
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயம்கொண்டான் படத்தில் பாவனா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் லேகா வாஷிங்டன்தான் 2வது நாயகி.
கடந்த ஆண்டு வெளியான எம் மகன் படத்துக்குப் பின்னர் சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்த படத்திற்குத் தயாராகியுள்ளது. மணிரத்தினத்தின் உதவியாளரான ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஜெயம் கொண்டான் என்று புதிய படத்தை எடுக்கவுள்ளது சத்யஜோதி பிலிம்ஸ்.
உன்னாலே உன்னாலே நாயகன் வினய் இப்படத்தின் ஹீரோ. அவருக்கு ஜோடியாக பாவனா நடிக்கிறார். 2வது நாயகியாக லேகா நடிக்கிறார்.
ஜெயம்கொண்டான் படம் குறித்து பாவனா கூறுகையில், இப்படத்தில் நான் நாயகியாக நடிக்கிறேன். இன்னொரு ஹீரோயினும் படத்தில் இருக்கிறார். இருப்பினும், எனது கேரக்டர் எனக்கு பிடித்துள்ளது, திருப்தியாக உள்ளதால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இதில் நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை. ஆனால் அனைவரையும் கவரும் வகையில் நடிக்கப் போகிறேன் என்றார்.
நேற்று முதல் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். பட பூஜையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கே.ஆர்.ஜி,, இயக்குநர்கள் மணிரத்தினம், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment