Friday, November 16, 2007

கடல் கொந்தளிப்பில் மாட்டிய நடிகை



சென்னை கடற்கரையில் நடந்த படப்பிடிப்பின்போது திடீரென ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் நடிகை ஸ்ருதி ராஜ் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை ஸ்பாட்டில் வெடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மீனவர்கள் நீந்திச் சென்று மீட்டதால் உயிர் தப்பினார்.

சென்னையில் நேற்று திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் எல்லாம் தண்ணீர் புகுந்தது.

அப்போது நீலாங்கரையில் இயக்கம் படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. காதல் டாட் காம், மந்திரன், ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ருதிக்கு இது 7வது படம்.

சஞ்சய் ராம் இயக்கும் இந்தப் படத்தின் சூட்டிங் நீலாங்கரையில் நடந்து கொண்டிருந்தபோதே அலைகள் மிக பயங்கரமாக எழுப்பின. ஆனாலும் அதை பொருட்படுத்தாது சூட்டிங்கை நடத்திக் கொண்டிருந்தனர்.

கடலின் மிக அருகே ஸ்ருதி ராஜ் நடப்பது ேபான்ற ஒரு காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது மிகப் பெரிய அலை அவரை தூக்கி வீசியது. அடுத்த அலை அவரை கடலுக்குள் இழுத்தது. நிலை தடுமாறிய ஸ்ருதி உதவி கேட்டு அலற, நிலைமையை உணர்ந்த சில மீனவர்கள் கடலுக்குள் பாய்ந்து ஸ்ருதியை மீட்டு கரைக்கு இழுத்து வந்தனர்.

பயத்தில் மயங்கிவிட்ட ஸ்ருதியை உடனே மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு சூட்டிங்கை பேக்-அப் செய்தார்களாம்.

இப்போது நலமுடன் இருக்கிறாராம் ஸ்ருதி.

No comments: