
நிலம் வாங்கிய விவகாரத்தில் இந்தி நடிகை ராணி முகர்ஜியிடம் ரூ. 33 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ஷிர்டி அருகே உள்ள ஒரு வீடு கட்ட விரும்பினார் ராணி முகர்ஜி. இதற்காக சம்பத் மோரே என்பவரிடமிருந்து கடந்த 2005ம் ஆண்டு 11 ஆயிரம் சதுர அடி நிலத்தை அவர் வாங்கினார்.
நிலம் வாங்கியபோது பதிவுக்காக தாசில்தார் அலுவலகத்தில் ரூ. 1.32 லட்சம் பணம் கட்டியுள்ளார் ராணி.
ஆனால் இப்போதுதான் அந்த நிலம் அரசால் விவசாயம் செய்வதற்கு தானமாக வழங்கப்பட்ட இடம், வேறு யாருக்கும் விற்கப்பட முடியாது என்பது ராணிக்குத் தெரிய வந்துள்ளது. இந்த மோசடியால் ராணி முகர்ஜிக்கு கிட்டத்தட்ட ரூ. 34 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.
இந்த சிக்கலிலிருந்து தன்னை மீட்கக் கோரி மராகாஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்கை ராணி முகர்ஜி சந்தித்து முறையிட்டுள்ளார். முதல்வரும், அமகதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் எப்படி இந்த நிலம் விற்கப்பட்டது, வாங்கப்பட்டது என்பது குறித்து விளக்குமாறு கூறி ராணி முகர்ஜிக்கும், நிலத்தை விற்ற நபருக்கும் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விவசாய நிலத்தை வாங்கி ஏமாந்த ராணி முகர்ஜி விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment