சில விதிகள் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் போலிருக்கிறது. நார்வே நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர் ஒருவர் இயக்கும் படத்தின் கதையை கேட்டால் இக்கட்டுரையில் முதல் வரியைதான் முடிவாக ஏற்றுக் கொள்வீர்கள். தாதாவாக வாழும் ஒருவன் அந்த வாழ்க்கையை விட்டு திருந்தி வாழ நினைத்தாலும் அவனை அந்த சமுதாயம் வாழ விடாது. இதுதான் அந்த நார்வே தமிழர் இயக்கப்போகும் படத்தின் ஒரு வரி கதை! (நம்ம ஊரிலும் இதே கதைதானே மச்சி)
தொப்புள் கொடி, முற்றத்து மண், நிஜங்கள் உள்ளிட்ட 9 குறும்படங்களை தயாரித்தவர் நார்வே தமிழரான துரூபன். தமிழ்சினிமா மீது ஏற்பட்ட காதலின் காரணமாக தயாரிப்பாளராகவும் மாறிவிட்டார் துரூ. இவர் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் மீண்டும் என்ற படத்திற்கு ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் கூட துரூபனேதான்!
முக்கிய பாத்திரங்களில் எல்லாம் நார்வே தமிழர்களே நடிக்க, ஹீரோயின் ஸ்வேதா பாரதி மட்டும் நம்ம ஊரு ஸ்வீட் சிக்ஸ்டீன்! ஆதி படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருக்கிறாராம். இவரைப்போலவே படத்தின் வேலையில் பாதியை சுமக்கும் இன்னொரு தமிழ்நாட்டுக்காரர் வி.எஸ்.உதயா. கண்டேன் சீதையை, பீஷ்மர், காசு போன்ற படங்களின் இசையமைப்பாளர். விரைவில் வெளிவர இருக்கும் காதல் கடிதம் படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளர். இந்த படத்திற்காக 'மீண்டும' ஒரு முறை நார்வே சென்று 30 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு திரும்பியிருக்கிறார். இதற்கு முன் இவர் நார்வே போனதற்கு காரணம், இவர் இசையமைப்பில் உருவான இரண்டு மியூசிக் ஆல்பங்கள் வெளியீட்டு விழா!
கால காலமாக தமிழ்நாட்டிலிருந்து வருகிற படங்களையே பார்த்து பார்த்து சலித்துப்போயிருக்கிறோம். ஏன் நாங்களே தயாரிக்க கூடாது? இதுதான் நார்வே தமிழர்களின் புதிய முயற்சிக்கு காரணமாம்!
இத்தனை வருடங்களாக தமிழ்நாட்டு உப்புமாவையே திரும்ப திரும்ப ருசித்துக் கொண்டிருந்த (வேறு வழியில்லாமல்) இவர்கள், இப்போது கையில் உபகரணங்களோடு களத்தில் இறங்கிவிட்டார்கள். கோலிவுட் சமையல்காரர்கள் கைப்பக்குவத்தை காப்பாற்றிக் கொண்டால்தான் பிழைக்கலாம் போலிருக்கிறத
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment