Friday, November 16, 2007

விஷ்ணுவர்த்தனுடன் அர்ஜூன

அஜீத்தை வைத்து பில்லாவை வெற்றிகரமாக இயக்கியுள்ள விஷ்ணுவர்த்தன் அடுத்து அர்ஜூனை வைத்து சர்வம் என்ற படத்தை இயக்கப் போகிறார். இதில் விஷ்ணுவின் விருப்ப நாயகன் ஆர்யாவும் இடம்பெறுகிறார்.

சில நாட்களுக்கு முன்பு அய்ங்கரண் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் சர்வம் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் இப்போது அதில் மாற்றம். சூர்யா படத்தில் இல்லை, மாறாக அர்ஜூன் ஹீரோவாகியுள்ளார். படத்தில் 2வது ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார்.

சூர்யா ஏன் படத்தில் இடம் பெறவில்லை என்று கோலிவுட்டில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் படத்தின் கதை பிடிக்கவில்லை என்று கூறி சூர்யாவே விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.

சூர்யா தற்போது வாரணம் ஆயிரம் பட ஷூட்டிங்குக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

சர்வம் படத்தில் விஷ்ணுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா, கேமராமேன் நீரவ் ஷா ஆகியோரும் இருப்பார்கள் எனத் தெரிகிறது. இந்தப் படம் மியூசிக்கல் திரில்லராக இருக்குமாம். படம் முழுவதும் மூணாரில் எடுக்கப்படும் எனவும் தெரிகிறது. டிசம்பர் மத்தியில் படப்பிடிப்பு ஆரம்பமாகுமாம்.

No comments: