Thursday, November 29, 2007

மோகன்லாலும், குஷ்பு, சீதாவும்!



மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன், தமிழில் நாயகி அந்தஸ்திலிருந்து ஓய்வு பெற்று விட்ட முன்னாள் நாயகிகளான குஷ்பு, சீதா, மோஹினி ஆகியோர் சேர்ந்து நடிக்கவுள்ளனர். இளம் தலைமுறை நாயகி மீரா ஜாஸ்மின் ஹீரோயினாக நடிக்கிறார்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு பல நாயகிகள் வந்து போவதைப் போல அவ்வப்போது தமிழிலிருந்தும் நாயகிகள், நடிகர், நடிகைகள் மலையாளத்தில் நடிப்பது வழக்கம்.

சில வருடங்களுக்கு முன்பு மம்முட்டியுடன் இணைந்து குஷ்பு கையொப்பு என்ற படத்தில் நடித்தார். அப்படத்திற்காக அவருக்கு கேரள அரசின் சிறந்த குணச்சித்திரை நடிகைக்கான விருதும் கிடைத்தது. அதன் பின்னர் மோகன்லாலுடன் அங்கிள் பன் என்ற படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்திற்குப் போகிறார் குஷ்பு. இம்முறையும் மோகன்லாலுடன்தான் அவர் ஜோடி போடுகிறார்.

இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். சத்யன் அந்திக்காடு இயக்கும் இப்படத்தில் குஷ்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் தவிர தமிழில் ஏற்கனவே ரிட்டயர்ட் ஆகி விட்ட சீதா, மோகினி ஆகியோரும் உள்ளனர்.

புதிதாக திருமணமாகும் தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் இப்படத்தின் கதை. அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கும் இப்படத்தில் முகேஷும் இருக்கிறார்.

ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கி மலையாளப் புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்கின்றனர்

No comments: