
சின்னத்திரைக்கு பேட்டியே கொடுக்க மாட்டேன் என்று பல வருடங்களாக பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த விஜயகாந்த், அரசியல் கட்சி துவங்கியபின் தன் கொள்கைகளை மாற்றிக் கொண்டார். இப்போது அவருடைய அரசியல் பேட்டிகளில் தவறாமல் முன்னணி சேனல்களின் மைக்குகளுக்கும் இடம் உண்டு. விஜயகாந்த்தை போலவே பிடிவாதம் பிடித்த இன்னோரு நடிகரான அஜீத்தும் தன் கொள்கையை தளர்த்தியிருக்கிறார்.
கமல், விஜய், போன்ற முன்னணி நடிகர்களை நிலையத்திற்கே வரவழைத்த சில முன்னணி சேனல்கள், அஜீத் விஷயத்தில் பலமுறை முயன்று தோற்றுப் போனது. இதெல்லாம் நேற்றைய சங்கதி. இன்று நிலைமையே வேறு...
கலைஞர் டி.வி க்கு மிக நீண்ட பேட்டியளித்தார் அஜீத். இதை தொடர்ந்து சன் டி.வி நிலையத்திற்கே சென்று வித்தியாசமான பேட்டி ஒன்றையும் கொடுத்திருக்கிறார். இதெல்லாம் பில்லாவின் ரிலீசுக்காகவா? அதுதான் இல்லை.
தன்னுடைய பேச்சில் வெளிப்படும் நிதானத்திற்கு காரணம், வயது கொடுத்த பக்குவம்தான் என்று தெரிவித்த அஜீத், அதே பக்குவத்தோடுதான் சேனல் விஷயத்திலும் நடந்து கொண்டிருக்கிறார். கலைநிகழ்ச்சிகள், நடிகர் சங்க விழாக்கள் எதிலும் தலைகாட்டும் வழக்கம் இல்லாத அஜீத், மதுரை அன்பு தன்னை மிரட்டிய விவகாரத்தின்போது கூட நடிகர் சங்கத்தின் உதவியை நாடியதில்லை.
தனக்கென்று தனி கூண்டை உருவாக்கிக் கொண்டு அதற்குள்ளேயே உலா வந்த இந்த சிங்கம், முதன் முதலாக கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்திருக்கிறது. இந்த நிலை தொடரவே விரும்புகிறார்கள் ரசிகர்களும்!

No comments:
Post a Comment