
பீமா எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால் இயக்குநர் லிங்குச்சாமி அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார். பருத்தி வீரன் கார்த்தி, நயனதாராவை வைத்து புதிய படத்தை, சொந்தப் படமாக எடுக்கப் போகிறார்.
லிங்குச்சாமியின் இயக்கத்தில் சீயான் விக்ரமின் சிலிர்க்க வைக்கும் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீமா. ஆனால் படம் எப்போது பொட்டியை விட்டு வெளியே வந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று தெரியவில்லை.
இந்த நிலையில் பீமா இயக்குநர் லிங்குச்சாமி அடுத்த படத்தை ஆரம்பிக்கவுள்ளார். இதை தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் சொந்தமாக தயாரிக்கிறார்.
இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயனதாரா நடிக்கவுள்ளார்.
பில்லாவில் நயனதாரா பிரமாதமாக நடித்துள்ளார், படு அழகாக காட்சியளிக்கிறார் என்ற தகவல் பரவியதும் நயனதாராவைப் புக் பண்ண கோலிவுட்டில் பெரும் போட்டியே ஏற்பட்டுள்ளதாம். அதேபோல தெலுங்கிலும் நயனதாராவுக்கு புது டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாம்.
இந்த நிலையில்தான் லிங்குச்சாமி நயனதாராவை அணுக அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தனுஷுடன் யாரடி நீ மோகினி படத்திலும், விஷாலுடன் சத்யம் படத்திலும் நயனதாரா நடித்து வருகிறார். அதேபோல கார்த்தி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

No comments:
Post a Comment