Sunday, November 18, 2007

சபரிமலையில் 18 படிகளை தொட முயன்ற பெண் கைது

சபரிமலை: சபரி மலை ஐயப்பன் சன்னிதானத்தில் 18 படிகளை தொட முயன்ற புதுச்சேரியை‌ சேர்ந்த 30 வயது பெண் கைது செய்யப்பட்டார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை தொடங்கியது.

சபரி மலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந் நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த 30 வயதான செல்வி என்பவர் எப்படியோ சபரிமலைக்கு வந்துவிட்டார்.

ஐயப்பன் சன்னிதானத்தில் உள்ள புனித 18 படிகளை தொட அவர் முயற்சி செய்தார். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.

No comments: