Friday, November 16, 2007

வீட்டுக்கு போக மாட்டேன் - ஸ்ரீஜா

எனது வீட்டுக்கு இனி போகும் எண்ணம் இல்லை. முதலில் என்னைப் புரிந்து கொண்டு எனது குடும்பத்தினர் எனது திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா கூறியுள்ளார்.

சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா சில மாதங்களுக்கு முன்பு தனது காதலர் சிரீஷ் பரத்வாஜை ரகசியத் திருமணம் செய்து கொண்டு சிரஞ்சீவி குடும்பத்தினரையும், ரசிகர்களையும், ஒட்டுமொத்த ஆந்திராவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

சில வார டெல்லி வாசத்திற்குப் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஹைதராபாத் திரும்பியுள்ளார். தனது கணவர் வீட்டில் தற்போது வசித்து வரும் ஸ்ரீஜா, தனது குடும்பத்தினர் திருமணத்தை அங்கீகரிக்கும் வரை வீட்டுக்கே போகப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

கணவர் சகிதம், ஸ்ரீஜா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றினால் எந்த பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை. ஆனால் அந்த வகையில் என்னுடைய பெற்றோர் திருமண விஷயத்தில் சரியாக நடந்து கொள்ளவில்லை.

இப்போது எனது தந்தை என் திருமணத்தை ஏற்றுக் கொண்டதாக பத்திரிக்கைகள் வாயிலாக அறிவித்திருந்தாலும், இனிமேல் நான் எக்காரணம் கொண்டும் எனது வீட்டுக்கு போகமாட்டேன். எனது கணவரின் வீட்டில் தான் வாழ்வேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.

No comments: