Sunday, November 18, 2007

கடப்பா தர்ஹாவில் ஐஸ், அபி


ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புகழ் பெற்ற தர்ஹாவுக்கு அபிஷேக் பச்சனும், அவரது மனைவி ஐஸ்வர்யா ராயும் தம்பதி சமேதரமாக வந்து வணங்கினர்.

கடப்பாவில் உள்ள பெட்டா தர்ஹா மிகவும் புகழ் பெற்றது. இந்த தர்ஹாவுக்கு நேற்று ஐஸ், அபிஷேக் ஜோடி வந்தது. அவர்களுடன் ஜெயா பச்சன் மற்றும் (வழக்கம் போல) அமர்சிங்கும் உடன் வந்திருந்தனர்.

பெங்களூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கடப்பா வந்த அவர்கள் நேராக தர்ஹாவுக்கு சென்று வழிபட்டனர்.

தர்ஹாவில் ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும், சதர் நன்கொடையாக வழங்கினர். மேலும் சிறப்பு வழிபாடும் நடத்தினர்.

நபிகள் நாயகத்தின் வழித்தோன்றலில் வந்த ஒரு இறைத் தலைவர்தான் இந்த தர்ஹாவை உருவாக்கியதாக கூறப்படுகிறது. 400 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த தர்ஹா, தென்னகத்தின் ஆஜ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் வரும்தகவலை அறிந்ததும் ஏராளமான ரசிகர்கள் குவிந்து விட்டனர். 3 மணி நேரம் தர்ஹாவில் செலவிட்ட பின்னர் ஐஸ்வர்யா, அபிஷேக் ஜோடியும், ஜெயா பச்சன், அமர்சிங் ஆகியோரும் பெங்களூருக்குத் திரும்பிச் சென்றனர்.

இந்த தர்ஹாவுக்கு அடிக்கடி விஜயம் செய்யும் இன்னொரு பிரபலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

No comments: