2001-ம் ஆண்டு வெளிவந்த காற்றுக்கென்ன வேலி படத்திற்கு கனடா நாட்டை சேர்ந்த இன்டிபெண்டன்ட் ஆர்ட் பிலிம் சொசைட்டி என்ற அமைப்பு விருது வழங்குகிறது.
உள்ளக்கடத்தல், ரசிகர்மன்றம் போன்ற படங்களை இயக்கிய புகழேந்தி தங்கராஜின் முதல் படைப்பு காற்றுக்கென்ன வேலி. ஈழத்திலிருந்து இந்தியா வரும் பெண் போராளிக்கும், இங்கே அவளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்படும் காதலை மிக அழகாக சொல்லியிருந்தார் புகழேந்தி.
'காற்றுக்கென்ன வேலி' படத்தை வெளியிட அப்போது தணிக்கை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததையும், மேல் முறையீட்டுக்கு அனுப்பிதான் சென்சார் சர்டிபிகேட் வாங்கப்பட்டது என்பதையும் ரசிகர்கள் எளிதில் மறந்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் தணிக்கை குழுவினரின் கெடுபிடியை கண்டித்து பிலிம்சேம்பரின் முன் அப்போது உண்ணாவிரதமும் இருந்தார் புகழேந்தி. இந்நிலையில் இந்த படத்திற்கு கனடாவை சேர்ந்த அமைப்பு விருது கொடுத்து கௌரவிப்பது வெந்த புண்ணில் மருந்து தடவுவதுபோல் அமைந்திருக்கிறது. விரைவில் கனடா சென்று மேற்படி விருதை பெற்றுக் கொள்ளவிருக்கிறார் அவர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment