Thursday, November 29, 2007

எஸ்.ஜே.சூர்யாவின் வில் பவர்!


ஒருகாலத்தில் இவர் நடித்த படங்களின் சில ஏரியாக்கள் ரஜினி படத்தின் அளவுக்கு விலை போனது. ம்ம்ம்... அதெல்லாம் அந்த காலம் என்றுதான் கவலைப்பட வேண்டியிருக்கிறது எஸ்.ஜே.சூர்யாவை நினைத்தால். தொடர் தோல்விகள் சூர்யாவுக்கு எதை எதை கற்றுத்தர வேண்டுமோ, அதையெல்லாம் கற்றுக் கொடுத்திருக்கிறது. இனிமேல் நான் ஹீரேவாக நடிப்பேன். அதை நானேதான் இயக்குவேன். அப்படி அமையவில்லை என்றால், வேறு ஹீரோக்களை நடிக்க வைத்து அந்த படங்களை இயக்குவதோடு நிறுத்திக் கொள்வேன். இதுதான் என் திருத்தப்பட்ட கொள்கை என்கிறார் விரக்தி ப்ளஸ் நம்பிக்கையுடன்.

தற்போது இவர் நடித்து வரும் வில் படத்தில் ஊனமுற்றவராக நடிக்கிறார். இதுவரை இருந்த டபுள் மீனிங் சூர்யா இந்த படத்தில் இல்லை. அதுமட்டுமல்ல, எனக்கென்று இதுவரை உருவாகியிருந்த இமேஜை இந்த படம் நிச்சயம் அழிக்கும் என்கிறார். இந்த படத்தின் வெற்றி எனக்கு ஆக்ஷன் ஹீரோ இமேஜை பெற்றுத்தரும். அதன்பின் நான் பெரிய ஹீரோ யாரையாவது வைத்து இயக்க வேண்டும் என்று நினைத்திருந்த புலி படத்தில் நானே நடிப்பேன். அதற்கு முன்னோட்டமாக என்னுடைய வில் இருக்கும் என்கிறார்.

வில் பவர் என்பது இதுதானோ?

No comments: