Thursday, November 15, 2007

விக்ரம், விஷால், சூர்யா, வரிசையில் பரத்! -ஹரியின் அடுத்த படம

தென் மாவட்டங்களில் அரிவாளுக்கு ஹரிவாள் என்றே பெயர் வச்சிட்டாங்களாம்! தெரியுமா? என்றால் லேசான வெட்கத்தோடு சிரிக்கிறார் ஹரி. மற்ற படத்தை விட இந்த படத்தில் கொஞ்சம் கம்மியாத்தான் அருவா சுத்தியிருக்கேன். என்னை போயி கலாய்கிறீங்களே? என்கிற ஹரிக்கு இந்த வருட தீபாவளி கொஞ்சம் விசேஷமானது. ரேசில் முதலிடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறான் வேல்.

போட்ட பணத்தை எப்படியாவது தயாரிப்பாளருக்கு எடுத்து கொடுத்திடணும். பெரிய ஹிட் ஆகாவிட்டாலும் மினிமம் கியாரண்டியாவது இருக்கணும். ஹரியின் இந்த கொள்கைதான் தயாரிப்பாளர்களுக்கு ஆக்ஸிஜன். இப்படிப்பட்ட இயக்குனரை ஒப்பந்தம் செய்ய க்யூவில் நிற்கிற தயாரிப்பாளர்களுக்கு மத்தியில், புதிய தயாரிப்பாளருடன் கை கோர்த்திருக்கிறார் ஹரி. ஜின்னா என்ற விநியோகஸ்தர்தான் ஹரியின் அடுத்த பட தயாரிப்பாளர். பரத் ஹீரோ.

முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்துவிட்ட ஹரி புது புது ஹீரோக்களை அறிமுகப்படுத்தலாமே? '...லாம்தான்! ஆனா, நான் ஒன்றும் புதுசா கதை சொல்லி ஜனங்களை இம்ப்ரஸ் செய்யற டைரக்டர் இல்லை. ஏற்கனவே ஜெயிச்சவங்களோடு சேர்ந்து, நானும் சில ஜிமிக்ஸ் பண்ணிதான் வெற்றிகளை கொடுக்க முடியும். அதனால ரிஸ்க் எடுப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை' என்கிறார் ஹரி வெளிப்படையாக.

ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒவ்வொரு ஸ்கேல் இருக்கு. அதுக்கேற்ற மாதிரிதான் ஆக்ஷனின் அளவை கூட்டவோ, குறைக்கவோ செய்வேன். விக்ரம், விஷால், சூர்யா இவங்களுக்கு கொடுத்த அளவுக்கு வெயிட்டான ஆக்ஷனை பரத்திற்கு கொடுக்க முடியாது. அவர் மூளையை யூஸ் பண்ணி எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் என் அடுத்த படத்தின் கதை. இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். மார்ச்ல ஷ§ட்டிங் ஆரம்பிச்சுடுவோம். இடையில் சந்திக்கதானே போறோம்... நிறைய பேசுவோம் என்கிறார் ஹரி வெற்றிப்புன்னகையோடு! ஹ(ச)ரிங்க....!

No comments: