
கொசுக்கடி, கரப்பான் கடிக்கெல்லாம் பொதுநல வழக்கு போடும் புண்ணியவான்கள் இதுக்கும் ஒரு வழக்கு போட்டால் தேவலாம். எதுக்கு? ரீமிக்ஸ் என்ற பெயரில் நல்ல நல்ல பாடல்களை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு!
இதுக்கு பேர் போன நம்ப ஊர் இசையமைப்பாளர்கள் இனிமேலாவது நிறுத்திக் கொள்வார்களா தெரியாது. ஆனால், நிறுத்தியே விட்டார் ஒரு முன்னணி இசையமைப்பாளர். தெலுங்கில் இசை கட்டி பறக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்துதான் அவர். தமிழில் கந்தசாமி, சந்தோஷ் சுப்ரமணியம், இனிமேல் எடுக்கப்படவிருக்கும் விஜயின் புதிய படம் என்று தமிழிலும் சவுண்ட் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரசாத், காதில் தேன் பாயும் செய்தியன்றை சொல்லியிருக்கிறார்.
நான் தற்போது இயக்கி வரும் எந்த படத்திலும் ரீமிக்ஸ் இல்லை! தேவி ஸ்ரீ பிரசாத்தின் இந்த அறிவிப்பு, பழைய பாடல்களுக்குள் மூழ்கி கிடக்கும் நம்ப ஊர் இசையமைப்பாளர்களின் காதில் விழுந்தால் நன்றாக இருக்கும்

No comments:
Post a Comment