தமிழில் 3 மாடல்கள் ஒரே படத்தில் ஹீரோயின்களாக அறிமுகமாகின்றனர். இதில் ஒருவர் மட்டும் ஏற்கனவே மதுரைப் பொண்ணு படத்தில் நடித்தவர்.
இயக்குனர் சந்தர்நாத் இயக்கவுள்ள கண்களும் கவி பாடுதே படத்தில் மிருதுளா, லிகிதா, லக்ஷனா என்ற மூன்று ஜிலேபிகள் அறிமுகமாகின்றனர்.
இதில் லக்ஷனா ஏற்கனவே மதுரைப் பொண்ணு படத்தில் பூஜா என்ற பெயரில் கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் தான்.
இவரும் மற்ற இருவருமே ஏராளமான விளம்பரங்களில் போஸ் கொடுத்த மாடல்கள் தான். இவர்களுக்கு ஜோடியாக ஆகாஷ், ரத்தன், ரஞ்சித் ஆகிய மூன்று ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
இதில் ரஞ்சித் கேரளாவைச் சேர்ந்தவர். மலையாளத்தில் கமல் இயக்கத்தில் கோல்மால் என்ற படத்தில் நடித்தவர் தான்.
ஆகாஷ் சென்னையில் பிரபல மாடல். ரத்தன் 15க்கும் மேற்பட்ட படங்களில் சின்னப் பையனாக இருந்தபோது ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்தவர். இப்போது வளர்ந்து ஹீரோவாகிறார்.
இந்தப் படத்துக்கு இளையராஜாவின் இசை தான் ஹை-லைட். செம கலக்கலான 5 பாடல்களுக்கு 30 நிமிடத்தில் ட்யூன் போட்டுத் தந்துவிட்டார் என்பதை முன்பே சொல்லியிருக்கிறோம். இப்போது ரெக்கார்டிங்கும் முடிந்துவிட்ட நிலையில் சூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
3 பசங்களும் தோழனின் திருமணத்துக்காக சென்னையிலிருந்து கிராமத்துக்குப் போகின்றனர். அங்கு 3 தேவதைகளைக் கண்டு சொக்கிப் போய் காதலில் விழுகின்றனர். இந்தக் காதலுக்கு கிராமத்தில் எழும் எதிர்ப்பும், காதலர்களின் லொள்ளும், ஜொள்ளுமாக கதை போகிறதாம்.
படத்தைத் தயாரிப்பது ரியல் எஸ்டேட்டில் கோடிகளைப் பார்த்த கங்கமணி, நானாகுமார் மற்றும் ரமேஷ். ஐடிசி என்று ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து படத்தை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment