் நாயகியாக நடிக்க அணுகினர். இப்படத்தின் நாயகன் ஜீவன்.
ஆனால் இப்படத்தை நிராகரித்து விட்டாராம் அனுஷ்கா. எனக்கு தமிழ் சரியான வாய்ப்புகள் தரவில்லை. அப்போது என்னை கை தூக்கி ஆதரவு கொடுத்தது தெலுங்குதான். தெலுங்கில் எனக்கு திருப்திகரமான அளவுக்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே தெலுங்கிலேயே தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். எனவே வேறு படத்தில் நடிக்க முடியாது என்று கூறி அனுப்பி விட்டாராம்.
இதைக் கேட்டு அப்செட் ஆகி திரும்பி வந்துள்ளனராம் பயணிகள் கவனத்திற்கு படத் தரப்பினர்.
மறுபடியும் தமிழைத் தேடி அனுஷ்கா வர நேரிடும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கடுப்புடன் உள்ளனராம் தமிழ்த் திரையுலகினர்.
Tuesday, December 11, 2007
குஷ்பு தொடங்கும் பட விழா

சென்னையில் வருகிற 14ம் தேதி தொடங்கும் 5வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடிகை குஷ்பு தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் கடந்த 4 ஆண்டுகளாக சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 5வது திரைப்பட விழா வருகிற 14ம் தேதி தொடங்குகிறது.
குஷ்பு விழாவைத் தொடங்கி வைக்கிறார். இயக்குநர் கே.பாலச்சந்தர், நடிகை சுஹாசினி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முதல் நாளன்று ஆஸ்கர் விருது பெற்ற ஜெர்மனிப் படமான தி லைவ்ஸ் ஆப் அதர்ஸ் திரையிடப்படுகிறது.
14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் 42 நாடுகளைச் சேர்ந்த 124 படங்கள் திரையிடப்படவுள்ளன. கோவாவில் சமீபத்தில் முடிந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பெரும்பாலான படங்கள் இந்த விழாவிலும் கலந்து கொள்கின்றன.
திரைப்பட வர்த்தக சபை அரங்கம், உட்லண்ட்ஸ், பைலட் ஆகிய மூன்று திரையரங்கங்களில் படங்கள் திரையிடப்படுகின்றன.
தமிழில் பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், பருத்தி வீரன், அம்முவாகிய நான், எவனோ ஒருவன், மொழி ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
காங்கோ, நைஜீரியா, எகிப்து, லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றிலிருந்தும் பல்வேறு படங்கள் திரையிடப்படும் எனத் தெரிகிறது.
இயக்குநர் கே.பாலச்சந்தர், கமல்ஹாசன், சத்யராஜ், மணிரத்தினம்,
சுஹாசினி ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர்.
விழாவின் நிறைவு நாளில் அடூர் கோபாலகிருஷ்ணனின் நாலு பெண்ணுகள் என்ற படம் திரையிடப்படுகிறது.
துணை நடிகை-பெண் என்ஜினியர் கட்டிப் புரண்டு சண்டை
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் டிஸ்கோ ஆடியபோது, ஒரு பெண் என்ஜீனியர் தனது காலை மிதித்து விட்டதால், கோபமடைந்த துணை நடிகை ஒருவர் அந்த பெண் என்ஜீனியருடன் குடுமி பிடி சண்டை போட்டார். இதுதொடர்பாக போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை நகர நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்கள் உள்ளிட்டவற்றில் நள்ளிரவில் நடைபெறும் பேயாட்ட நடனங்கள், காவல்துறைக்கு பெரும் தலை இடியாக மாறி வருகிறது.
இந்த நடனங்களில் ஆபாசம் அளவுக்கு அதிமாக உள்ளதாக புகார்கள் வருகின்றன. இது போதாதென்று, அவ்வப்போது பிரபல பெண்கள் அதிகமாக குடித்து விட்டு சண்டை போடுவதும் அதிகரித்து வருகிறது.
இதற்காகவே இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் நடைபெறும் ஹோட்டல்கள், கிளப்கள், உல்லாச ஓய்வு விடுதிகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில், துணை நடிகை ஒருவருக்கும், பெண் என்ஜீனியர் ஒருவருக்கும் இடையே கடும் கட்டிப்பிடி சண்டை நடந்துள்ளது.
இந்த ஹோட்டலில் உள்ள பாரில் மது அருந்தி விட்டு பலரும் ஜோடி ஜோடியாக தங்களை மறந்த நிலையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அதில் பிரபல துணை நடிகையும் ஒருவர். இவர் அடிக்கடி இதுபோன்ற ஆட்டங்களில் கலாட்டா செய்வதில் பிரபலமானவர்.
உல்லாச பானத்தை உள்ளே இறக்கி விட்டு, உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார் துணை நடிகை. அவருக்கு அருகே கம்ப்யூட்டர் என்ஜீனியர் ஒருவர் தனது துணையுடன் ஆடிக் கொண்டிருந்தார். இருவருமே நல்ல மப்பில் இருந்துள்ளனர்.
அப்போது பெண் என்ஜீனியரின் கால், துணை நடிகையின் காலில் தெரியாமல் பட்டு விட்டது. அவ்வளவுதான் உக்கிரதாண்டவத்தை ஆரம்பித்து விட்டார் அந்த துணை நடிகை.
பெண் என்ஜீனியரின் தலை முடியைப் பிடித்து இழுத்து ஆவேசமாக சண்டை போட்டார். பதிலுக்கு அந்தப் பெண்ணும், துணை நடிகையின் தலை முடியைப் பிடித்து ஆய்ந்து விட்டார். இருவரும் கட்டி உருண்டு சண்டை போட்டனர்.
போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த திடீர் சண்டையைப் பார்த்ததும் மப்பு போய் விட்டது. மிரண்டு போய் சண்டையைப் பார்க்க ஆரம்பித்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் உள்ளே பாய்ந்து இரு பெண்களையும் பிரித்து விட்டனர்.
சண்டை அத்துடன் முடிந்தது என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் சண்டையை முடித்து விட்டு வெளியே வந்த இருவரும் கார் பார்க்கிங் பகுதியில் மறுபடியும் கட்டி உருள ஆரம்பித்தனர்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து இருவரையும் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். இருவரும் போலீஸில் புகார் கொடுத்தனர். இருவரது புகார்களையும் வாங்கிக் கொண்ட போலீஸார், இருவருக்கும் போதை தெளியும் வரை காத்திருந்தனர்.
போதை தெளிந்த நிலையில் தாங்கள் சண்டை போட்டது தவறுதான், இனிமேல் இதுபோல நடக்காது என்று இருவரும் போலீஸில் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இருவரையும் எச்சரித்த போலீஸார் இப்போது போங்கள், ஆனால் புகார் அப்படியேதான் இருக்கும். வழக்குப் பதிவு செய்துள்ளோம். இருவரும் சமாதானமாகப் போவதாக மீண்டும் தெரிவித்தால் புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ள அனுமதிப்போம் என்று கூறி இரு பெண்களையும் அனுப்பி வைத்தனர்.
சென்னை நகர நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்கள் உள்ளிட்டவற்றில் நள்ளிரவில் நடைபெறும் பேயாட்ட நடனங்கள், காவல்துறைக்கு பெரும் தலை இடியாக மாறி வருகிறது.
இந்த நடனங்களில் ஆபாசம் அளவுக்கு அதிமாக உள்ளதாக புகார்கள் வருகின்றன. இது போதாதென்று, அவ்வப்போது பிரபல பெண்கள் அதிகமாக குடித்து விட்டு சண்டை போடுவதும் அதிகரித்து வருகிறது.
இதற்காகவே இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் நடைபெறும் ஹோட்டல்கள், கிளப்கள், உல்லாச ஓய்வு விடுதிகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில், துணை நடிகை ஒருவருக்கும், பெண் என்ஜீனியர் ஒருவருக்கும் இடையே கடும் கட்டிப்பிடி சண்டை நடந்துள்ளது.
இந்த ஹோட்டலில் உள்ள பாரில் மது அருந்தி விட்டு பலரும் ஜோடி ஜோடியாக தங்களை மறந்த நிலையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அதில் பிரபல துணை நடிகையும் ஒருவர். இவர் அடிக்கடி இதுபோன்ற ஆட்டங்களில் கலாட்டா செய்வதில் பிரபலமானவர்.
உல்லாச பானத்தை உள்ளே இறக்கி விட்டு, உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார் துணை நடிகை. அவருக்கு அருகே கம்ப்யூட்டர் என்ஜீனியர் ஒருவர் தனது துணையுடன் ஆடிக் கொண்டிருந்தார். இருவருமே நல்ல மப்பில் இருந்துள்ளனர்.
அப்போது பெண் என்ஜீனியரின் கால், துணை நடிகையின் காலில் தெரியாமல் பட்டு விட்டது. அவ்வளவுதான் உக்கிரதாண்டவத்தை ஆரம்பித்து விட்டார் அந்த துணை நடிகை.
பெண் என்ஜீனியரின் தலை முடியைப் பிடித்து இழுத்து ஆவேசமாக சண்டை போட்டார். பதிலுக்கு அந்தப் பெண்ணும், துணை நடிகையின் தலை முடியைப் பிடித்து ஆய்ந்து விட்டார். இருவரும் கட்டி உருண்டு சண்டை போட்டனர்.
போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த திடீர் சண்டையைப் பார்த்ததும் மப்பு போய் விட்டது. மிரண்டு போய் சண்டையைப் பார்க்க ஆரம்பித்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் உள்ளே பாய்ந்து இரு பெண்களையும் பிரித்து விட்டனர்.
சண்டை அத்துடன் முடிந்தது என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் சண்டையை முடித்து விட்டு வெளியே வந்த இருவரும் கார் பார்க்கிங் பகுதியில் மறுபடியும் கட்டி உருள ஆரம்பித்தனர்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து இருவரையும் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். இருவரும் போலீஸில் புகார் கொடுத்தனர். இருவரது புகார்களையும் வாங்கிக் கொண்ட போலீஸார், இருவருக்கும் போதை தெளியும் வரை காத்திருந்தனர்.
போதை தெளிந்த நிலையில் தாங்கள் சண்டை போட்டது தவறுதான், இனிமேல் இதுபோல நடக்காது என்று இருவரும் போலீஸில் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இருவரையும் எச்சரித்த போலீஸார் இப்போது போங்கள், ஆனால் புகார் அப்படியேதான் இருக்கும். வழக்குப் பதிவு செய்துள்ளோம். இருவரும் சமாதானமாகப் போவதாக மீண்டும் தெரிவித்தால் புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ள அனுமதிப்போம் என்று கூறி இரு பெண்களையும் அனுப்பி வைத்தனர்.
விவேக்கை வாரிய சிம்பு!!

வடிவேலு 2வது முறையாக நாயகனாக நடித்துள்ள படம் இந்திரலோகத்தில் நா. அழகப்பன். சூப்பரான 3 கெட்டப்களில் வடிவேலு கலக்கியிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விழாவில் ரஜினி, கமலைத் தவிர கிட்டத்தட்ட கோலிவுட்டின் முக்கியப் புள்ளிகள் பலரும் கலந்து கொண்டனர்.
விஜய், சூர்யா, சிம்பு ஆகியோர்தான் நிகழ்ச்சியின் முக்கிய ஹைலைட்டாக இருந்தனர். சேரன், பார்த்திபனும் வந்திருந்து சிறப்பித்தனர்.
படு வித்தியாசமாக, லிட்டில் பிளவர் பள்ளியைச் சேர்ந்த கண் பார்வையாற்ற, காது கேட்காத சிறுவர், சிறுமியர் முன்னிலையில் ஆடியோ கேசட் வெளியிடப்பட்டது டச்சிங்காக இருந்தது. ரஜினிக்குப் பிறகு சிறார் வட்டாரத்தின் ஆதரவு வடிவேலுவுக்குத்தான் என்பதைச் சொல்லாமல் சொல்வது போல இது இருந்தது.
வடிவேலு, விஜய், சூர்யா, சிம்பு என தமிழ்த் திரையுலகின் தூண்களுக்கு மத்தியில் இருந்ததை அந்தக் குட்டிப் பட்டாளம் படு குஷியாகவே அனுபவித்தது.
விஜய்யின் பெயர் நிகழ்ச்சி அழைப்பிதழில் இல்லை. திடீரெனத்தான் அவர் வந்தார். வடிவேலுவுக்கு இதில் பரம சந்தோஷம். தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கேட்டுக் கொண்டதன் பேரில் விஜய் வந்தாராம்.
அதேபோல அதே தியேட்டர் வளாகத்தில் நடந்த பிரிவோம் சந்திப்போம் பட ஆடியோ வெளியீட்டு விழாவை முடித்து விட்டு சேரனும், வடிவேலு நிகழ்ச்சிக்கு வந்து வடிவேலுவை வாயார வாழ்த்தி விட்டுப் போனார்.
விழாவில் சூர்யா ஆடியோவை வெளியிட சிம்பு பெற்றுக் கொண்டார்.
பேசியவர்களிலேயே முக்கியமான பேச்சு சிம்புவுடையதுதான். வழக்கம் போல சர்ச்சையை ஏற்படுத்தி விட்டுப் போனார் சிம்பு.
சிம்பு பேசுகையில், இப்போதைய இளம் தலைமுறை ஹீரோக்களுக்கு இடையே எந்தவித போட்டி மனப்பான்மையும் இல்லை, நட்போடுதான் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் விழாவாக இது உள்ளது. இங்கு ஒரே மேடையில் விஜய் இருக்கிறார். கடவுள் மாதிரி வந்திருக்கிறார். சூர்யா இருக்கிறார், நான் இருக்கிறேன்.
வடிவேலுவின் காமெடி எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய ரசிகன் நான். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சிரிக்க வைப்பவர் வடிவேலு. ஆனால் சிலர் இருக்கிறார்கள். சக நடிகர்களையே கிண்டல் செய்து காமெடி என்ற பெயரில் மனதைப் புண்படுத்துகிறார்கள். ஆனால் வடிவேலு அப்படி அல்ல. யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சிரிக்க வைப்பார் வடிவேலு என்றார் சிம்பு.
சிம்பு யாரை வாரினார் என்பதை விளக்கிச் சொல்லத் தேவையில்லை. ரஜினி நடித்த சிவாஜியில் விவேக், பேசிய விரல் வித்தை பஞ்ச் டயலாக், சிம்புவை மனதில் வைத்துத்தான் வைக்கப்பட்டது என்பது சிம்பு தரப்பு ஆதங்கம். அந்த ஆதங்கத்தைத்தான் நேற்றைய விழாவில் கொட்டி விட்டுப் போனார் சிம்பு.
நிகழ்ச்சியின் நாயகனான வடிவேலு பேசுகையில், கொஞ்சம் உயரப் போனாலே பீதி வரும் என்பார்கள். எனக்கோ பயம்தான் வருகிறது. கை, கால் எல்லாம் அப்படியே உதறுகிறது. கரண்டு கம்பியைப் பிடித்து விட்டது போல இருக்குது.
தப்பு பண்ணிட்டமோ, வேண்டாத வேலையோன்னு தெரியுது. சிவனேன்னு காமெடியனா மட்டும் இருந்திருக்காலமோ என்று கூடத் தோன்றுகிறது.
முதலில் ஒரு கிணற்றில் தள்ளி விட்டார்கள். அதில் கொஞ்சம் தண்ணி இருந்தது. இப்போது பாழுங்கிணற்றில் தள்ளி விட்டுள்ளனர். அத்தோடு நில்லாமல் ஏறி வா என்று வேறு கூறுகிறார்கள்.
இம்சை அரசனில் உக்கிரபுத்திரன் கேரக்டரில் நான் சிரிக்கவே கூடாது என்றார்கள். இந்தப் படத்திலோ உங்களுக்கு நீங்கதான் வில்லன் என்று கூறினார்கள். கஷ்டப்பட்டு பேசி நடிச்சிருக்கேன். படத்தை நீங்கள்லாம் பார்த்து ரசிக்கும் வரை எனக்கு திக் திக்குன்னு இருக்கும் என்றார் வடிவேலு.
பார்த்திபன் வழக்கம் போல நகைச்சுவையால் அனைவரையும் நையப்புடைத்தார். அவர் கூறுகையில், வெளியூர் எங்காவது சென்றால் வடிவேலுவை கூப்பிட்டுட்டு வரலையா என்று கேட்கிறார்கள். ஏதோ அவர் என் பொண்டாட்டி போலவும், அல்லது நான் அவருக்குப் பொண்டாட்டி போலவும் நினைத்துக் கொண்டு விட்டார்கள் போல என்று அவர் கூறியபோது, அரங்கை கையலைகள் களேபரப்படுத்தின
தியா கல்யாணம் என்னாச்சு?

தித்திக்கும் தீயாக தமிழ் சினிமாவைக் கலக்க ஆரம்பித்து, சரியான முறையில் வாய்ப்புகள் கிடைக்காமல் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாம் என்று நினைத்த தியாவுக்கு கல்யாணமும் சதி செய்து விட்டதாம் - அதாவது கல்யாணம் ஆகாமலேயே அவருக்கும், அவருடைய காதலருக்கும் இடையிலான பந்தம் முறிந்து விட்டதாம்.
அழகுப் பெட்டகமாக தமிழ் சினிமாவுக்கு வந்த நாயகியரிடம் தியாவும் ஒருவர். நல்ல அழகு, வாளிப்பான கவர்ச்சி என எல்லா வகையிலும் பொருத்தமாக இருந்த தியாவுக்கு வாய்ப்புகள்தான் சரிவர வரவில்லை.
அங்கும் இங்குமாக ஓரிரு படங்களில் தலை காட்டி வந்தார். கோடம்பாக்கம் படத்தில் அமைதியான நடிப்பாலும், ஆபாசம் கலக்காத அழகாலும் கவர்ந்தார்.
அந்த சமயத்தில்தான் காதலிலும் விழுந்தார். கப்பல் கேப்டன் ஒருவருடன் காதல் கொண்ட தியா, பேசாமல் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விடத் தீர்மானித்தார்.
இதனால் புதிய வாய்ப்புகளை நிராகரித்த அவர் கையில் இருந்த ஓரிரு படங்களையும் வேகமாக முடித்துக் கொடுத்து விட்டு காதலருடன் கல்யாணத்திற்குத் தயாரானார்.
இந்த நிலையில்தான் காதலர் தரப்பிலிருந்து கல்யாணத்திற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தியாவை மணக்க காதலரின் குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்கவே, இப்போதைக்கு அமைதி காப்போம், பிறகு சம்மதம் வாங்கி விட்டு கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றார் காதலர்.
இருந்தாலும் பிடிப்பு ஏதும் இல்லாமல் இருந்தால் காதலர் கை நழுவிப் போய் விடுவாரோ என்று பயந்த தியா, காதலருடன் வீடு எடுத்து குடித்தனத்தை ஆரம்பித்தார்.
கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் அதிரடித் திருப்பமாக இருவரும் பிரிந்து விட்டார்களாம். இந்த நிமிடம் வரை காதலர் குடும்பத்திலிருந்து பச்சைக் கொடி வரவே இல்லையாம். இதற்கு மேலும் இருவரும் சேர்ந்து வசிப்பது சரியாக இருக்காது. பிரிந்து விடலாம் என்று காதலர் கூறி விட்டாராம்.
காதல் கல்யாணத்தில் முடியாமலேயே பிரிவு பட்டுப் போனதை எண்ணி பெரும் வருத்தத்தில் இருக்கிறாராம் தியா.
வருத்தம் கரைந்து மீண்டும் அவர் நடிக்க வந்தாலும் வரலாம் என்று கோடம்பாக்கத்தினர் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
Saturday, December 8, 2007
டைட் ஷெட்யூலில் சினேகா

சினிமா, டிவி விளம்பரம் என படு பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறார் சினேகா. அடுத்த ஆண்டு பாதி வரை அவரது கால்ஷீட் டைரி புல்லாக இருக்கிறதாம்.
புதுப்பேட்டைக்கு முன்பு கொஞ்சம் போல தமிழில் டல்லடித்திருந்தது சினேகாவின் மார்க்கெட். புதுப்பேட்டை வந்ததும் கொஞ்சம் போல நிமிர்ந்தார் சினேகா. நிறையப் பட வாய்ப்புகள், அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார்.
தமிழ் தவிர தெலுங்கிலும் சினேகாவுக்கென்ற உள்ள படங்கள் நல்ல இடைவெளியில் வந்ததால் இரு மொழிகளிலும் படு பிசியாக இருந்தார் சினேகா. கூடவே டிவி விளம்பரங்களும் சேர்ந்து கொண்டதால் படு டைட்டாகி விட்டது சினேகாவின் மார்க்கெட்.
இப்போது சினேகா சேரனுடன் பிரிவோம் சந்திப்போம், ஷாமுடன் இன்பா, ராகவேந்திரா லாரன்ஸுடன் பாண்டி என பிசியாக இருக்கிறார். தெலுங்கிலும் 2 படங்களில் நடிக்கவுள்ளார். இதுதவிர டிவி விளம்பரப் படங்களும் நிறையவே இருக்கிறதாம்.
இப்படி படு டைட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சினேகாவால் புதுப் படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதம் வரை கால்ஷீட் கொடுக்க தேதி இல்லையாம். அதன் பிறகுதான் புதுப் படங்களுக்குத் தரமுடியும் என்று கூறி வருகிறாராம்.
திரிஷாவின் குரலாசை!

திரிஷா புது முடிவெடுத்துள்ளார். அது, இனிமேல் சொந்தக் குரலில்தான் வசனம் பேசி நடிக்கப் போகிறாராம்.
நல்ல அழகோடு, இனிய குரல் வளமும் படைத்தவர் திரிஷா. ஆனாலும் இதுவரை அவர் ஒரு படத்தில் கூட சொந்தக் குரலில் பேசியதில்லை. தமிழைக் கூட எப்போதாவதுதான் பேசுவார். வாயைத் திறந்தாலே ஏபிசிடிதான்.
இந்த நிலையில் இனிமேல் தான் நடிக்கும் படங்களிலெல்லாம் சொந்தக் குரலில்தான் பேசி நடிக்கப் போகிறாராம் திரிஷா. முதல் முறையாக அபியும், நானும் படத்திலிருந்து சொந்தக் குரலுக்கு பிள்ளையார் சுழி போடுகிறாராம்.
திரிஷாவின் இந்த முடிவுக்கு ஒரு பிரஸ்டிஜ் காரணமும் இருக்கிறது. எங்கிருந்தோ வந்த ஆசின், நயனதாரா ஆகியோரெல்லாம் சொந்தக் குரலில் பேசும்போது பச்சைத் தமிழச்சியான நாம் மட்டும் டப்பிங் குரலில் பேசுவது நியாயமில்லையே என்ற எண்ணம்தான் திரிஷாவின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாம்.
அபியும், நானும் படத்தைத் தொடர்ந்து தான் நடித்து வரும் பிற படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசப் போவதாக அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளாராம் திரிஷா.
இருந்தாலும் திரிஷாவை சொந்தக் குரலில் பேச விடுவதா, அல்லது வழக்கம் போல டப்பிங் ஆர்ட்டிஸ்டான சவீதாவையே பேச விடுவதா என்பது குறித்து இயக்குநர் ராதா மோகன் இன்னும் முடிவு செய்யவில்லையாம். இருந்தாலும் திரிஷாவையே அவர் டப்பிங் பேச வைக்கக் கூடும் என்று தெரிகிறது.
திரிஷாவின் சொந்தக் குரல் முடிவுக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட வேண்டுமானால், சம்பந்தப்பட்ட கலைஞர்கள் சொந்தக் குரலில் பேசியிருக்க வேண்டும், இரவல் குரலில் பேசியிருந்தால் விருது கிடைக்காது.
அபியும் நானும் படத்தில் தனது கேரக்டருக்கு தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று திரிஷா எதிர்பார்ப்பதால்தான் சொந்தக் குரலில் பேச முடிவு செய்துள்ளதாக அந்த இன்னொரு தகவல் கூறுகிறது.
எப்படியோ, தனக்காக தானே பேசப் போகிறார் திரிஷா, அந்த வரைக்கும் சந்தோஷம்தானே!
சந்தோஷத்தில் தமன்னா!

கல்லூரி படத்தில் தனது நடிப்பு சிறப்பாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிவதாலும், படத்தின் ஓபனிங் சிறப்பாக இருப்பதாலும் நாயகி தமன்னா படு சந்தோஷமாக இருக்கிறார்.
கேடி படத்தில் அறிமுகமான தமன்னா அதன் பிறகு வியாபாரி உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்தார். நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்தார். ஆனால் தமிழில் அவருக்கு சரியான பிரேக்தான் கிடைக்கவில்லை.
கிளாமராக நடிக்கத் தயாராக இருந்தும் கூட அவருக்கு சரியான வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை. மாறாக தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வந்ததால் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார். அப்படியே தமிழிலும் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில்தான் ஷங்கரின் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள கல்லூரி படத்தின் நாயகி வாய்ப்பு தமன்னாவுக்கு வந்தது.
இப்போது கல்லூரி ஒரு வழியாக தியேட்டர்களுக்கு வந்து விட்டது. படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாம்,. குறிப்பாக தமன்னாவின் நடிப்பு அபாரம் என்ற பேச்சும் கிளம்பியுள்ளது. இதனால் தமன்னா சந்தோஷமாக உள்ளார்.
பட்டணத்து கல்லூரி மாணவி ஷோபனாவாக இப்படத்தில் வருகிறார் தமன்னா. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு சிறிய ஊருக்கு வரும் அவர் சந்திக்கும் நிகழ்வுகள்தான் படத்தின் கதை. தமன்னாவின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக படத்தைப் பார்த்த பத்திரிக்கையாளர்கள் புகழாரம் சூட்டி விடவே தமன்னா குஷியாகி விட்டார்.
இப்போது தமன்னாவைத் தேடி பட வாய்ப்புகள் ஓடி வர ஆரம்பித்துள்ளதாம். குறிப்பாக இரண்டு பெரிய நிறுவனங்கள் தமன்னாவை தங்களது படங்களில் புக் செய்துள்ளனவாம்.
அதில் ஒன்று ஏவி.எம்.மின் படம். சூர்யாவுக்கு ஜோடியாக இதில் நடிக்கிறார் தமன்னா. படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த். இந்த செய்தியை ஏற்கனவே சொல்லி விட்டோம்.
அடுத்த படத்தை தயாரிக்கப் போவது ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இதில் பாய்ஸ் நாயகன் சித்தார்த் நயாகனாக நடிக்கவுள்ளார்.
தனக்கு வந்த இந்தப் புது வாழ்வு குறித்து தமன்னா கூறுகையில், பாலாஜி சக்திவேல் சாருக்கு நான் பெரிய நன்றியைச் சொல்ல வேண்டும். கல்லூரி எனக்கு மிகப் பெரிய பெருமையைக் கொடுத்துள்ளது. நல்ல அறிமுகமாக இது அமைந்துள்ளது.
இப்படத்தில் நடித்தது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. நிறையக் கற்றுக் கொண்டேன். புதுப் பட வாய்ப்புகள் நிறைய வருகின்றன. ஆனால் அவசரப்பட்டு எதையும் ஒத்துக் கொள்ள விரும்பவில்லை. இப்போதைக்கு தமிழில் 2 படங்களில் மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளேன். தெலுங்கில் இரண்டு படங்கள் உள்ளன என்றார் தமன்னா.
லஞ்ச வழக்கில் நடிகர் சரவணனின் தந்தை சிறையில் அடைப்ப
சேலம்: லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சரவணனின் தந்தை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பருத்தி வீரன், நந்தா உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் சரவணன். இவருடைய தந்தை வீரமுத்து (70). சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்று விட்டார்.
கடந்த 1991ம் ஆண்டு சேலம், மெச்சேரி அருகேயுள்ள மனோரஞ்சிதம், சேசையா ஆகியோருக்கிடையே ஏற்பட்ட நிலத்தகராறில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த விவகாரம் குறித்து மனோரஞ்சிதம் மெச்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அப்போது மெச்சேரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த வீரமுத்து இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மனோரஞ்சிதத்திடம் ரூ.1,000 லஞ்சமாக கேட்டுள்ளார். மனோரஞ்சிதம் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
இதனையடுத்து லஞ்சம் வாங்கும்போது வீரமுத்துவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் கடந்த 2000ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி சேலம் நீதிமன்றம் வீரமுத்துவுக்கு 1 வருடம் சிறை தண்டனை விதித்தது.
தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வீரமுத்து மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இதனையடுத்து வீரமுத்து கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இதனால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் சேலம் தலைமை நீதித்துறை நடுவர் இளையராணி முன்னிலையில் சரணடைந்த அவர், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பருத்தி வீரன், நந்தா உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் சரவணன். இவருடைய தந்தை வீரமுத்து (70). சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்று விட்டார்.
கடந்த 1991ம் ஆண்டு சேலம், மெச்சேரி அருகேயுள்ள மனோரஞ்சிதம், சேசையா ஆகியோருக்கிடையே ஏற்பட்ட நிலத்தகராறில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த விவகாரம் குறித்து மனோரஞ்சிதம் மெச்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அப்போது மெச்சேரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த வீரமுத்து இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மனோரஞ்சிதத்திடம் ரூ.1,000 லஞ்சமாக கேட்டுள்ளார். மனோரஞ்சிதம் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
இதனையடுத்து லஞ்சம் வாங்கும்போது வீரமுத்துவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் கடந்த 2000ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி சேலம் நீதிமன்றம் வீரமுத்துவுக்கு 1 வருடம் சிறை தண்டனை விதித்தது.
தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வீரமுத்து மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இதனையடுத்து வீரமுத்து கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இதனால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் சேலம் தலைமை நீதித்துறை நடுவர் இளையராணி முன்னிலையில் சரணடைந்த அவர், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
குவைத்திலிருந்து சானா...!

சிம்பு சிலம்பவுள்ள சிலம்பாட்டம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐக்கிய அரபு தேசத்திலிருந்து அழகுக் குதிரை சானா கான் கோலிவுட்டுக்கு வருகிறார்.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் சிலம்பாட்டம். இதில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். கேமராமேன் சரவணன் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். வருகிற 7ம் தேதி இப்படம் தொடங்குகிறது. லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இது 25வது படம்.
இப்படத்தில் முதலில் சினேகா நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்டது. பின்னர் இவர் அந்த சினேகா இல்லை, சினேகா உல்லல் என்று இன்னொரு பேச்சு கிளம்பியது. பிறகு இருவருமே நடிக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.
தற்போது இருவருமே படத்தில் இல்லையாம். மாறாக, குவைத்தைச் ேசர்ந்த அழகு மாடல் சானா கான் நாயகியாக நடிக்கவுள்ளார்.
பார்க்க, நம்ம ஊர் பொண்ணு போல படு க்யூட்டாக இருக்கிறார் சானா கான். வசிப்பது குவைத்தாக இருந்தாலும், பிறந்தது மும்பையாம். பேஷன் டிசைனிங்கிலும், மாடலிங்கிலும் படு பிசியாக இருக்கும் சானா கானை கோலிவுட்டுக்குக் கூட்டி வருகிறார்கள் சிம்பு படம் மூலமாக.
வெள்ளிக்கிழமை சிலம்பாட்டம் படப்பிடிப்பு தொடங்கியது. பாவாடை, தாவணியில் அச்சு அசல் தமிழ்ப் பெண் போல அம்சமாக தோன்றி நடித்தார் சானா.
முதல் சீனை முடித்து விட்டு வந்த சானா நம்மிடம் பேசுகையில், எனது பெயரே சானா கான்தான். இந்தப் பெயரை படத்துக்காக மாற்ற விருப்பமில்லை. சானா கான் என்ற பெயர் ஏற்கனவே ரொம்ப பாப்புலரான பெயர்தான் என்பதால் மாற்ற விரும்பவில்லை.
குவைத்திலும், மும்பையிலும் 30 விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன். ஒரு மாடலாக, நான் சென்னைக்கு புதியவள் இல்லை. ஆனால் ஒரு சினிமா நடிகையாக இப்போதுதான் சென்னைக்கு வந்துள்ளேன். தமிழ்ப் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது.
சவாலுக்குரிய, கிளாமரான வேடங்களில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். கிளாமருக்கும், செக்ஸியாக தோன்றுவதற்கும் என்ன அளவுகோல் என்று எனக்குத் தெரியவில்லை. கதைக்குத் தேவைப்பட்டால் கண்டிப்பாக கிளாமர் காட்டி நடிக்க யோசிக்க மாட்ேடன் (அபிராமி, அபிராமி!)
இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் முன்பு சிம்புவை சந்தித்தேன். ரொம்ப எனர்ஜடிக்கான கிரியேட்டர் அவர். சுவாரஸ்யமான மனிதர். சென்னைக்கு வருவதற்கு முன்பு அவருடைய மன்மதன், வல்லவன் ஆகிய படங்களைப் பார்த்தேன்.
சிம்புவின் கிராமத்துக் காதலியாக நான் இப்படத்தில் நடிக்கிறேன். ரொம்ப க்யூட்டான, அனைவரும் விரும்பக் கூடிய வகையில் எனது கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனது வாழ்நாளிலேயே நான் இப்போதுதான் பாவாடை, தாவணி காஸ்ட்யூமையே அணிகிறேன். இந்த காஸ்ட்யூம் எனக்கு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது, எனது லுக்கையே மாற்றி விட்டது என்று அழகுப் புன்னகையுடன் கூறுகிறார் சானா.
இப்படத்தில் அப்பாவி இளைஞன் வேடத்தில் சிம்பு நடிக்கவுள்ளாராம். மன்மதன் படத்தில் வந்த அப்பாவி இளைஞன் போன்ற வேடமாம் இது. கோவில் பூசாரியாக வருகிறாராம் சிம்பு. சமய சந்தர்ப்பம் காரணமாக சட்டத்தைக் கையில் எடுக்க நேரிடுகிறதாம்.
தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள கோவில் நகரங்களில் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கவுள்ளது. படத்தில் லொள்ளு சபா சந்தானம், கஞ்சா கருப்பு, கருணாஸ் ஆகியோரும் இருக்கிறார்கள். தினா இசையமைக்கிறார்.
இந்த ஆண்டு சிம்புவின் படம் எதுவும் திரைக்கு வரவில்லை. கடைசியாக வந்த படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸான வல்லவன். தற்போது காளை மற்றும் கெட்டவன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் சிம்பு. இதில் கெட்டவன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காளை அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் திரைக்கு வரக் கூடும்.
Sunday, December 2, 2007
Friday, November 30, 2007
கதாசியர்கள் ஸ்டிரைக்-ஸ்தம்பிக்கும் ஹாலிவுட

ஹாலிவுட்டில் திரைக்கதை எழுத்தாளர்கள் கடந்த இரு மாதங்களாக வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளதால் பல திரைப்படத் தயாரிப்புப் பணிகளும், தொலைக்காட்சி தொடர் தயாரிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் பல தொலைக்காட்சிகளின் சீரியல்கள் (நம் ஊர் மெகா சீரியல்கள் மாதிரி) நிறுத்தப்பட்டு, பழைய தொடர்களை தூசி தட்டி ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர்.
இந்த ஸ்டிரைக்கு காரணமே இன்டர்நெட் தான். தாங்கள் எழுதும் படங்கள், சீரியல்களை இன்டர்நெட்டில் விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் தங்களுக்கும் லாபம் வேண்டும் என கொடி பிடித்துள்ளனர் இந்த எழுத்தாளர்கள். அதே போல டிவிடி விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்திலும் பங்கு கேட்கின்றனர்.
ஆனால், இன்டர்நெட் மூலம் படங்களை விற்று பணம் சம்பாதிப்பதில் பல சிக்கல்களை சந்தித்து வரும் ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்களும், தொலைக்காட்சி நிர்வாகங்களும் எழுத்தாளர்கள் கேட்கும் தொகையை தர தயாராக இல்லை.
இவர்கள் கேட்கும் ெதாகை இன்டர்நெட் மூலம் கிடைக்கும் லாபத்தை விட அதிகமாக உள்ளதாம். இதனால் பேசாமல் நெட்டில் படங்கள், சீரியல்களை விற்பதையே நிறுத்திவிடலாமா என்று கூட யோசிக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.
இந்த ஸ்டிரைக்கால் படத் தயாரிப்பு, மெகா சீரியல்கள் தவிர டாக் ஷோக்கள் தயாரிப்பு கூட பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய தொடர்களை போட்டு நேரத்தை ஓட்ட வேண்டிய நிலைக்கு பல தொலைக்காட்சி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
நம் ஊராக இருந்தால் டைட்டிலை மட்டும் மாற்றி பழசையே புதிய தொடராகக் காட்டி விடுவார்கள்.
என் வாழ்க்கையைக் கெடுக்கிறார்கள் .. குஷ்பு குமுறல

சிலர் என்னையே கண்காணித்துக் கொண்டு, எனது அமைதியான வாழ்க்கையைக் கெடுக்கும் நோக்கில் நடந்து கொள்கிறார்கள். என் மீதான வழக்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. சில வேலையில்லாதவர்களின் வேலை இது என்று குஷ்பு கடுப்புடன் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த வல்லமை தாராயோ படத் தொடக்க விழாவின்போது செருப்புக் காலுடன், கால் மேல் கால் போட்டவாறு, முப்பெரும் தேவியர் சிலைகள் முன்பு அமர்ந்திருந்த குஷ்புவால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் குருமூர்த்தி என்பவர் கும்பகோணம் நீதிமன்றத்தில், குஷ்பு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டார். முப்பெரும் தேவியரை அவமதித்து விட்டார் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து குஷ்புவிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது கேலிக் கூத்தாக உள்ளது. குறிப்பிட்ட சிலர் என்னையே தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுள்ளனர். எனது அமைதியான வாழ்க்கையைக் கெடுக்க முயலுகிறார்கள்.
இந்து கடவுள்களை நான் அவமதித்து விட்டதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. இது சில வேலையில்லாதவர்களின் வேலையாகும்.
உண்மையில், நான் சம்பவ நாளன்று சிலைகளுக்கு 4 அல்லது 5 அடி தொலைவில்தான் அமர்ந்திருந்தேன்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் அதை சந்திக்க நான் தயார்.
இந்துக்களின் உணர்வுகளை நான் ஒருபோதும் புண்படுத்தியுள்ளது. இந்துக் கடவுள்களையும் நான் அவமதிக்கவில்லை. உண்மையில் நான் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்து மத சம்பிரதாயங்களைத்தான் பின்பற்றி வருகிறேன். இந்துப் பெண்ணாகத்தான் குடும்பம் நடத்தி வருகிறேன். இந்து மதத்தின் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்றார் குஷ்பு.
இதற்கிடையே, குஷ்புவின் வீட்டுக்கு ஏராளமான பத்திரிக்கையாளர்களும், டிவி நிருபர்களும் சென்று கருத்து கேட்க முயன்றனர். ஆனால் குஷ்பு யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்பட்டதால் அவர்கள் திரும்பி விட்டனர்.
கடவுள் வர்ராரு!

ஒரு வழியாக கடவுளை கண்ணில் காட்ட முடிவு செய்து விட்டார் இயக்குநர் பாலா. பல மாதங்களாக அவர் இயக்கி வந்த நான் கடவுள், ஜனவரி 26ம் தேதி திரைக்கு வருகிறதாம்.
பிதாமகனுக்குப் பிறகு பெரிய இடைவெளி விட்ட பாலா, அடுத்துத் தொடங்கிய படம் நான் கடவுள். ஆரம்பத்தில் அஜீத் நடிப்பதாக இருந்தது. ஆனால் டெர்ம்ஸ் சரிப்பட்டு வராததால் அஜீத்தை தூக்கி விட்டு ஆர்யாவை நாயகனாக்கினார். பின்னர் ஹீரோயின் சரிப்பட்டு வரவில்லை என்று பலமுறை பல நாயகிகளை மாற்றினார். இறுதியில் பூஜா செட்டிலானார்.
இதையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்போது கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். இறுதிக் கட்ட வேலைகள் நட்து கொண்டுள்ளதாம்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நான் கடவுள் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்ைத ஆரம்பத்தில் தயாரித்து வந்த தேனப்பன் விலகிக் கொண்டார். பிறகு பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், ஸ்ரீவரி சீனிவாசன் இப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றார்.
படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து வருவதால், பட ரிலீஸ் தேதி குறித்து பாலா பேசத் தொடங்கியுள்ளார். ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று படம் திரைக்கு வரும் என்று பாலா கூறியுள்ளார்.
பாலாவின் மனம் கவர்ந்த இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள நான் கடவுளில் ஆர்யா வித்தியாசமான வேடம் ஏற்று நடித்துள்ளார். நாயகி பூஜாவுக்கும் படு வித்தியாசமான கேரக்டர்தான்.
கடவுளை தரிசிக்க தயாராவோம்!
Thursday, November 29, 2007
ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் -முதன்முதலாக வாங்கிய சினிமா நிறுவனம்!

தமிழ்சினிமாவில் வேறெந்த நிறுவனத்திற்கும் கிடைக்காத பெருமை இன்சைட் மீடியாவுக்கு கிடைத்திருக்கிறது. ஐ.எஸ்.ஓ 90001-2000 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை சென்னைக்கே வந்து இன்சைட் மீடியாவின் உரிமையாளர் நாக்.ரவியிடம் வழங்கினார் ஐ.எஸ்.ஓ நிறுவன தலைவர் ஃபிரடரிக்.
இதற்கு முன் பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்தும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத இந்த சான்றிதழ் உங்களுக்கு மட்டும் கிடைத்தது எப்படி?. இந்த சான்றிதழ் வாங்குவதற்கு ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன. அலுவலக நிர்வாகம் தொடங்கி, வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்துதான் இந்த சான்றிதழை கொடுப்பார்கள். சுமார் 8000 பக்கங்களில் தயாரிக்கப்பட்ட எங்கள் நிறுவனத்தை பற்றிய விபரங்களை பக்கம் பக்கமாக ஆராய்ந்து, அதிலிருந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி, திருப்தி அடைந்த பிறகுதான் இந்த சான்றிதழே வழங்கப்பட்டுள்ளது என்றார் ரவி.
சான்றிதழ் வழங்கிய கையோடு இன்சைட் மீடியாவின் பங்களிப்பில் வெளிவந்திருக்கும் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தையும் பார்த்தார் ஃபிரடரிக். நல்ல படத்தைதான் வாங்கியிருக்கிறீர்கள் என்ற பாராட்டுகளையும் வழங்கிவிட்டு ஃபிளைட் ஏறினார் அவர்!
எஸ்.ஜே.சூர்யாவின் வில் பவர்!

ஒருகாலத்தில் இவர் நடித்த படங்களின் சில ஏரியாக்கள் ரஜினி படத்தின் அளவுக்கு விலை போனது. ம்ம்ம்... அதெல்லாம் அந்த காலம் என்றுதான் கவலைப்பட வேண்டியிருக்கிறது எஸ்.ஜே.சூர்யாவை நினைத்தால். தொடர் தோல்விகள் சூர்யாவுக்கு எதை எதை கற்றுத்தர வேண்டுமோ, அதையெல்லாம் கற்றுக் கொடுத்திருக்கிறது. இனிமேல் நான் ஹீரேவாக நடிப்பேன். அதை நானேதான் இயக்குவேன். அப்படி அமையவில்லை என்றால், வேறு ஹீரோக்களை நடிக்க வைத்து அந்த படங்களை இயக்குவதோடு நிறுத்திக் கொள்வேன். இதுதான் என் திருத்தப்பட்ட கொள்கை என்கிறார் விரக்தி ப்ளஸ் நம்பிக்கையுடன்.
தற்போது இவர் நடித்து வரும் வில் படத்தில் ஊனமுற்றவராக நடிக்கிறார். இதுவரை இருந்த டபுள் மீனிங் சூர்யா இந்த படத்தில் இல்லை. அதுமட்டுமல்ல, எனக்கென்று இதுவரை உருவாகியிருந்த இமேஜை இந்த படம் நிச்சயம் அழிக்கும் என்கிறார். இந்த படத்தின் வெற்றி எனக்கு ஆக்ஷன் ஹீரோ இமேஜை பெற்றுத்தரும். அதன்பின் நான் பெரிய ஹீரோ யாரையாவது வைத்து இயக்க வேண்டும் என்று நினைத்திருந்த புலி படத்தில் நானே நடிப்பேன். அதற்கு முன்னோட்டமாக என்னுடைய வில் இருக்கும் என்கிறார்.
வில் பவர் என்பது இதுதானோ?
கண்ணாவுக்கு பிரகாஷ்ராஜ் செக்!

பத்து நிமிடத்தில் கதை சொல்லுங்க என்றார் பிரகாஷ்ராஜ். நான் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே இந்த படத்திலே நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அவர் சம்மதம் கொடுத்த அந்த நேரம், நான் கதை சொல்ல ஆரம்பித்த ஒன்பதாவது நிமிடம்! இப்படி ஹீரோ ஒருவருக்கு கதை சொன்ன விஷயத்தையே ஒரு பில்டப்போடு சொல்ல தெரிந்த கண்ணா படத்தின் இயக்குனர் ஆனந்துக்கு, பிரகாஷ்ராஜின் கால்ஷீட்டை வாங்கி படத்தை விரைவில் முடிப்பது மட்டும் அவ்வளவு எளிதாக இல்லை. பயங்கர ஜவ்வ்வ்வ்வு!
கண்ணா படம் துவங்கி இரண்டு வருடங்கள் ஆகிறது. இரண்டு நாள், ஒரு நாள் என்று பிரகாஷ்ராஜிடம் கால்ஷீட் வாங்கிதான் படத்தை முடித்திருக்கிறார் ஆனந்த். டப்பிங் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள். இங்கேதான் பிரச்சனையே ஆரம்பம் ஆகியிருக்கிறது. அபியும் நானும் என்ற சொந்த படத்தை எடுத்து வருகிறார் பிரகாஷ். அதில் த்ரிஷாவுக்கு அப்பாவாக நடித்து வருகிறார். கண்ணாவில் ஷீலாவுக்கு அப்பாவாம். இரண்டு கதைகளின் மையக்கருத்தும் கிட்டதட்ட ஒன்றாகவே இருப்பதால், கண்ணா படத்தின் கதையை மாற்றி சில காட்சிகள் எடுங்கள். அப்படி செய்தால்தான் டப்பிங் பேசுவேன் என்கிறாராம் பிரகாஷ்.
விஷயத்தை இயக்குனர்கள் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் பேசிக் கொண்டிருக்கின்றன. விரைவில் சுமூக முடிவு கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் ஆனந்த்.
நான் ஒன்றும் கவர்ச்சி நடிகை அல்ல..

நான் ஒன்றும் கவர்ச்சி நடிகை அல்ல, அப்படி ஒரு இமேஜை உருவாக்க இங்கே சிலர் முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் திவ்யா. அவர் கைகாட்டுகிற திசை கே.எஸ்.அதியமான் நிற்கிற திசையாக இருப்பதுதான் வில்லங்கம்!
தூண்டில் படத்திற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்தார்கள். அப்போது தன்னுடைய லேப்-டாப்பை காணவில்லை என்று குமுறிய திவ்யா, அதற்கான பணத்தை தயாரிப்பாளர் கொடுத்தால்தான் மேக்கப்பே போடுவேன் என்று அறையை விட்டு வெளியே வர மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் திவ்யாவின் அஜாக்கிரதைக்கு தன் பணத்தை அழுதார் தயாரிப்பாளர். ஒருவழியாக படத்தை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியதும் தூண்டில் பட இயக்குனர் அதியமான் செய்த முதல் வேலை, பாடல் காட்சிகளில் எடுக்கப்பட்ட திவ்யாவின் கவர்ச்சி படங்களை நெட்டில் உலவ விட்டதுதான்.
இதனால்தான் தனக்கு கவர்ச்சி இமேஜ் வந்துவிட்டதென்று கருதுகிறார் திவ்யா. பொல்லாதவன் படத்தில் கூட, கூடுதல் கவர்ச்சிக்கு நோ சொல்லிவிட்டாராம். தீபாவளிக்கு வந்த படங்களில் வெற்றிப்பட லிஸ்டில் பொல்லாதவனுக்கும் இடம் கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறார் திவ்ஸ். அடுத்தடுத்த படங்களில் நல்ல நடிகை என்ற பெயர் வாங்க வேண்டும். வெறும் கவர்ச்சி காட்டுவார் என்று யாராவது வந்தால், இப்பவே சொல்லிட்டேன்... வராதீங்க! கட் அண் ரைட்டாக பேசுகிற திவ்யா, தானே டப்பிங் பேசுகிற அளவுக்கு தமிழ் பேசுகிறார் என்பதுதான் கூடுதல் தகவல்!
ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் சிறை-மாணவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டும், அதை அவர்கள் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கவும் சமீபத்தில் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் உபயோகிக்க தடை விதித்தது தமிழக அரசு.
ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்புவதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் தான் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. இந் நிலையில் சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் கூறுகையில்,
வகுப்பறையில் மாணவர்கள் செல்போன்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் படையில் போலீஸ் துறையை சேர்ந்தவர்களும், ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த நேரத்திலும் பள்ளியின் எந்த வகுப்பறைக்குள்ளேயும் சென்று சோதனை நடத்த உரிமை உண்டு.
சோதனையின் போது மாணவர்கள் செல்போன்கள் வைத்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் செல்போன்களில் ஆபாச படங்கள் ஏதும் இருந்தால் அந்த மாணவர்களுக்கு 3 மாதங்கள வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு பள்ளி நிர்வாகத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மாணவ-மாணவியர்கள் மைனர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பள்ளி கல்வித்துறையிடம் அனுமதி பெறப்படும் என்றார்.
மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டும், அதை அவர்கள் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கவும் சமீபத்தில் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் உபயோகிக்க தடை விதித்தது தமிழக அரசு.
ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்புவதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் தான் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. இந் நிலையில் சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் கூறுகையில்,
வகுப்பறையில் மாணவர்கள் செல்போன்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் படையில் போலீஸ் துறையை சேர்ந்தவர்களும், ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த நேரத்திலும் பள்ளியின் எந்த வகுப்பறைக்குள்ளேயும் சென்று சோதனை நடத்த உரிமை உண்டு.
சோதனையின் போது மாணவர்கள் செல்போன்கள் வைத்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் செல்போன்களில் ஆபாச படங்கள் ஏதும் இருந்தால் அந்த மாணவர்களுக்கு 3 மாதங்கள வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு பள்ளி நிர்வாகத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மாணவ-மாணவியர்கள் மைனர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பள்ளி கல்வித்துறையிடம் அனுமதி பெறப்படும் என்றார்.
ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் சிறை-மாணவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டும், அதை அவர்கள் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கவும் சமீபத்தில் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் உபயோகிக்க தடை விதித்தது தமிழக அரசு.
ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்புவதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் தான் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. இந் நிலையில் சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் கூறுகையில்,
வகுப்பறையில் மாணவர்கள் செல்போன்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் படையில் போலீஸ் துறையை சேர்ந்தவர்களும், ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த நேரத்திலும் பள்ளியின் எந்த வகுப்பறைக்குள்ளேயும் சென்று சோதனை நடத்த உரிமை உண்டு.
சோதனையின் போது மாணவர்கள் செல்போன்கள் வைத்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் செல்போன்களில் ஆபாச படங்கள் ஏதும் இருந்தால் அந்த மாணவர்களுக்கு 3 மாதங்கள வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு பள்ளி நிர்வாகத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மாணவ-மாணவியர்கள் மைனர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பள்ளி கல்வித்துறையிடம் அனுமதி பெறப்படும் என்றார்.
மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டும், அதை அவர்கள் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கவும் சமீபத்தில் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் உபயோகிக்க தடை விதித்தது தமிழக அரசு.
ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்புவதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் தான் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. இந் நிலையில் சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் கூறுகையில்,
வகுப்பறையில் மாணவர்கள் செல்போன்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் படையில் போலீஸ் துறையை சேர்ந்தவர்களும், ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த நேரத்திலும் பள்ளியின் எந்த வகுப்பறைக்குள்ளேயும் சென்று சோதனை நடத்த உரிமை உண்டு.
சோதனையின் போது மாணவர்கள் செல்போன்கள் வைத்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் செல்போன்களில் ஆபாச படங்கள் ஏதும் இருந்தால் அந்த மாணவர்களுக்கு 3 மாதங்கள வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு பள்ளி நிர்வாகத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மாணவ-மாணவியர்கள் மைனர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பள்ளி கல்வித்துறையிடம் அனுமதி பெறப்படும் என்றார்.
கருணாநிதி தலையிடக் கூடாது-மலேசிய அமைச்சர

கோலாலம்பூர் & சென்னை: மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி தலையிடக்கூடாது என்று மலேசிய நாட்டு நீதித்துறை அமைச்சர் நஸ்ரி அஜீஸ் கூறியுள்ளார்.
மலேசிய தமிழர்களின் நலன் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந் நிலையில் மலேசிய அமைச்சர் அஜீஸ் கூறுகையில்,
மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கருணாநிதி எதுவும் பேசாமல் கண்டிப்பாக விலகி இருப்பது தான் நல்லது. இந்த விவகாரத்தில் தலையிட இது ஒன்றும் தமிழ்நாடு கிடையாது, இது மலேசியா என்பதை அவர் முதலில் தெரிந்து கொள்ளட்டும்.
மலேசியாவில் நடந்த விவகாரம் குறித்து கூச்சல் போட்டுக் கொண்டு நாடாளுமன்றத்தில் திமுக கேபினட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளார்கள்.
மலேசியாவின் நடவடிக்கை எப்போதும் கடுமையாகத் தான் இருக்கும். அதற்காக எங்கள் நாட்டைப் பற்றி யார் கடுமையாக பேசினாலும் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். நாங்கள் எங்களுடைய பணியை தான் செய்துள்ளோம்.
தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை முதலில் அவர் கவனிக்கட்டும், மலேசியா பற்றி அவர் கவலைப்பட வேண்டாம் என்றார்.
பதிலளிக்க கருணாநிதி மறுப்பு:
மலேசிய அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்க முதல்வர் கருணாநிதி மறுத்துவிட்டார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், இதற்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை. மலேசிய தமிழர்களின் இன்னல்களை பிரதமரின் கவனத்துக்கு ெகாண்டு போவது என் கடமை. அதை இந்த மாநில மக்களின் சார்பில் நான் செய்தேன். மற்றபடி அந்த நாட்டு அமைச்சருக்கு பதில் சொல்லி பிரச்சனையாக்க விரும்பவில்லை.
மலேசிய அரசுக்கு எதிராகக் கூட நான் ஏதும் சொல்லவில்லை. அந் நாட்டு தமிழர் நலனைக் காக்க வேண்டும் என்று தான் சொன்னேன் என்றார்.
'முக்யமந்திரி'க்கு திவ்யா நோ

கன்னப் படம் ஒன்றில் முதல் மந்திரியின் காதலியாக நடிக்கும் வாய்ப்பை குத்து ரம்யா என்கிற திவ்யா மறுத்து விட்டாராம்.
கர்நாடகத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ரவி பெலகரே. இவர் இப்போது இயக்குநராகி விட்டார். இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகும் படம் 'முக்யமந்திரி ஐ லவ் யூ' (அதாகப்பட்டது, முதல்வரே நான் உங்களை லவ் பண்றேன்).
கர்நாடக அரசியல் சூழ்நிலைகள், கோமாளித்தனங்கள், சித்து விளையாட்டுக்களை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதையை பின்னியுள்ளாராம் ரவி. இவர்தான் முதல்வர் கேரக்டரில் நடிக்கப் போகிறார்.
சமீபத்தில் பூஜை போடப்பட்ட இந்தப் படத்தில் முதல்வரின் காதலி அனிதா என்ற கேரக்டர் ஒன்று உள்ளது. அதில் நடிக்குமாறு குத்து ரம்யாவை அணுகியுள்ளார் பெலகரே. ஆனால் கதையைக் கேட்டதுமே 'பேடா சாமீ, பேடா' (வேண்டாம்) என்று மறுத்து விட்டாராம், முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியான ரம்யா.
இந்தப் படம் குறித்து ரம்யா கூறுகையில், அரசியல் சப்ஜெக்ட்டில் நடித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.
படங்களைத் தேர்வு செய்வதில் நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். பொல்லாதவன் போன்ற நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட (அய் ஐஸ்.. ஐஸ்..) படங்களில்தான் நடிப்பேன்.
முக்யமந்திரி ஐ லவ் யூ படத்தில் நடிக்க மறுத்ததால், நான் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன், கன்னடத்தைப் புறக்கணிக்கிறேன் என்று சிலர் கதை கட்டி விட ஆரம்பித்துள்ளனர்.
அது தவறு. கன்னடத்தில் நான் இப்போது 2 படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்குப் படங்களில் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை., இனிமேல் தெலுங்கில் நான் நடிக்கவே மாட்டேன் என்றார் ரம்யா.
வருகிறது சிவாஜி வெள்ளி விழா

சிவாஜி 175வது நாளை எட்டிக் கொண்டிருப்பதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், சிவாஜி படக் குழுவினரும் வெள்ளி விழாக் கொண்டாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்திய சினிமா வரலாற்றில் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் படம் சிவாஜி. உலகெங்கும் 135 தியேட்டர்களில் 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 100 தியேட்டர்களில் 100 நாட்களைத் தாண்டிய முதல் படம் சிவாஜி. தற்போது 175 நாட்களை சிவாஜி தொடவுள்ளது.
இப்படத்தின் 100வது நாள் விழாவை ஏவி.எம். நிறுவனம் பெரிய அளவில் கொண்டாடவில்லை. மிகப் பிரமாண்ட வெற்றி பெற்ற படத்தின் நூறாவது நாள் விழாவை ஏன் கொண்டாடவில்லை என்று ஏவி.எம். நிறுவனத்திடம் மீடியாக்கள் கேட்டபோது, 175 வது நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
வழக்கமாக தங்களது படங்களின் வெள்ளி விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடுவது ஏவி.எம். நிறுவனத்தின் வழக்கம். அந்த நிறுவனத்தின் மிகப் பெரிய வெற்றிப் படமான சிவாஜியின் வெள்ளி விழாவையும் தற்போது பெரிய அளவில் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வார இறுதியில் சிவாஜி 175 நாட்களைத் தொடுகிறது. இதையடுத்து சிறப்பான விழா எடுத்து சிவாஜி படக் குழுவினரை கெளரவிக்கவும், பரிசளிக்கவும் ஏவி.எம். திட்டமிட்டுள்ளாம். இந்த விழாவை சிவாஜி படக் குழுவினர் தவிர ரஜினியும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளாராம்.
கடவுளை அவமதித்தேனா-குஷ்பு மறுப்பு

பார்த்திபன், சாயா சிங் ஜோடியாக நடிக்கும் வல்லமை தாராயோ படத்தின் தொடக்க விழா கடந்த 22ம் தேதி சென்னை தி.நகரில் நடந்தது. படத்தை இயக்கப் ேபாவது மதுமிதா.
இதில் எழுத்தாளர் சிவசங்கரி, திலகவதி ஐபிஎஸ், குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் அம்மனின் சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்தயின் சிலை அருக போடப்பட்ட நாற்காலி குஷ்புவுக்கு ஒதுக்கப்பட்டது. செருப்பு அணிந்து கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து விழாவை ரசித்தார் குஷ்பு.
இந் நிலையில் கடவுள் சிலையை அவமதிக்கும் வகையிலும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் குஷ்பு நடந்து கொண்டதாகக் கூறி கும்பகோணம் நீதிமன்றத்தில் இந்து முன்னணி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்து முன்னணியின் கும்பகோணம் நகர பொதுச் செயலாளர் ராம்நகர் குருமூர்த்தி அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 3ம் தேதி நடக்கவுள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை குஷ்பு மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,
கடவுளை நான் அவமதித்து விட்டதாக சொல்கிறார்கள். வல்லமை தாராயோ பட விழாவில் கடவுள்களை அவமதிக்கும் வகையிலோ யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலோ நான் நடந்து கொள்ளவில்லை என்று சுருக்கமாக கூறியுள்ளார்.
படத்தை இயக்கப் போகும் டைரக்டர் மதுமிதா கூறுகையில்,
பல வருடங்களாக சினிமா துறையில் இருப்பவர் குஷ்பு. அவர் இதுவரை எந்த கடவுளையும் அவமதித்ததில்லை. விழா மேடையில் நடந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்தது. அதை வேண்டுமென்றே பெரிதுபடுத்துகிறார்கள். யாரையும் புண்படுத்தும் நோக்கில் விழாவை நாங்கள் நடத்தவில்லை என்ற
மாதுரி படம் - ஹூசேனின் 'பல்க்' புக்கிங்!

முன்னாள் பாலிவுட் கனவு தேவதை மாதுரி தீக்ஷித் நீண்ட காலத்திற்குப் பிறகு நடித்து இன்று வெளியாகும் ஆஜா நாச்லே படத்தின் முதல் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுக்களையும் புக் செய்து விட்டாராம் மாதுரியின் தீவிர ரசிகரான பிரபல ஓவியர் எம்.எப். ஹூசேன்.
சில காலத்திற்கு முன்பு வரை பாலிவுட் ரசிகர்களை பைத்தியமாக்கிக் கொண்டிருந்தவர் மாதுரி தீக்ஷித். இவரது ஆட்டத்திற்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உலகெங்கும் இருந்தனர். மாதுரியின் ஹம் ஆப் கே ஹெய்ன் கோன் சூப்பர் டூப்பர் ஹிட் படமாகும்.
சில வருடங்களுக்கு முன்பு மாதுரி கல்யாணம் செய்து கொண்டு கணவருடன், அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். அவருக்கு அழகான ஒரு பையனும் இருக்கிறான்.
இந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் மாதுரி. ஆஜா நாச்லே என்ற படத்தில் மாதுரி திறமை காட்டியுள்ளார். இப்படத்திற்கு மாதுரி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சற்றும் தனது ஸ்டைல் குறையாமல் இப்படத்தில் நடித்துள்ளாராம் மாதுரி.
ஆஜா நாச்லே இந்தியா மற்றும் உலகெங்கிலும் இன்று ரிலீஸ் ஆகிறது.
இந்த நிலையில் மாதுரியின் தீவிர ரசிகர்களில் ஒருவரான ஓவியர் எம்.எப்.ஹூசேனின் ஆஜா நாச்லேயை மற்ற ரசிகர்களை விட ஒரு படி மேலே போய் படு ஆரவாரமாக வரவேற்கக் காத்துள்ளார்.
மாதுரியின் தீவிர ரசிகரான ஹூசேன், ஹம் ஆப்கே .. படத்தை 50க்கும் மேற்பட்ட முறை பார்த்து ரசித்தவர். வெறித்தனமான ரசிகரான ஹூசேன், மாதுரியை வைத்து ஏகப்பட்ட ஓவியங்களையும் தீட்டியுள்ளார். அவரை வைத்து கஜ காமினி என்ற படத்தையும் தயாரித்தார்.
இந்த நிலையில் ஆஜா நாச்லே படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ள ஹூசேன், துபாயில் இன்று வெளியாகும் இப்படத்தை, தானும், தனது முக்கிய நண்பர்களும் மட்டும் பார்ப்பதற்காக முதல் காட்சிக்கா அனைத்து டிக்கெட்டுக்களையும் வாங்கி விட்டாராம்.
தானும் மாதுரியும் இருக்கும் படத்தை வைத்து அழைப்பிதழையும் அடித்துள்ள ஹூசேன், அதை தனக்கு நெருக்கமான 193 பேருக்க மட்டும் கொடுத்து படம் பார்க்க வருமாறு அழைத்துள்ளாராம்.
இதைக் கேள்விப்பட்ட மாதுரி சந்தோஷப் பூரிப்பில் இருக்கிறாராம். எவ்வளவு பெரிய மனிதர் ஹூசேன், அவர் எனது படத்தின் டிக்கெட்டுக்களை வாங்கியிருப்பது பெருமையாக இருக்கிறது என்று கூறி வருகிறாராம் மாதுரி.
தாமதமாகும் தசாவதாரம்

படத்தில் இடம் பெறும் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால், திட்டமிட்டபடி பொங்கலுக்கு வராது என்று கூறப்படுகிறது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்துள்ள தசாவதாரத்தில் கலைஞானி கமல்ஹாசன் கலக்கலான 10 வேடங்களில் அசத்தியுள்ளார். அவருக்கு ஜோடியாக ஆசின், மல்லிகா ஷெராவத் உள்ளிட்டோர் திறமை காட்டியுள்ளனர்.
உலகத் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட் என இந்தியாவின் அனைத்துத் திரையுலகினரும் கூட தசாவதாரத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.
முதலில் இப்படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பட வேலைகள் முடியாததால் தீபாவளிக்குத் தள்ளிப் போடப்பட்டது. இருப்பினும் அதுவும் நடக்கவில்லை.
ஒவ்வொரு கேரக்டருக்கும் கமல் போட்ட மேக்கப் சில மணி நேரங்களே நீடிக்கும் என்பதால் ஒரு நாளைக்கு ஓரிரு காட்சிகளை மட்டுமே படமாக்க முடிந்ததால் இந்தத் தாமதம்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு தசாவதாரம் ரிலீஸாகும் என கமல்ஹாசனும், ஆஸ்கர் ரவிச்சந்திரனும் உறுதியாக அறிவித்தனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், பட வேலைகள் அனைத்தும் ஸ்மூத்தாக போய்க் கொண்டிருக்கின்றன. பொங்கலுக்குப் படம் வந்து விடும் என்று கூறியிருந்தார்.
ஆனால் இப்போது படம் மேலும் தாமதமாகும் என்று தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறியஉள்ளார். அனேகமாக பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று படம் வெளியாகக் கூடும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, படத்ைத பொங்கலுக்கு கொண்டு வரும் நோக்கில் படு தீவிரமாக அனைவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் படம் முழுக்க வரும் கிராபிக்ஸ் வேலைகள்தான் நீண்டு கொண்டிருக்கின்றன.
படத்ைத பக்காவாக கொடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் விரும்புகிறார், தீவிரமாகவும் இருக்கிறார். கலைநயத்துடனும், அதி நவீன தொழில்நுட்பத்தின் முழுப் பிரதிபலிப்பும் படத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை இந்தியாவிலேயே இதுவரை எந்தப் படத்திற்கும் செய்யாத வகையில் 12 பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களிடம் பிரித்துக் கொடுத்துள்ளோம். ஸ்பெஷல் எபக்ட்ஸ் சிறப்பாக வர வேண்டும் என்பற்காக, இதற்கு மட்டுமே இதுவரை ரூ. 12 கோடியை செலவழித்துள்ளோம்.
கிராபிக்ஸ் வேலைகள் முடிந்து விட்டால் ரிலீஸ் தேதியை அறிவித்து விடுவேன். பிப்ரவரி மாதம்தான் படத்தை ரிலீஸ் செய்ய சரியாக இருக்கும் என கருதுகிறேன். இதுகுறித்து கமல் சாருடனும் பேசி விட்டேன். அவருக்கும் அதில் சம்மதம்தான்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 1000 பிரிண்டுகள் போட தீர்மானித்துள்ளோம். மேலும் ஆங்கில சப் டைட்டிலுடன், உலகெங்கும் தசாவதாரம் திரையிடப்படும் என்றார் ரவிச்சந்திரன்.
பசிக்குது, சீக்கிரம் தாங்க!
மோகன்லாலும், குஷ்பு, சீதாவும்!


மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன், தமிழில் நாயகி அந்தஸ்திலிருந்து ஓய்வு பெற்று விட்ட முன்னாள் நாயகிகளான குஷ்பு, சீதா, மோஹினி ஆகியோர் சேர்ந்து நடிக்கவுள்ளனர். இளம் தலைமுறை நாயகி மீரா ஜாஸ்மின் ஹீரோயினாக நடிக்கிறார்.
மலையாளத்திலிருந்து தமிழுக்கு பல நாயகிகள் வந்து போவதைப் போல அவ்வப்போது தமிழிலிருந்தும் நாயகிகள், நடிகர், நடிகைகள் மலையாளத்தில் நடிப்பது வழக்கம்.
சில வருடங்களுக்கு முன்பு மம்முட்டியுடன் இணைந்து குஷ்பு கையொப்பு என்ற படத்தில் நடித்தார். அப்படத்திற்காக அவருக்கு கேரள அரசின் சிறந்த குணச்சித்திரை நடிகைக்கான விருதும் கிடைத்தது. அதன் பின்னர் மோகன்லாலுடன் அங்கிள் பன் என்ற படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்திற்குப் போகிறார் குஷ்பு. இம்முறையும் மோகன்லாலுடன்தான் அவர் ஜோடி போடுகிறார்.
இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். சத்யன் அந்திக்காடு இயக்கும் இப்படத்தில் குஷ்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் தவிர தமிழில் ஏற்கனவே ரிட்டயர்ட் ஆகி விட்ட சீதா, மோகினி ஆகியோரும் உள்ளனர்.
புதிதாக திருமணமாகும் தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் இப்படத்தின் கதை. அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கும் இப்படத்தில் முகேஷும் இருக்கிறார்.
ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கி மலையாளப் புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்கின்றனர்
விஜய்க்கு அன்புமணி பாராட்டு

திரைப்படங்களில், புகை பிடிப்பதை விட வேண்டும் என்று விஜய்க்கு தான் விடுத்த வேண்டுகோளை விஜய் ஏற்றுக் கொண்டதால், அவருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
ரஜினியைப் போலவே விஜய்யும் தனது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று சில தினங்ளுக்கு முன்பு அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். இதை விஜய்யும் ஏற்றுக் கொண்டு, இனிமேல் இதுபோன்ற காட்சிகள் இடம் பெறாது என்று உறுதியளித்தார்.
இதை வரவேற்றுள்ள அமைச்சர் அன்புமணி, புகை பிடிக்கும் பழக்கத்திற்கு எதிரான பிரசாரத்திலும் விஜய் தீவிரமாக பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் அன்புமணி, விஜய்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்புத் தம்பி விஜய்க்கு வணக்கம். எனது அன்பு வேண்டுகோளை ஏற்று தாங்கள் இனிமேல் புகை பிடிப்பது போல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று பேட்டி அளித்திருந்த செய்தியினை செய்தித்தாள் வழியாக அறிந்தேன்.
இதற்காக தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தினாலும், புகையிலையை உபயோகிப்பதாலும், பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் புற்றுநோய் முதலிய நோய்களால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.
மேலும் இருதய நோய், நீரிழிவு நோய், உடல் பருமன் நோய், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ், பெண் சிசுக் கலைப்பு ாகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண எனது அமைச்சகம் எடுத்து வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தாங்களும் இணைந்து செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார் அன்புமணி.
'கலவரப்படுத்திய' பிரிட்னி

லண்டனில் உள்ள ஹாலிவுட் செக்ஸ் ஸ்டோருக்கு வந்த கவர்ச்சிப் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பிற கஸ்டமர்கள் முன்பாக தனது பேண்டீஸைக் கழற்றிவிட்டு புதிய உடையை அணிந்து பார்த்து பரபரப்பை ஏற்படுத்தினார்.பிரபலமான அந்த ஹாலிவுட் செக்ஸ் ஸ்டோருக்கு வந்த பிரிட்னி, சில உடைகளை வாங்க வந்திருந்தார். ஒவ்வொரு உடையாகப் பார்த்துக் கொண்டே வந்த அவர், ஒரு பேண்டீஸைப் பார்த்தார்.
அது பிடித்துப் போகவே அதை அணிந்து பார்த்து பின்னர் வாங்க விரும்புவதாக கடை ஊழியரிடம் கூறினார். ஆனால் அதை கடை ஊழியர் ஏற்கவில்லை. அப்படியெல்லாம் அணிந்து பார்த்து வாங்க அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
இதனால் கடுப்பான பிரிட்னி, சடாரென அந்த ஊழியர் எதிர்பார்க்காத வகையில், தான் அணிந்திருந்த பேண்டீஸை கழற்றினார். பின்னர் சாவகாசமாக அங்கிருந்த ஆண்கள் அணியும் பெர்முடாஸை எடுத்து கடை ஊழியர்கள், மற்றும் கஸ்டமர்கள் முன்பாகவே போட்டுப் பார்த்தார்.
பிரிட்னியின் இந்த செயலால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். பின்னர் பிரிட்னி, தான் செலக்ட் செய்த பேண்டீஸை எடுத்துக் கொண்டு அதற்குரிய தொகையை தனது கிரெடிட் கார்டு மூலம் செலுத்தி விட்டு மின்னலென சென்று விட்டார்.
பிரிட்னியின் செயலால் அந்தக் கடையே சில நிமிடங்கள் பரபரப்பாகி விட்டது.
Wednesday, November 28, 2007
கமலுடன் மோதும் விக்ரம்

பொங்கல் திருநாளன்று வெளியாகும் கலைஞானி கமல்ஹாசனின் தசாவதாரத்துடன், சீயான் விக்ரமின் பீமா களம் காணவுள்ளது.
உலக நடிகர்களிலேயே முதல் முறையாக 10 வேடங்களில் கமல்ஹாசன் அசத்தும் தசாவதாரம் விருந்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்புக்குப் பிந்தைய நகாசு வேலைகளில் கமல்ஹாசன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு பொங்கலுக்குப் படம் திரைக்கு வருகிறது. படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. படப்பிடிப்பின்போதே, ரஜினிகாந்த், கமல்ஹாசனை சந்தித்து அவர் போட்டுள்ள கெட்டப்கள் குறித்து பார்த்து, கேட்டு அசந்து போய் கமலை பாராட்டியுள்ளார். முதல்வர் கருணாநிதியும் கமல்ஹாசனின் கெட்டப்களை கேட்டறிந்து கமலை பாராட்டியுள்ளார். விஜய்யும் கூட கமல்ஹாசைனை நேரில் சந்தித்து கெட்டப் குறித்து கேட்டு அதிசயித்துள்ளார்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் தசாவதாரத்துடன் விக்ரமின் பீமா மோத வருகிறது.
பீமா ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கலில் சிக்கி தொக்கி நிற்கும் படம். லிங்குச்சாமி இயக்க, ஏ.எம். ரத்னம் தயாரிக்க உருவாகியுள்ள பீமா, கடந்த ஆண்டு மே மாதம் தயாரிப்புக்கு வந்தது. ஆனால் நிதிப் பிரச்சினை காரணமாக படம் தட்டுத் தடுமாறி வளர்ந்து வந்தது. படம் வருமா, வராதா என்ற கேள்விக்குறியும் ஒரு கட்டத்தில் எழுந்தது.
இதனால் விரக்தியாகிப் போன விக்ரம், பீமாவை கிட்டத்தட்ட மறந்து விட்டு கந்தசாமிக்குப் போய் விட்டார்.
இந்த நிலையில், பீமா ரிலீஸுக்கு ரெடியாகி விட்டதாம். பொங்கல் பண்டிகையின்போது படத்தை திரைக்குக் கொண்டு வரவுள்ளனர்.
இதன் மூலம் கமலுடன் முதல் முறையாக மோத களத்தில் குதிக்கிறார் விக்ரம். பொங்கல் பண்டிகைக்கு வேறு யாருடைய படமும் வரவில்லை. இதனால் தசாவதாரமும், பீமாவும்தான் ரசிகர்களை மகிழ்விக்கப் போகும் பெரிய படங்கள்.
லிங்குச்சாமி, தனது பணிகளை முழுமையாக முடித்து விட்டார். படத்தின் முதல் பிரதியை திரையுலகப் பிரமுகர்களும் பார்த்துள்ளனர். அனைவரும் படம் நன்றாக வந்திருப்பதாகவும், சிறப்பாக வந்திருப்பதாகவும் பாராட்டியுள்ளனர்.
இதையடுத்து படத்தைத் திரைக்குக் கொண்டு வரவும், ஏ.எம்.ரத்னத்திற்கு உதவிக் கரம் நீட்டவும் பைனான்சியர்களும், விநியோகஸ்தர்களும் முன்வந்துள்ளனர். இதனால் ரத்னம் தெம்பாகியுள்ளார்.
இதே தெம்போடு அடுத்து விஜய்யை வைத்து, செல்வராகவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை தயாரிக்கப் போகிறாராம் ரத்னம்.
அடுத்தபடியாக விக்ரம், அஜீத், சிம்பு!

,ரஜின,விஜய்யைத் தொடர்ந்து, விக்ரம், சிம்பு, அஜீத் ஆகிய நடிகர்களும் தம் அடிக்கும் காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று பாகமவின் கிளை அமைப்புகளில் ஒன்றான பசுமைத் தாயகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தம் அடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று முன்பு ரஜினிகாந்த்தை பாமக நெருக்கியது. இதையடுத்து சந்திரமுகி, சிவாஜி ஆகிய இரு படங்களிலும் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியில் ரஜினி நடிக்கவில்லை. இதை தொடரவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் நடந்த புகையிலை எதிர்ப்பு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், நாங்கள் சொன்னதைக் கேட்டு சிகரெட் பிடிப்பது போல நடிப்பதை ரஜினி விட்டு விட்டார். அதேபோல, தம்பி விஜய்யும் இனிமேல் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்ற விஜய்யும், இனிமேல் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கப் போவதில்லை என்று கூறி விட்டார். இதை பாமக வரவேற்றுள்ளது. அன்புமணியும் பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில் அன்புமணியைத் தலைவராகக் கொண்ட பசுமைத் தாயகம் அமைப்பு மற்ற முன்னணி நடிகர்களான விக்ரம், அஜீத், சிம்பு ஆகியோரும் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளது.
பாமகவின் கிளை அமைப்பு பசுமைத் தாயகம். இது ஒரு சுற்றுச்சூழல் அமைப்பாகும். இந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளம் நடிகர்களான அஜீத், சிம்பு போன்றோர் தங்களது படங்களில் தொடர்ந்து புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கிறார்கள். இதை அவர்கள் எதிர் வரும் படங்களில் இனிமேல் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மணிரத்தினத்தின் அட்வைஸ்

நல்ல கதையும், சிறந்த திரைக் கதையும் இருந்தால் நிச்சயம் நல்ல சினிமாவைக் கொடுக்க முடியும். தொழில்நுட்பம் எல்லாம் அடுத்தபட்சம்தான் என்று இளம் படைப்பாளிகளுக்கு இயக்குநர் மணிரத்னம் அறிவுரை கூறியுள்ளார்.
கோவாவில் நடைபெற்று வரும் 38வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்ட மணிரத்னம் அங்கு பேசுகையில், கதையை நன்றாக சொல்ல வேண்டும். திறமையான கலைஞர்களை அதற்குத் தேர்வு செய்வது அவசியம். நல்ல கதையும், சிறந்த கலைஞர்களும், நல்ல திரைக்கதையும் இருந்தால் நிச்சயம் நல்ல படமாக கொடுக்க முடியும்.
சரியான கலைஞர்கள் இல்லாமல், நல்ல கதையைக் கொடுத்தால் அது நிச்சயம் வெற்றி பெற முடியாது. கலைஞர்களை விட கதைதான் முக்கியம்.
திரைப்படம் தொடர்பாக இன்னும் கூட நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். எனது படங்களின் முடிவுகள் மென்மையானதாகவே இருக்கும்.
கீதாஞ்சலி, தில்சே ஆகிய படங்களில் நல்ல கதை இருந்தும், முடிவு மென்மையானதாக இல்லாததால், அவை வெற்றி பெற முடியவில்லை.
ஒரு படத்தின் முடிவுதான் மக்கள் மனதில் கடைசியாக நிற்கும். எனவே இரண்டு மணி நேரம் கதையைச் சொல்லிய பிறகு அதை லாஜிக்குடன் முடிக்கவும் வேண்டும் என்றார் மணி.
நாலு வார்த்தை சொன்னாலும் நச்சென்று சொல்லியுள்ளார் மணி.
கடவுளை அவமதித்ததாக குஷ்பு மீது இந்து முன்னணி வழக்கு

கும்பகோணம்: வல்லமை தாராயோ பட துவக்க விழாவில் மேடையில் அமர்ந்திருந்த குஷ்பு கடவுளை அவமதித்து விட்டதாக இந்து முன்னணி அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
சர்ச்சைகளுக்கும் குஷ்புவுக்கு நெருங்கிய தொடர்புண்டு. தற்போது கும்பகோணம் நகர இந்து முன்னணியினர் கடவுளை அவமதித்ததாக குஷ்பு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக அந்நகர இந்து முன்னணி பொதுச் செயலாளர் ராம்நகர் குருமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது,
நடிகர் பார்த்திபன் நடிக்கும் வல்லமை தாராயோ என்ற புதிய படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் எழுத்தாளர் சிவசங்கரி, ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பட பூஜையின்போது விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முப்பெரும் தேவியரின் சிலை அருகே போடப்பட்டிருந்த இருக்கையில் குஷ்பு அமர்ந்திருந்தார். அப்போது அவர் கால்மேல் கால் போட்டுக்கொண்டு செருப்பு காலுடன் சாமி சிலையை நோக்கி ஆட்டியபடி இருந்தார்.
இதன் மூலம் இந்து கடவுளை அவமதிக்கும் வகையிலும், இந்து மக்களை புண்படுத்தும் விதத்திலும் நடிகை குஷ்பு நடந்து கொண்டார். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதுகுறித்து ராம்நகர் குருமூர்த்தி கூறுகையில்,
பெண்களின் கற்பு பற்றி பேசிய குஷ்பு தற்போது இந்துக்கள் வழிபடும் முப்பெருந்தேவியர் சிலையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். இது இந்துக்களை மிகவும் புண்படுத்திவிட்டது.
வல்லமை தாராயோ பட பூஜை நிகழ்ச்சியை பல தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் குஷ்பு இவ்வாறு நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கதாகும்.
இந்த காட்சியை தொலைக்காட்சியில் கண்ட போது எனது மனம் மிகவும் வேதனை அடைந்தது. மேலும் இந்த பூஜை நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இன்டர்நெட்டிலும் வெளியிடப்பட்டுள்ளன.
குஷ்புவின் இந்த கடவுள் அவமதிப்பு காட்சியை தொலைக்காட்சியிலும், இன்டர் நெட்டிலும் ஏராளமானோர் பார்த்துள்ளனர். இது குறித்து குஷ்புவிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றார்.
'பறக்க'ப் போகும் சிவாஜி
ரஜினி 'பர்ந்து பர்ந்து' சண்டை போடுவதை ரசித்த அவரது ரசிகர்கள் இனிமேல் பறந்து கொண்டே அவரது படத்தைப் பார்க்கலாம். அதாவது சிவாஜி படத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது விமானங்களில் திரையிட தீர்மானித்துள்ளதாம்.உலகிலேயே ஒரு விமான நிறுவனம், ஒரு இந்தியப் படத்தை, அதிலும் தமிழ்ப் படத்தை தனது விமானங்களில் திரையிடுவது இதுவே முதல் முறையாகும்.
டிசம்பர் 1ம் தேதியிலிருந்து அனைத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களிலும் சிவாஜி திரைப்படத்தை பார்க்கலாம். இதற்காக இருக்கைகளின் பின்புறம் படத்தைப் பார்ப்பதற்கேற்ற வசதி செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் பரத் மகாதேவன் கூறுகையில், சிவாஜி படத்ைத தனது விமானங்களில் காட்ட மூன்று மாதங்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உரிமை பெற்றுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் ஒரு மாதத்திற்கு 20 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சிவாஜியை பார்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, 3 மாதத்திற்குப் பிறகு உரிமையை புதுப்பிப்பது குறித்து பரிசீலிக்கவுள்ளோம். உரிமம் புதுப்பிக்கப்படாவிட்டால் பிற விமான நிறுவனங்கள் சிவாஜியை திரையிட முடியும். ஆனால் டிசம்பர் 1ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு எங்களது விமானங்களில் மட்டுமே சிவாஜி திரையிடப்படும்.
இதேபோல அடுத்த ஆண்டு மத்தியில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் ஆகியோரின் படங்களைத் திரையிடும் திரை விழாவுக்கும் திட்டமிட்டு வருகிறோம். இந்த மூன்று பேரின் படங்களும் எங்களது விமானங்களில் காட்டப்படும் என்றார் அவர்.
உடன் இருந்த ஏ.வி.எம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ்.சி.பாபு கூறுகையில், சிவாஜி படத்தின் விமான நிறுவனங்களுக்கான உரிமையை அய்ங்கரண் இன்டர்நேஷனல் பெற்றுள்ளது.
சிவாஜி திரைப்படம் இப்போது உலகம் முழுவதிலும் 135 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன. வரும் ஜனவரி இறுதியில் இந்தியில் சிவாஜி ரிலீஸாகிறது என்றார்.
பத்மப்ரியாவுக்குப் புதுப் படம்

மிருகத்துடன்' நடந்த மோதலுக்குப் பின்னர் புதுப் படத்தில் புக் ஆகியுள்ளார் பத்மப்ரியா.
சர்ச்சை நாயகியாக அவதாரம் எடுத்துள்ள பத்மப்ரியா, லேட்டஸ்டாக மிருகம் படத்தின் ஷூட்டிங்கின்போது பஞ்சாயத்தைக் கூட்டினார். இயக்குநர் சாமி அடித்து விட்டதாக கூறி படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய அவர் சாமி மீது பாலியல் புகார்களையும் கூறினார்.
ஆனால் அது உண்மையல்ல என்று தயாரிப்பாளர் கவுன்சில் விசாரணையின்போது தெரிய வந்தது. இந்த சர்ச்சையின் தொடர்ச்சியாக சாமிக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
மிருகம் படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. படம் நன்றாக வந்திருப்பதாகவும் கோலிவுட்டில் படு சூடாக டாக் நிலவுகிறது.
இந்த நிலையில் மிருகம் சர்ச்சைக்குப் பின்னர் பத்மப்ரியாவுக்குப் புதுப் படம் கிடைத்துள்ளது. அதிரடி நாயகன் அர்ஜூனுடன் இணைந்து நடிக்கப் போகிறார் பத்மா.
துரை என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். மசாலாப் பட மன்னன் என்று கூறும் அளவுக்கு கமர்ஷியல் ரீதியிலான படங்களை இயக்குவதில் கில்லாடி வெங்கடேஷ்.
தேனப்பன் தயாரிப்பில் உருவாகும் இப்படம் பத்மப்ரியா நடிக்கவுள்ள முதலாவது மிகப் பெரிய கமர்ஷியல் படமாகும்.
வடிவேலுவின் அதிரடி காமெடி படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கும். அதேபோல அர்ஜூனுக்கு பிடித்தமான இசையமைப்பாளர் இமான்தான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கப் போகிறார்.
இப்படத்தில், இசைஞானி இளையராஜாவின் துள்ளல் பாடலான ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்ற அக்னி நட்சத்திரப் பாடலை ரீமிக்ஸ் செய்யவுள்ளாராம் இமான்.
வழக்கமான அர்ஜூன் பட அம்சங்கள் நிறைந்திருக்கும் இந்தப் படத்தில் பத்மப்ரியா நடிக்கவுள்ளதுதான் திரையுலகில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜூன் படத்தில் ஆக்ஷன் மட்டும் அதிரடியாக இருக்காது, கூடவே கிளாமரும் சேர்ந்து கும்மியடிப்பது வழக்கம். ஆனால் பத்மப்ரியா இதுவரை பெரிய அளவில் கிளாமர் காட்டி நடித்ததில்லை. அப்படி நடிக்க முயற்சித்தும் அதில் வெல்ல முடியவில்லை. பட்டியல் படத்தில் கூட அவர் கிளாமர் என்ற பெயரில் ஏனோதானோவென்று வந்தும் கூட அது ரசிக்கப்படவில்லை.
இதுவரை பத்மப்ரியாவை கவர்ச்சி நடிகையாக இதுவரை யாரும் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. இந்த நிலையில் பத்மப்ரியா எப்படி, அர்ஜூன் படத்தில் என்ற ஆச்சரியம் எழுந்துள்ளது.
இதுகுறித்து இயக்குநர் வெங்கடேஷ் கூறுகையில், இந்த கதைக்கு பத்மப்ரியாதான் பொருத்தானவர். தனது ரோலுக்கு அவர் பொருத்தமாக இருப்பார், சிறப்பாக நடிப்பார் என்று நம்புவதாக தெரிவித்தார். உளுந்தூர்ப்பேட்டையில் நாளை படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.
சண்டை, கிண்டை போடாமல் நல்லபடியா முடிச்சு விடுங்க பத்மா!
நச்சென்று 4 படங்கள்!



தீபாவளி படங்கள் ரிலீஸாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ள நிலையில் இந்த வார இறுதியில் மேலும் நான்கு புதுப் படங்கள் ரிலீஸாகப் போகின்றன.
தீபாவளிக்கு வெளியான வேல், பொல்லாதவன், அழகிய தமிழ் மகன், மச்சக்காரன் ஆகிய நான்கு படங்களும் நான்கு விதமான ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.
சூர்யாவின் வேல் ரேஸில் முந்தியுள்ளது. விஜய்யின் அழகிய தமிழ் மகனும் திருப்திகரமாகவே ஓடிக் கொண்டுள்ளது. தனுஷின் பொல்லாதவனுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மச்சக்காரனும் சைடில் ஓடிக் கொண்டிருக்கிறான்.
இந்த நிலையில் இந்த வார இறுதியில் ஆர்யா, ஜீவா ஆகியோர் நடித்த படங்களும், சத்யராஜின் முத்திரைப் படங்களில் ஒன்றாக இடம் பிடிக்கப் போகும் ஒன்பது ரூபாய் நோட்டு மற்றும் புதுமுக இயக்குநர் பிளஸ் ஹீரோ ஜெய்லானியின் கேள்விக்குறி ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன.
ஓரம்போ: புஷ்கார் காயத்ரி இயக்கத்தில் ஆர்யா-பூஜா ஜோடியாக நடித்த இந்த திரைப்படம் வெகு நாட்களுக்கு முன்னரே ரெடியாகிவிட்டது. முதலில் ஆட்டோ என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் படம் தமிழக அரசின் கேளிக்கைவரி விலக்கிற்காக ஓரம்போ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கடந்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு வந்த வட்டாரம் படத்திற்கு பின்னர் தற்போது ரிலீசாகவுள்ள வெளிவரும் ஓரம்போ வெளிவந்தால் ஆர்யா இன்னும் கோலிவுட்டில் நீடிக்கிறார் என்பது உறுதியாகிவிடும்.
ராமேஸ்வரம்: ஜீவா-பாவனா ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தை செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். நீரு என்பவர் இசை அமைத்துள்ளார். இலங்கை தமிழ் அகதிகள் படும் துயரத்தை அகதிகள் முகாமிற்கு சென்று அவர்களுடன் பழகி அதை தத்ரூபமாக நடித்துள்ளார் ஜீவா.
கற்றது தமிழ் படத்தில் ஜீவாவின் நடிப்பு அபாரமாக இருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. அதனால் ஜீவா இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.
ஒன்பது ரூபாய் நோட்டு: தங்கர் பச்சான் இயக்கத்தில் வரவுள்ள இந்த படத்தில் சத்யராஜ் மிகவும் வித்தியாசமான வேடம் ஏற்று நடித்துள்ளார். அர்ச்சனா ரோகினி, நாசர் ஆகியோர் இதில் நடித்துள்ளார்கள்.
தங்கர் பச்சானின் இயக்கத்தில் ஏற்கனவே வந்துள்ள பள்ளிக்கூடம் பெரிய ஹிட் படமாக அமைந்ததால் இதனை பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இந்தப் படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
கேள்விக்குறி: புதுமுக இயக்குனர் ஜெய்லானியின் கேள்விக்குறி படத்தில் அவரை கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்ரீத்திவர்மா ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை குளிர வைக்கும் அளவிற்கு கவர்ச்சி இருக்கிறதாம். படம் 2 வாரம் ஓடினால் போதும்பா, எனக்கு போட்ட காசு வந்துடும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர் இருக்கிறாராம்.
அர்ஜூனின் புது 'வக்கீல்'!

ஆக்ஷன் கிங் அர்ஜூன் தனது தாய் பாஷையான கன்னடத்தில் ஒரு புதிய படத்தைத் தயாரிக்கப் போகிறார். இதில் இவரது உறவினர் சிரஞ்சீவி நாயகனாக அறிமுகமாகிறார். மும்பை இளமைப் புயல் தன்யா வக்கீல் நாயகியாக அட்டகாசம் செய்யவுள்ளார்.
தமிழ்நாட்டில் அர்ஜூனாகவும், கன்னட தேசத்தில் அர்ஜூன் சர்ஜாவாகவும் அறியப்படும் அர்ஜூன், தமிழில் சில படங்களைத் தயாரித்துள்ளார். இப்போது கன்னடப் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார்.
தனது உறவினரான சிரஞ்சீவிக்காக இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் அர்ஜூன். வாயுபுத்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையையும் அர்ஜூனே பார்த்துக் கொள்கிறார். முன்னாள் நாயகன் அம்பரீஷுக்குப் படத்தில் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
படத்தின் முக்கியமான மேட்டர் என்னவென்றால் நாயகி தன்யா வக்கீல்தான். படு க்யூட்டாக இருக்கும் தன்யா பார்ப்பவர்களை அசரடிக்க வைக்கும் அழகுடன் செம கெட்டப்பில் இருக்கிறார்.
கடந்த ஆண்டு நடந்த மிஸ் இந்தியாப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியவர். மும்பையிலிருந்து வந்திறங்கியுள்ள அசத்தல் தேவதை.
மிஸ் இந்தியாப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இவர், மிஸ் டூரிசம் இன்டர்நேஷனல் போட்டியில் முதல் ரன்னராக தேறியவர்.
மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் தன்யாவை, நடிக்க கூப்பிட்டு வந்திருக்கிறார் அர்ஜூன். கன்னடத்தில் அறிமுகமானாலும் கூட விரைவிலேயே தமிழையும் இந்தப் புயல் மையம் கொண்டு ரசிகர்களை மயங்கடிக்கும் என்று நம்பலாம்.
வாயுபுத்ரா படம் குறித்த அறிவிப்பை பெங்களூரில் செய்தியாளர்களிடம் வெளியிட்ட அர்ஜூன், அப்படியே இன்னொரு நல்ல செய்தியையும் சொன்னார்.
சென்னையில் அனுமன் கோவில் ஒன்றைக் கட்டி வருகிறாராம் அர்ஜூன். அனுமனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்று கூறிய அர்ஜூன் அது நனவாகப் போவதாக தெரிவித்தார்.
அர்ஜூன், தீவிர அனுமன் பக்தர். அனுமனுக்காக ஒரு கோவிலைக் கட்டத் தீர்மானித்த அவர் சென்னையில் உள்ள தனது பெரு பண்ணை வளாகத்தில் இந்தக் கோவிலை நிர்மானிக்க தீர்மானித்தார்.
கடந்த ஆண்டு கோவில் கட்டும் பணியைத் தொடங்கினார். இப்போது அது முடியும் தருவாயை நெருங்கியுள்ளதாம்.
இந்தக் கோவிலில் 28 அடி உயரம் கொண்ட, ஒரே கல்லினால் ஆன அனுமன் சிலை வைக்கப்படவுள்ளது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். பெங்களூரைச் சேர்ந்த அசோக் குடிகர் என்ற சிற்பிதான் இந்த சிலையையும், கோவிலையும் வடிவமைத்துள்ளார்.
அமர்ந்த நிலையில் இந்த அனுமன் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சிலை வைக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாம்.
அனுமன் கோவில் குறித்து அர்ஜூன் கூறுகையில், அனுமனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகும். இதுதான் எனது வாழ்க்கையின் மிகப் பெரிய, உண்மையான சாதனையாகும். இந்த கோவிலின் பின்னணியில் வேறு எந்தக் காரணமும் இல்லை.
ரூ. 75 லட்சம் செலவில் கோவிலும், அனுமன் சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லினால் ஆன இந்த சிலையின் உயரம் 28 அடியாகும். அகலம் 12 அடியாகும். சிலையின் அடர்த்தி 7 அடியாகும்.
எனது பண்ணை வளாகத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை கோவிலுக்காக ஒதுக்கியுள்ளேன்.
எனது கனவுக் கோவில் இது. இந்தக் கோவிலை எந்தவித ஆடம்பரமும், விளம்பரமும் இன்றி திறக்கத் தீர்மானித்துள்ளேன் என்றார் அர்ஜூன்.
Tuesday, November 27, 2007
பிரதமருக்கு விஜயகாந்த் தந்தி
மலேசியாவில் உள்ள தமிழ்மக்கள் மனிதர்களாக வாழவும், சம உரிமையும் சமவாய்ப்பும் பெறவும் மலேசியா அரசு நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் வற்புறுத்த வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரதமர் மன்மோகன்சிங்கிற்குத் தந்தி அனுப்பியுள்ளார். இதே செய்தியைப் பிரதமருக்குக் கடிதம் மூலமும் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் விஜயகாந்த் கூறியிருப்பதாவது:
மலேசியாவில் உரிமை கேட்டுப் போராடிய தமிழ் மக்கள் மீது மலேசிய அரசு தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் அவர்களைக் கட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளது. இது கண்டிக்கதக்கது மட்டுமல்ல, சிறிதும் மனிதாபிமானம் அற்ற செயலாகும்.
மலேசியாவில் உள்ள தமிழ்மக்கள் மனிதர்களாக வாழவும், சம உரிமையும் சமவாய்ப்பும் பெறவும் மலேசியா அரசு நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் வற்புறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவும், கைது செய்துள்ளவர்களை விடுவிக்கவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும் இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சிறு பொறியாகத் தோன்றியது, எவ்வாறு இன்று இலங்கையில் காட்டுத் தீயாக மாறி உள்ளதோ அதைப் போல மலேசியாவும் ஆகாமல் இருக்க மத்திய அரசு தனது மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டுவது அவசியம், குறிப்பாக இந்தியப் பிரதமர், இது சம்பந்தமாக நான் அனுப்பி உள்ள தந்தியையும் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
மலேசியாவில் உரிமை கேட்டுப் போராடிய தமிழ் மக்கள் மீது மலேசிய அரசு தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் அவர்களைக் கட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளது. இது கண்டிக்கதக்கது மட்டுமல்ல, சிறிதும் மனிதாபிமானம் அற்ற செயலாகும்.
மலேசியாவில் உள்ள தமிழ்மக்கள் மனிதர்களாக வாழவும், சம உரிமையும் சமவாய்ப்பும் பெறவும் மலேசியா அரசு நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் வற்புறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவும், கைது செய்துள்ளவர்களை விடுவிக்கவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும் இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சிறு பொறியாகத் தோன்றியது, எவ்வாறு இன்று இலங்கையில் காட்டுத் தீயாக மாறி உள்ளதோ அதைப் போல மலேசியாவும் ஆகாமல் இருக்க மத்திய அரசு தனது மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டுவது அவசியம், குறிப்பாக இந்தியப் பிரதமர், இது சம்பந்தமாக நான் அனுப்பி உள்ள தந்தியையும் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
இயற்கையை திருடியவர்கள் -இந்திபட இயக்குனர் மீது ஜனநாதன் குற்றச்சாட்ட

எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய படம் இயற்கை. ஷாம், அருண், குட்டி ராதிகா நடித்த இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது யாவருக்கும் நினைவிருக்கலாம். அதன்பின் ஈ, என்ற படத்தை இயக்கி தன்னை வித்யாசமான இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்டார் ஜனநாதன்.
தற்போது இந்தியில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சாவரியா படம் இயற்கை படத்தின் திரைக்கதையை அப்படியே பிரதி எடுத்தது போல் வந்திருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார் ஜனா. 'இந்த படத்தை பார்த்த இந்தி சினிமா தயாரிப்பாளர் கே.சி.பொக்கார்டியா பெரிதும் பாராட்டினார். இந்தியில் சல்மான்கானை வைத்து எடுக்கப்போவதாகவும், அதற்காக இப்படத்தை சல்மானின் அப்பா சலீம்கானிடம் காட்டப்போவதாகவும் தெரிவித்தார். ஒரு பிரின்டையும் அவர் மும்பைக்கு கொண்டு சென்றார்.
இதற்கிடையில் சோனி பிக்சர்ஸ் தயாரித்த சாவரியா படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படம் இயற்கை படக்கதைதான் என பலரும் கூறினர். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. வைட் நைட்ஸ் என்ற ஆங்கில நாடகத்தின் தழுவல்தான் இயற்கை. ஆனால், அதை அப்படியே எடுக்கவில்லை. என் திரைக்கதையே வேறு. எனது படத்தை அப்படியே சாவரியாவில் சஞ்சய் லீலா பன்சாலி காப்பி அடித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது' என்று குமுறியிருக்கும் ஜனநாதன், தென்னிந்திய கலைஞர்களின் உழைப்பை திருடும் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
கறிவேப்பிலை ஆக்கிட்டீங்களே...! -நமீதா அனுப்பிய எஸ்.எம்.எஸ

நடிப்பழகி இல்லை நமீதா. ஆனாலும், ரசிகர்களை துடியாய் துடிக்க வைக்கிற விஷயத்தில் அவர் ஒரு சின்ன சிலுக்கு! அவருடைய பரந்த மனசையும் பாடாய் படுத்திவிட்டது சமீபத்தில் வந்த அழகிய தமிழ் மகன். விஜயுடன் ஜோடி சேர அழைக்கிறார்கள் என்றதும், பல படங்களை தவிர்த்துவிட்டு கால்ஷீட்டை வாரி வாரி வழங்கினாராம். அந்தோ பரிதாபம்! படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவரை காண்பித்திருக்கிறார்கள். ஆசை ஆசையாக தியேட்டருக்கு போன நமீக்கு எடுக்கப்பட்ட பல காட்சிகள் இல்லாமல் போனதில் வருத்தமோ வருத்தம்.
வருத்தத்தையெல்லாம் வார்த்தைகளாக்கி அப்படத்தின் இயக்குனர் பரதனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டாராம். 'கடைசியில் நீங்களும் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்தியதற்கு நன்றி' என்று முடிகிறதாம் அந்த எஸ்.எம்.எஸ்.
நமீதா அனுப்பிய எஸ்.எம்.எஸ்சில் நாலு சொட்டு கண்ணீர் இருந்தால் எப்படியிருக்கும்? துடித்துப்போன பரதன், அவரை சமாதானப்படுத்தி பதிலுக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்சில், அடுத்த படத்தில் இந்த குறைகள் சரி செய்யப்படும் என்று உறுதியளித்திருக்கிறாராம். ஊர்வசி விருது வாங்கி தருவது மாதிரி ஒரு கனமான(?) பாத்திரம் இருப்பவர்கள் நமீயை அணுகலாம்!
ஈழப்பிரச்சனையை பேசிய படத்திற்கு கனடாவில் விருது
2001-ம் ஆண்டு வெளிவந்த காற்றுக்கென்ன வேலி படத்திற்கு கனடா நாட்டை சேர்ந்த இன்டிபெண்டன்ட் ஆர்ட் பிலிம் சொசைட்டி என்ற அமைப்பு விருது வழங்குகிறது.
உள்ளக்கடத்தல், ரசிகர்மன்றம் போன்ற படங்களை இயக்கிய புகழேந்தி தங்கராஜின் முதல் படைப்பு காற்றுக்கென்ன வேலி. ஈழத்திலிருந்து இந்தியா வரும் பெண் போராளிக்கும், இங்கே அவளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்படும் காதலை மிக அழகாக சொல்லியிருந்தார் புகழேந்தி.
'காற்றுக்கென்ன வேலி' படத்தை வெளியிட அப்போது தணிக்கை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததையும், மேல் முறையீட்டுக்கு அனுப்பிதான் சென்சார் சர்டிபிகேட் வாங்கப்பட்டது என்பதையும் ரசிகர்கள் எளிதில் மறந்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் தணிக்கை குழுவினரின் கெடுபிடியை கண்டித்து பிலிம்சேம்பரின் முன் அப்போது உண்ணாவிரதமும் இருந்தார் புகழேந்தி. இந்நிலையில் இந்த படத்திற்கு கனடாவை சேர்ந்த அமைப்பு விருது கொடுத்து கௌரவிப்பது வெந்த புண்ணில் மருந்து தடவுவதுபோல் அமைந்திருக்கிறது. விரைவில் கனடா சென்று மேற்படி விருதை பெற்றுக் கொள்ளவிருக்கிறார் அவர்
உள்ளக்கடத்தல், ரசிகர்மன்றம் போன்ற படங்களை இயக்கிய புகழேந்தி தங்கராஜின் முதல் படைப்பு காற்றுக்கென்ன வேலி. ஈழத்திலிருந்து இந்தியா வரும் பெண் போராளிக்கும், இங்கே அவளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்படும் காதலை மிக அழகாக சொல்லியிருந்தார் புகழேந்தி.
'காற்றுக்கென்ன வேலி' படத்தை வெளியிட அப்போது தணிக்கை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததையும், மேல் முறையீட்டுக்கு அனுப்பிதான் சென்சார் சர்டிபிகேட் வாங்கப்பட்டது என்பதையும் ரசிகர்கள் எளிதில் மறந்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் தணிக்கை குழுவினரின் கெடுபிடியை கண்டித்து பிலிம்சேம்பரின் முன் அப்போது உண்ணாவிரதமும் இருந்தார் புகழேந்தி. இந்நிலையில் இந்த படத்திற்கு கனடாவை சேர்ந்த அமைப்பு விருது கொடுத்து கௌரவிப்பது வெந்த புண்ணில் மருந்து தடவுவதுபோல் அமைந்திருக்கிறது. விரைவில் கனடா சென்று மேற்படி விருதை பெற்றுக் கொள்ளவிருக்கிறார் அவர்
டைட்டிலை மாத்துங்க... -கரணுக்கு ஒரு 'பயங்கர' அட்வைஸ்!

பழைய டைட்டில் மோகத்தில் இருக்கும் தமிழ்சினிமாவுக்கு மற்றுமொரு டைட்டில் சிக்கியிருக்கிறது. காளி. ரஜினி நடித்த இந்த படத்தின் தலைப்பை கரண் நடிக்கும் படம் ஒன்றிற்கு வைத்திருக்கிறார்கள். ஆனால், சென்ட்டிமென்ட் காரணமாக இந்த டைட்டிலை தவிர்த்துவிடலாம் என்று கரணுக்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் சில அனுபவஸ்தர்கள்.
மகாகவி காளிதாஸ் என்ற படத்திற்கு செட் வொர்க் நடந்து கொண்டிருக்கும்போதே பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீ விபத்தில் எரிந்து போனார்களாம். பத்ரகாளி படத்தின் நாயகி ராணிச்சந்திரா விமான விபத்தில் பலியானார். காளி படத்தில் சண்டைக்காட்சியில் நடித்த ஸ்டண்ட் நடிகர்களும், சில குதிரைகளும் தீக்கிரையானார்கள். இப்படியெல்லாம் பட்டியல் போட்டு பயங்கரங்களை விவரித்தாலும், டைட்டில் விஷயத்தில் பிடிவாதமாகவே இருக்கிறார்கள் காளி தரப்பினர்.
காளியில் கரணோடு காதல் ஆட்டம் போடவிருக்கிறார் சினேகா. இதுபோன்ற சென்ட்டிமென்ட் விஷயத்தை கொஞ்சம் அதிகமாகவே நம்பும் அவரே இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பதுதான் ஆச்சர்யம்!
கொசுறு தகவல்- உக்கிர தெய்வங்களின் பெயரில் டைட்டில் வைக்கும்போது மாமிச படையல் போடுவது நல்லது என்ற அட்வைஸ் காரணமாகதான் முனி படத்தின் படப்பிடிப்பை முனீஸ்வரன் கோவிலிலேயே வைத்து கிடா விருந்து வைத்தாராம் சரண
பாரதி திருத்திய கவிதை! -'வல்லமை தாராயோ' விழாவில் பாலுமகேந்திரா!


எல்லா மதமும் நல்லதுக்குதான், தா'மதம்' உட்பட! -இப்படி \பேசிய நபர் இயக்குனரல்ல... ஒரு தயாரிப்பாளர். பெயர் சுந்தரராமன். இந்தோனேஷியாவில் நிலக்கரி சுரங்கம் வைத்திருக்கிறாராம். 'தீபாவளி சமயத்தில் நிறைய பட்டாசுகள் வெடிப்பேன். எங்கப்பா கேப்பாரு, ஏண்டா இப்படி காசை கரியாக்குறே என்று! இப்போ இந்தோனேஷியாவுல கரியை காசாக்கிட்டு இருக்கேன்!' சரமாரியாக வந்து விழுகிறது சிலேடைகள். இனம் இனத்தோடு சேரும் என்பது மாதிரி இவருடைய தயாரிப்பில் நடிக்கவிருப்பவர் பார்த்திபன். 'வல்லமை தாராயோ' என்ற பாரதியின் வரியை தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் மதுமிதா. இவர் சுந்தரராமனின் மகள்.
பாட்டிமார்கள் பக்கத்தில் இருந்தால் சுற்றிப்போட சொல்வார்கள். அப்படியொரு அழகான குடும்பம். அசத்தலான விழா. வல்லமை தாராயோ படத்தின் துவக்கவிழாவே படம் பார்ப்பது மாதிரி இருந்தது. அத்தனை சுவாரஸ்யம்! சாதனைப் பெண்களில் சிலரை மேடையில் ஏற்றி பேச வைத்தார்கள். எழுத்தாளர் சிவசங்கரி, டி.ஜி.பி.திலகவதி, டாக்டர் கமலா செல்வராஜ், வழக்கறிஞர் சுமதி, நடிகை குஷ்பு, இயக்குனர் ப்ரியா என்று சக்திகளின் சங்கமமாக இருந்தது அந்த மேடை!
ஒரு கோவிலை போல அமைக்கப்பட்டிருந்த மேடையில் திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள துர்கா, மஹாலட்சுமி, சரஸ்வதி சிலைகளும் அமைக்கப்பட்டிருந்தன. முன்னதாக மேடையேறினார்கள் ஆண் சாதனையாளர்கள்! தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இராம.நாராயணன் பேசும்போது, 'நான் மாதத்திற்கு ஒரு முறை திருநாகேஸ்வரம் போய் இறைவனை வணங்கி வருகிற வழக்கம் உள்ளவன். கடந்த சில மாதங்களாக போக முடியவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த திருநாகேஸ்வரத்தையே இங்கு வரவழைத்துவிட்டார் தயாரிப்பாளர். அவருக்கு என் நன்றி' என்றார் மனப்பூர்வமாக!
'பாரதி வாழ்ந்த வீட்டிற்கு போக வேண்டும் என்று தோன்றியது. பாண்டிச்சேரிக்கு போயிருந்தேன். அங்கே அவர் கைப்பட எழுதிய கவிதைகளில் சிலவற்றை வைத்திருந்தார்கள். 'வல்லமை தாராயோ', இந்த மானுடம் புகழுற வாழ்வதற்கே' என்றுதான் அவர் முதலில் எழுதியிருக்கிறார். அதை அடித்துவிட்டுதான் அதன் மேலேயே 'இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே' என்று திருத்தியிருக்கிறார்' என்று பாரதியின் கவிதை பற்றி புது தகவல் ஒன்றை கூறினார் பாலுமகேந்திரா.
சிவசங்கரியின் பேச்சு அர்த்தம் நிரம்பியதாக இருந்தது. பிரம்மா-சரஸ்வதி, விஷ்ணு-மஹாலட்சுமி, சிவன்-பார்வதி ஜோடிகளுக்கான காரணம் குறித்து அவர் விவரித்தபோது, இத்தனை விஷயம் இருக்கிறதா இதற்குள் என்ற பிரமிப்பே எழுந்தது.
குஷ்பு பேசும்போது, 'பெண் டைரக்டர்கள் படம் எடுத்தால், பெண்கள் பிரச்சனையை மையமாக வைத்துதான் எடுப்பார்கள் என்ற கருத்தை பானுமதி போன்றவர்கள் அந்த காலத்திலேயே மாற்றிக் காட்டினார்கள். பொழுதுபோக்கு அம்சத்துடன் பெண் டைரக்டர்களால் படம் கொடுக்க முடியும் என்பதற்கு ப்ரியா இயக்கிய கண்ணாமூச்சி ஏனடா ஒரு உதாரணம்' என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் பிறந்து, இந்தோனேஷியாவில் வளர்ந்து, சிங்கப்பூரில் படித்து, ஹாலிவுட்டில் குறும்படங்களை இயக்கி, கோடம்பாக்கத்தில் சங்கமம் ஆகியிருக்கிறார் மதுமிதா. இவர் இயக்கிய ஹாலிவுட் படங்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கிறது. 'வல்லமை தாராயோ' கலைப்படைப்பாக மட்டுமே உருவாகாமல் கமர்ஷியலாகவும் ஹிட் ஆகவேண்டும். இதுவரை வருமானம் கொடுத்த இந்தோனேஷிய நிலக்கரி, எங்க ஊரு தியேட்டரில் கலர் கலராக ஜொலித்து காசுமழை பொழியணும்!
மனித வணக்கம் -கமல் எழுதிய கவிதை

டந்த சில தினங்களுக்கு முன் கவிஞர் புவியரசுக்கு பாராட்டு விழா நடத்தினார் கமல். அப்போது, தான் எழுதிய கவிதை ஒன்றை மேடையில் வாசித்தார். பலரையும் பரவசப்படுத்திய கமலின் அந்த கவிதை இதுதான்!
மனித வணக்கம்
தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.
தகப்பா, ஓ தகப்பா!
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.
தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு
தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடி போனாயோ?
மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.
மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!
மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல..
எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை,
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?
நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.
பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தியுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.
மதமென்றும், குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.
வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.
ஆம்,
நாளை உன் வரியில் நான் தெரிவேன்.
அன்பன்
-கமல்ஹாசன்
சினேகா ரசிச்சாங்க... -புல்லரிக்கும் இளம் இசையமைப்பாளர்!

ஹார்மோன்களை இசைக்க வேண்டிய இளம் வயசு. ஹார்மோனியத்தை இசைத்துக் கொண்டிருக்கிறார் பி.எஸ்.பாலாஜி. ஷாம், சினேகா நடிக்கும் 'இன்பா' படத்திற்கு இவர்தான் மியூசிக் டைரக்டர்.
இப்படத்தின் இயக்குனருக்கும் எனக்கும் அருகருகில்தான் வீடு. அவ்வப்போது வீட்டிற்கு வருவார். என்னுடைய டியூன்களை ரசிப்பார். அவர் படம் இயக்குகிறார் என்றதும் வேறு யாரோதான் இசையமைப்பார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், 'நீதான் இந்த படத்திற்கு மியூசிக்' என்று அவர் சொன்னபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
ஒவ்வொரு ட்யூனையும் கேட்டுவிட்டு ஷாம் சார் ரொம்ப பாராட்டுவார். அவருடைய காரில் எப்போதும் என் பாடல்தான் ஓடிக்கொண்டிருக்கும். 12 பி மாதிரி மியூசிக்கல் ஹிட் படங்களில் நடிச்சவர் அவர். என் பாடலை ரசிக்கிறார் என்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மாதிரியேதான் சினேகாவும். முழுசா ரெக்கார்டிங் ஆவதற்கு முன்பாகவே அவருக்கு காப்பி பண்ணி கொடுத்திருந்தார்கள். பாடல் காட்சியின்போது வாயசைக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட காப்பி அது. ஆனால், எப்போதும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருப்பாராம். 'எனக்கு எல்லா பாடல்களும் ரொம்ப பிடிச்சிருக்கு என்று அவர் சொன்னதாக சொன்னார்கள்' சொல்லும்போதே கண்ணில் மின்னலடிக்கிறது பாலாஜிக்கு. ஸ்ரேயாகோஷ், சங்கர் மஹாதேவன் போன்ற முன்னணி பாடகர்களை பாட வைத்திருக்கிறார். அவர்களோடு பணியாற்றிய அனுபவம் ரொம்ப வித்யாசமானது என்று சிலிர்க்கும் இவர், பிலிம் இன்ஸ்டியூட்டில் நடிப்பு பயிற்சியை முடித்தவராம். பார்ப்பதற்கும் இளம் ஹீரோ போலவே இருக்கிறார்.
இசையில் 'டிராக்' பிரிக்கிற பாலாஜி, தன் டிராக்கை மாற்றிக்கொண்டு நடிகரானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!
Subscribe to:
Posts (Atom)

