
திருக்கோவிலூர்: பூமிக்குள் பள்ளம் தோண்டி சித்து வித்தை செய்யப் போவதாக கூறிய சாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருக்கோவிலூ ரை அடுத்த வடகரைத்தாழனுர், கடகால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(37). தமிழ் ஞானசித்தர் என்ற புனைப் பெயருடன் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், நீண்ட ஆயுள் பெறவும் சித்து வித்தைகள் தெரிந்து வைத்திருப்பதாக கூறி வருகிறார். இவர் அஸ்டமா சித்து என்ற எட்டு வித்தையில் ஒரு சித்து வித்தையான பூமிக்கடியில் மூச்சை அடக்கிக் கொண்டிருக்கும் கலையை செய்து காண்பிக்கப் போவதாக கூறினார்.
இதற்காக நேற்று காலை பூமியில் பள்ளம் தோண்டி அதனுள் சென்று மூச்சை அடக்கிக் கொண்டு இருக்கப் போவதாக கூறினார். கிராமத்தில் மாரியம்மன் கோவில் எதிரே பொதுமக்கள் காலை திரண்டனர். ஜிப்பாவுடன் இடுப்பில் துண்டு கட்டி, கழுத்தில் மணியுடன் கோவில் முன் வந்தார் சாமியார், பூமி கடினமாக இருப்பதால், வேறு இடத்தில் பள்ளம் தோண்டி சித்து வித்தை காட்டப் போவதாக கூறி நேரத்தை கடத்தினார்.
காத்திருந்த நிருபர்களிடம் போட்டோக்களை கொடுத்து சுய புராணம் பாடிக் கொண்டிருந்தார். அரகண்ட நல்லூர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

No comments:
Post a Comment