Tuesday, November 27, 2007

தண்டனையும், வெகுமதியும்! -மிருகம் படத்தை வாங்கிய தலைவர


மிருகம் பட விவகாரத்தில் டைரக்டர் சாமிக்கு ஓராண்டு தடை விதித்தது தயாரிப்பாளர் சங்கம். நடிகை பத்மபிரியாவிடம் மன்னிப்பும் கேட்க சொல்லி சாமிக்கு கடும் தண்டனை கொடுத்தது. ஆனால், பதவி வேறு, தொழில் வேறு என்பதை பெருந்தன்மையோடு நிருபித்திருக்கிறார் தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன். விநியோகஸ்தராகவும் இருக்கிற இவர், மிருகம் படத்தின் என்.எஸ்.சி ஏரியாவை வாங்கியிருக்கிறார்.

படத்தின் டிரெய்லர் வெளியான நாளில் இருந்தே மிருகத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். என்.எஸ்.சி ஏரியாவை வாங்க பல விநியோகஸ்தர்கள் முயன்று வந்தபோதிலும், இராம.நாராயணன் கேட்கிறார் என்றதும், சில லட்சங்கள் குறைவாகவே கொடுக்க முன் வந்தார் அப்படத்தின் தயாரிப்பாளர்.

பாடல் காட்சிகளை பார்த்துவிட்டு டைரக்டர் சாமியை அழைத்து பாராட்டியும் இருக்கிறார் இராம.நாராயணன்.

No comments: