Sunday, November 18, 2007

தினந்தோறும் மீன் குழம்பு விருந்து -நாயகர் வலையில் விழுந்த நாயகி


அவதார புருஷரின் படம் நாளுக்கு நாள் பரபரப்பாக வளர்ந்து வருகிறது. பல கோடிகளில் உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தை பார்ப்பதற்கு தமிழ்நாட்டில் அத்தனை வி.வி.ஐ.பி களும் துடித்துக் கொண்டிருக்க, முக்கியமான இருவருக்கு மட்டும் சில காட்சிகளை போட்டு காட்டியிருக்கிறார்கள்.

பார்த்த இருவருமே வாயடைத்து போனார்களாம். இப்படி வி.வி.ஐ.பி களை வாயடைக்க வைத்த அவதாரபுருஷர், இன்னொரு விஷயத்தையும் நாள் தவறாமல் செய்து, வாயடைத்து போக வைக்கிறார் படப்பிடிப்பு குழுவினரை.

படத்தில் தன்னுடன் ஜோடி சேர்ந்திருக்கும் அந்த மூன்றெழுத்து ஹீரோயினுக்கு தினமும் தன் வீட்டிலிருந்தே மதிய உணவை வரவழைத்து விடுகிறார். மீன், இறால் என்று சுவை கூட்டும் இந்த ஐட்டங்களை ருசி பார்க்கும் நடிகை கொஞ்சம் கொஞ்சமாக நடிகரின் அன்பில் விழுந்து கொண்டிருக்கிறாராம். இதை கட்டுப்படுத்த முடியாமல் பெற்ற மகளை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறாராம் தாடிக்கார அப்பா! அடக்கடவுளே

No comments: