Sunday, November 18, 2007

கணவர் ஒத்துழைப்பு-மாளவிகா மகிழ்ச்சி



சினிமா உலகில் நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவரை அம்மா, அக்கா, நாத்தனார் ரோல்களுக்கு ரிசர்வ் செய்துவிடுவார்கள்.

ஹீரோயின் சான்ஸ் தர மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், குத்து பாட்டுக்குக் கூட கூப்பிட மாட்டார்கள் என்பது தான் நிஜம்.

ஆனால் இந்த விஷயத்தில் மாளவிகாவிடம் மட்டும் விதி விலக்காக நடந்து ெகாண்டுள்ளது கோலிவுட்.

சுமேஷ் மேனனை எந்த நேரத்தில் திருமணம் செய்தாரோ அப்போதிருந்து அவரது வீட்டுக் கதவை பட வாய்ப்புகள் வந்து தட்டிக் கொண்டே இருக்கிறதாம்.

இதற்கெல்லாம் தனது கணவர் தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்கிறார் மாளவிகா.

தொடர்ந்து நடிக்குமாறு அவர் தான் ஊக்குவிக்கிறாராம். அது எந்த ரோலாக இருந்தாலும் சரி, எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் சரி.

திரைப்படத் துறையில் மேக்கப் மேன், காஸ்டியூம் டிசைனர் என எல்லோருமே ஆண்கள் தான். ஆனாலும் என் கணவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதில்லை.

நான் டூ பீஸ், சிங்கிள் பீஸ் என எப்படி கவர்ச்சியாக நடித்தாலும் அவர் ஒன்றுமே சொல்வதில்லை.

இல்லற வாழ்க்கையையும் தொழிலையும் அமைதியாக நல்ல முறையில் நடத்திச் செல்ல அவர் தான் எனக்கு முழு உதவியாக இருக்கிறர். என் கணவர் அந்தளவுக்கு மெச்சூர் ஆனவர் என்கிறார் மாளவிகா.

குருவி படத்தில் நடிக்க திரிஷா முட்டி மோதி தான் நாயகி வாய்ப்பை தக்க வைக்க முடிந்தது. ஆனால் குத்துப் பாட்டுக்கு மாளவிகா தான் வேண்டும் என்று அடித்துச் சொன்னது விஜய் தானாம்.

No comments: