ஓம் ஷாந்தி ஓம் படத்தில் நடித்தாலும் நடித்தார் நடிகர் ஷாருக் கான் மற்றும் இயக்குனர் பார்ஹாவின் மிகப் பெரிய விசிறியாகிவிட்டார் தீபிகா படுகோண். எல்லோரிடமும் இவர்களைப் பாராட்டி மகிழும் தீபிகா, இந்த இருவரும் என் குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி என்று புளகாங்கிதமடைகிறார்.கர்நாடகத்தைச் சேர்ந்தவரான தீபிகா மாடலிங் செய்ததோடு ஆரம்பத்தில் ஒரு சில கன்னடப் படங்களிலும் நடித்து வந்தார். திடீரென ஹிேமஷ் ரேஷ்மய்யாவின் இந்தி வீடியோ ஆல்பங்களில் தீபிகா இடம் பிடிக்க, அந்த ஆல்பங்கள் சூப்பர் ஹிட்டாக, அடுத்ததாக பாலிவுட் அரவணைத்துக் கொண்டுவிட்டது.
அவரது படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிசில் வெல்லவே தயாரிப்பாளர்கள் தீபிகாவுக்கு நிரந்தர சிவப்பு கம்பளம் விரித்து விட்டனர். அந்த வரிசையில் ஷாருக் கானுடன் இவர் நடித்த ஓம் சாந்தி ஓம் படும் வெற்றி பெற்றுவிட்ட நிலையில் தீபிகாவின் மார்க்கெட் படு உச்சத்துக்குப் போய்விட்டது.
மாடலிங் செய்தபோது சில லட்சங்கள் தரவே யோசித்த நிறுவனங்கள எல்லாம் இப்போது ஒரு விளம்பரத்துக்கு தீபிகாவுக்கு ரூ. 80 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை தர தயாராக உள்ளனவாம்.
இதனால் மகிழ்ச்சியில் திளைக்கும் தீபிகா, தனக்குக் கிடைத்த இந்த பெயர், புகழுக்கு எல்லாம் ஓம் சாந்தி ஓம் பட இயக்குனர் பர்ஹாவும் ஷாருக்கும் தான் காரணம் என்கிறார். அவர்கள் என்னிடம் காட்டிய அன்பும், தந்த ஆதரவும் மறக்க முடியாதது. அவர்கள் என் குடும்ப உறுப்பினர்கள் மாதிரி என்கிறார்.

No comments:
Post a Comment