
பெண்கள் கூட்டம் அதிகம் வராததால், மிருகம் படத்தின் சிறப்புக் காட்சியை பெண்களுக்காக சென்னையில் ஏற்பாடு செய்துள்ளனராம்.
இயக்குநர் சாமி இயக்கத்தில், புதுமுகம் ஆதி, பத்மப்ரியா நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் மிருகம்.
பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. இருப்பினும் படத்திற்கு பெண்களிடையே சரியான வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை நகரில் பெண்கள் மிருகம் படத்திற்கு வராதது தயாரிப்பாளர் தரப்புக்கு சோர்வைக் கொடுத்துள்ளது.
இதையடுத்து பெண்களைக் கவருவதற்காக பெண்களுக்காகவே சிறப்பு இலவசக் காட்சிக்கு தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய் ஏற்பாடு செய்துள்ளார்.
சென்னை உதயம் தியேட்டரில் 22ம் தேதி பகல் 3 மணிக்கு இந்த இலவச சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காட்சியில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஒரு பெண் துணைக்கு இன்னொரு பெண்ணை அழைத்து வரலாம். அவரும் இலவசமாகவே அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பெண்கள் காட்சியின்போது கண்டிப்பாக ஆண்களுக்கு அனுமதி இல்லையாம்.

No comments:
Post a Comment