Thursday, November 15, 2007

நானா? வினய்யா? -லேகாவிடம் சிம்பு எரிச்சல்!


ஏற்கனவே எகத்தாளம், இனி எதுக்கு புதுத்தாளம்? தன்மீது எரிச்சலில் இருக்கும் சிம்புவின் மீது மேலும் ஒரு அம்பை தொடுத்திருக்கிறார் லேகா. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ஜெயங்கொண்டான் படத்தில் வினய்க்கு தங்கச்சியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

தமிழ்சினிமாவில் தங்கச்சிகளுக்கு ஹீரோயின் புரமோஷன் கொடுக்கவே மாட்டார்கள். கொஞ்சம் வயாசானாலும் நேரடியாக அக்கா, அம்மா வேடம்தான்! நிலைமை அப்படியிருக்க வினய்க்கு தங்கச்சி என்றால், கெட்டவனுக்கு மேலும் கெட்ட கோபம் வராதா? அப்படித்தான் வந்துவிட்டது சிம்புவுக்கும்.

போனை எடுத்து பொறிந்துவிட்டாராம் லேகாவிடம். என்னுடைய கெட்டவனா? வினயுடைய ஜெயங்கொண்டானா? நீயே முடிவு செய்து கொள் என்று கட் பண்ணிவிட்டாராம் தொலைபேசியை. இந்த படத்தில் எனக்கு தங்கச்சி வேஷம் இல்லை. பாவனாவுக்கும் எனக்கும் ஈக்குவல் ரோல் என்றெல்லாம் சொல்ல நினைத்த லேகா, கண்கலங்கி நிற்கிறார்.

தங்கச்சிகளுக்கெல்லாம் தாலாட்டு பாடுகிறார் அப்பா. தங்கச்சிகளை காய்ச்சி எடுக்கிறார் பிள்ளை! என்ன்ன்ன்ன கொடுமை சரவணன் இது?

No comments: