உலகின் பிரமிக்கத்தக்க 7 அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவரும் 450 ஆண்டுக்கால பழமை வாய்ந்த தாஜ்மஹால் இன்று வெளியிடப்படவுள்ள புதிய 7 அதிசயங்களின் பட்டியலில் இடம்பெறுமா என்று அறிவதில் இந்தியர்கள் மட்டுமின்றி, வரலாற்றிலும், கலைப் படைப்புகளிலும் பேரார்வம் கொண்டோர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்!
சீனப் பெருஞ்சுவர், பைசா நகர சாய்ந்த கோபுரம், பாபிலோனியாவின் தொங்கு தோட்டம், எகிப்தின் பிரமீடுகள், பாரிஸ் நகரில் உள்ள ஈஃபிள் கோபுரம், ஆக்ராவில் யமுனை கரையில், எழிலிற்கு இலக்கணம் கூறி கட்டுமானக் கலைக்கு அத்தாட்சியாகவும், காதலின் சிறப்பை உணர்த்து சின்னமாகவும் திகழ்ந்துவரும் தாஜ்மஹால் ஆகியன உள்ளன.
புத்தாயிரம் ஆண்டில் 7வது ஆண்டான இவ்வாண்டில் 7வது மாதமான ஜூலையில், 7வது நாளான இன்று அதாவது 07.07.07 என்று வரும் இந்நாளில் புதிய 7 உலக அதிசயங்கள் எது எது என்கின்ற பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
பெர்னார்ட் வீபர் என்பவரின் தனித்த முயற்சியால் உலக மக்களின் கருத்தை வாக்கெடுப்பின் மூலம் அறிந்து அதன்மூலம் புதிய 7 அதிசயங்களை முடிவு செய்து அறிவிப்பது என்று திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு எந்தவிதத்திலும் ஆதரவளிக்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, சமூகம், பண்பாடு ஆகியவற்றிற்கான அமைப்பான யுனெஸ்கோ திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
யுனெஸ்கோ மேற்கொண்டு வரும் உலகப் பாரம்பரிய திட்டத்திற்கும், இந்த புதிய அதிசயப் படடியலிற்கான வாக்கெடுப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றாலும், உலக மக்கள் தங்கள் விருப்பங்களை வெளியிடும் ஒரு வாய்ப்பாகிவிட்டதால் இதற்கும் ஒரு வரவேற்பு உள்ளது.
வாக்களிப்பு மூலம் உலக அதிசயங்களை நிர்ணயிக்க முடிவு செய்து அதற்கான வாக்குப்பதிவு நேற்றுடன் முடிந்துவிட்டது. முடிவு இன்று போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் வெளியிடப்படவுள்ளது.
உலகெங்கிலும் உள்ள 20 அதிசயங்கள் இந்த வாக்குப் பதிவில் இறுதிக்கு தகுதி பெற்றன. 9 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். இன்னும் சில மணி நேரங்களில் அதிசயங்களின் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment