Monday, November 12, 2007

உளி கொடுத்த வலி! -வினித்திற்கு நேர்ந்த விபரீதம்!

கலைஞரின் கைவண்ணத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் 'உளியின் ஓசை' படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் சிற்பி வேடத்தில் வினித்தும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சாவ்லாவும் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்காக ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஆர்ட் டைரக்டர் மகி பிரமாண்டமான செட் ஒன்றையும் போட்டிருக்கிறார். சிற்பங்களை செதுக்கும் காட்சி எடுக்கப்பட்டு வருவதால் பாறாங்கற்களை கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன் வினித் சிற்பம் செதுக்கிக் கொண்டிருப்பது போலவும், அவருக்கு மாடலாக கீர்த்தி சாவ்லா போஸ் கொடுப்பது போலவும் எடுத்தார்கள். காட்சிப்படி, உளியை வேகமாக அடிக்கும்போது கல்லிலிருந்து ஒரு துகள் பறந்து வந்து வினித் கண்களில் விழ வேண்டும். கீர்த்தி சாவ்லா ஓடிவந்து அவரது கண்களை தன் இதழ்களால் ஊத வேண்டும்.

உளியை பாறாங்கல்லில் வைத்து வேகமாக அடித்த வினித்தின் கண்களில் பெரிய துகள் ஒன்று நிஜமாகவே பறந்து வந்து பதம் பார்க்க, துடித்துப் போய்விட்டாராம் வினித். பதைபதைத்து போய்விட்டது யூனிட் முழுவதும். உடனடியாக வினித்திற்கு முதலுதவி செய்யப்பட்டிருக்கிறது. சில மணி நேரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. காட்சி சிறப்பாக வந்ததில் கண்ணில் பட்ட வலியை மறந்தாராம் வினித். உதடுகளால் ஊதி உஷ்ணத்தை குறைக்க வேண்டிய கீர்த்தி, செய்வதறியாது திகைத்து நின்றதுதான் பரிதாபம் என்கிறார்கள்.

இதுவே வேறு ஹீரோக்களுக்கு நடந்திருந்தால், விஷயத்தை 'ஊதி' பெரிதாக்கி இருக்கமாட்டார்களா?

No comments: