
நடிப்பழகி இல்லை நமீதா. ஆனாலும், ரசிகர்களை துடியாய் துடிக்க வைக்கிற விஷயத்தில் அவர் ஒரு சின்ன சிலுக்கு! அவருடைய பரந்த மனசையும் பாடாய் படுத்திவிட்டது சமீபத்தில் வந்த அழகிய தமிழ் மகன். விஜயுடன் ஜோடி சேர அழைக்கிறார்கள் என்றதும், பல படங்களை தவிர்த்துவிட்டு கால்ஷீட்டை வாரி வாரி வழங்கினாராம். அந்தோ பரிதாபம்! படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவரை காண்பித்திருக்கிறார்கள். ஆசை ஆசையாக தியேட்டருக்கு போன நமீக்கு எடுக்கப்பட்ட பல காட்சிகள் இல்லாமல் போனதில் வருத்தமோ வருத்தம்.
வருத்தத்தையெல்லாம் வார்த்தைகளாக்கி அப்படத்தின் இயக்குனர் பரதனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டாராம். 'கடைசியில் நீங்களும் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்தியதற்கு நன்றி' என்று முடிகிறதாம் அந்த எஸ்.எம்.எஸ்.
நமீதா அனுப்பிய எஸ்.எம்.எஸ்சில் நாலு சொட்டு கண்ணீர் இருந்தால் எப்படியிருக்கும்? துடித்துப்போன பரதன், அவரை சமாதானப்படுத்தி பதிலுக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்சில், அடுத்த படத்தில் இந்த குறைகள் சரி செய்யப்படும் என்று உறுதியளித்திருக்கிறாராம். ஊர்வசி விருது வாங்கி தருவது மாதிரி ஒரு கனமான(?) பாத்திரம் இருப்பவர்கள் நமீயை அணுகலாம்!

No comments:
Post a Comment