அழகிய தமிழ் மகன் படத்தின் கதையை எனது ரசிகர்கள் விரும்பவில்லை, அதை ஏற்கவில்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்து, தீபாவளிக்கு ரிலீஸான அழகிய தமிழ் மகன் தீபாவளி ரேஸில் பிந்தியுள்ளது. இப்படத்தின் கதையும், விஜய்யின் கேரக்டரும் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்று பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
இதை விஜய்யும் ஆமோதித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், இயக்குநர் (பரதன்) என்னிடம் கதையைச் சொன்னபோது இது வித்தியாசமான படமாக இருக்கும் என நினைத்தேன். அதனால்தான் இந்தப் படத்தை ஒத்துக் கொண்டு நடித்தேன்.
படம் குறித்த அறிவிப்பு வெளியான பிந்னரும் கூட, அனைவரிடமும், இது எனது வழக்கமான படம் அல்ல, வித்தியாசமான படம் என்றுதான் சொல்லி வந்தேன். இதைப் பார்க்க மனதளவில் தயாராகுங்கள் என்றும் கூறி வந்தேன்.
இப்போது படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு இரு விதமான ரிசல்ட் (ஆதரவு, அதிருப்தி) கிடைத்துள்ளதை ஒத்துக் கொள்கிறேன். இருப்பினும் 2, 3 தடவை படத்தைப் பார்த்த பின்னர் எனது நடிப்பை பாராட்டத் தொடங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார் விஜய்.
அதேசமயம், வெளிநாடுகளில் அழகிய தமிழ் மகன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் சந்தோஷமாக உள்ளனராம்.
வேல் படம் தீபாவளி ரேஸில் முந்தி விட்டதாக கூறப்படுவது குறித்து விஜய் கூறுகையில், உடனடியாக எதையும் கூற முடியாது. இப்போதுதான் படங்கள் ஓட ஆரம்பித்துள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம். 2வது வார இறுதியில்தான் நிலைமை தெளிவாகத் தெரிய வரும் என்றார் விஜய்.
படத்தின் கதை ரசிகர்களுக்குத் திருப்தி இல்லை என்று விஜய் கூறினாலும் கூட, பாடல்களும், இசையும் பிரமாதமாக வந்திருப்பதாக சந்தோஷத்துடன் கூறுகிறார்.
நிச்சயம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். குறிப்பாக எனது அறிமுகப் பாடலில் இசை பிரமாதமாக வந்துள்ளது. உலகம் முழுவதும் இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment