கமல் நடிக்கும் தசாவதாரம் முடியும் தறுவாயில் இருக்கிறதாம். இந்தப் படத்திற்கு பின் கமல் உடனடியாக லண்டன் கருணாஸ் தயாரிப்பில் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தை சரண் இயக்குவதாக இருந்தது.
இடையில் இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட இப்போது பி.வாசு கமல் படத்தை இயக்கப் போகிறாராம். கதாநாயகியாக நடிக்க ஸ்ரேயாவை கேட்டிருக்கிறார்கள். அம்மணி சம்பளம் 65 லட்சம் என்று சொல்ல அவரை வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்கள்.
இப்போது த்ரிஷா அல்லது நயன்தாராவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்
Saturday, July 14, 2007
Sunday, July 8, 2007
இணைந்த நண்பர்கள்
இயக்குனர் அமீரும் பாலாவும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள்.
பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அமீர் தனியாக படம் இயக்க வந்தார் இடையில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு ரொம்ப காலம் பேச்சு வார்த்தையின்றி பிரிந்திருந்தனர்.
இப்போது மீண்டும் நண்பர்கள் இணைந்திருக்கிறார்கள். இருவரும் இணைந்து படத் தயாரிப்பு கம்பெனியை ஆரம்பிக்க போகிறார்கள்.
அவர்களின் சொந்த தயாரிப்பிலேயே படங்களை இயக்கி வெளியிட இருக்கின்றனர். அதோடு வெளியில் இருக்கும் திறமையான இளம் இயக்குனர்களுக்கும் தங்கள் தயாரிப்பில் வாய்ப்புதர இருக்கிறார்கள்.
பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அமீர் தனியாக படம் இயக்க வந்தார் இடையில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு ரொம்ப காலம் பேச்சு வார்த்தையின்றி பிரிந்திருந்தனர்.
இப்போது மீண்டும் நண்பர்கள் இணைந்திருக்கிறார்கள். இருவரும் இணைந்து படத் தயாரிப்பு கம்பெனியை ஆரம்பிக்க போகிறார்கள்.
அவர்களின் சொந்த தயாரிப்பிலேயே படங்களை இயக்கி வெளியிட இருக்கின்றனர். அதோடு வெளியில் இருக்கும் திறமையான இளம் இயக்குனர்களுக்கும் தங்கள் தயாரிப்பில் வாய்ப்புதர இருக்கிறார்கள்.
தசாவதாரம் படத்திலிருந்து விலகிய சண்டை பயிற்சியாளர்
தசாவதாரம் படத்தில் மல்லிகா ஷெராவத் சம்பந்தமான சண்டைக் காட்சிகள் செங்கல்பட்டு அருகில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
சண்டை பயிற்சியாளராக கனல் கண்ணன் பணியாற்றிக் கொண்டிருந்தார். கனல் கண்ணன் பயங்கர கோபக்காரர். ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தையும் கட்டுபடுத்தச் சொல்லி தன் உதவியாளர்களையும், கூட்டத்தையும் கெட்ட வார்த்தையில் திட்டி இருக்கிறார்.
அப்படியெல்லாம் கெட்ட வார்த்தையில் பேசாதீங்க என்று கமல் சொல்ல கனல் கண்ணனுக்கும் கமலுக்கு முட்டிக்கொண்டது. இந்தப் படத்தில் என்னால் வேலை செய்ய முடியாது.
வேறு சண்டை பயிற்ச்சியாளரை போட்டுக் கொள்ளுங்கள் என்று இடத்தை காலிபண்ணிவிட்டார். கனல்கண்ணனின் நீண்டநாள் நண்பரான கே.எஸ்.ரவிக்குமார் யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் பேசாமல் இருந்திருக்கிறார்
சண்டை பயிற்சியாளராக கனல் கண்ணன் பணியாற்றிக் கொண்டிருந்தார். கனல் கண்ணன் பயங்கர கோபக்காரர். ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தையும் கட்டுபடுத்தச் சொல்லி தன் உதவியாளர்களையும், கூட்டத்தையும் கெட்ட வார்த்தையில் திட்டி இருக்கிறார்.
அப்படியெல்லாம் கெட்ட வார்த்தையில் பேசாதீங்க என்று கமல் சொல்ல கனல் கண்ணனுக்கும் கமலுக்கு முட்டிக்கொண்டது. இந்தப் படத்தில் என்னால் வேலை செய்ய முடியாது.
வேறு சண்டை பயிற்ச்சியாளரை போட்டுக் கொள்ளுங்கள் என்று இடத்தை காலிபண்ணிவிட்டார். கனல்கண்ணனின் நீண்டநாள் நண்பரான கே.எஸ்.ரவிக்குமார் யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் பேசாமல் இருந்திருக்கிறார்
கதாநாயகியை மாற்றிக் கொண்டிருக்கும் பொல்லாதவன்
பொல்லாதவன் படத்தின் சர்ச்சை ஓயாது போலிருக்கிறது. நீண்ட நாட்களாக ஹீரோயின் கிடைக்காமல் இருந்த பொல்லாதவன் படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தமானார்.
இவர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் கதாநாயகி. இப்போது பேரரசு இயக்கத்தில் பழனி படத்தில் நடிக்கிறார். பொல்லாதவன் படத்திற்காக தனுஷூடன் சேர்ந்து ஃபோட்டோ செஷன் கூட எடுத்துக் கொண்டார்கள்.
ஆனால் தேதி இல்லை என்று இழுத்தடித்திருக்கிறார். வேண்டவே வேண்டாம் என்று அவருக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு, திவ்யா என்று பெயர் மாற்றிக் கொண்ட குத்து ரம்யாவை இப்போது கதாநாயகியாக போட்டிருக்கிறார்கள்.
இவராவது நிலைப்பாரா!
இவர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் கதாநாயகி. இப்போது பேரரசு இயக்கத்தில் பழனி படத்தில் நடிக்கிறார். பொல்லாதவன் படத்திற்காக தனுஷூடன் சேர்ந்து ஃபோட்டோ செஷன் கூட எடுத்துக் கொண்டார்கள்.
ஆனால் தேதி இல்லை என்று இழுத்தடித்திருக்கிறார். வேண்டவே வேண்டாம் என்று அவருக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு, திவ்யா என்று பெயர் மாற்றிக் கொண்ட குத்து ரம்யாவை இப்போது கதாநாயகியாக போட்டிருக்கிறார்கள்.
இவராவது நிலைப்பாரா!
சம்பளத்தை குறைக்கும் படநிறுவனம்
பொம்மரிலு தமிழ் ரீமேக் படத்தை திருட்டு பயலே பட தயாரிப்பாளர் தயாரிக்கிறார். முதல் காப்பி அடிப்படையில் எடிட்டர் மோகன் படத்தை எடுத்து தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்களாம். ஆனால் படத்தின் பட்ஜெட்டை பார்க்கும் போது தயாரிப்பாளரின் வயிற்றில் புளியை கரைக்கிறதாம்.
படத்தின் ரீமேக் உரிமையை ஒரு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர். அடுத்து படத்தின் இயக்குனர் ராஜாவுக்கு சம்பளம் 1 கோடியாம். ஜெயம் ரவிக்கு ஒன்றரை கோடி சம்பளமாம். மற்ற நடிகர்கள் சம்பளம் இல்லாமல் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் பட்ஜெட் மூன்றரைக் கோடியை எட்டியிருக்கிறது.
எப்படியும் படத்தின் பட்ஜெட் 7 கோடியை எட்டும் என்ற நிலையில் படத்தில் வேலை செய்யும் மற்ற டெக்னீஷியன்களின் சம்பளத்தை அடிமாட்டு ரேஞ்சுக்கு பேசுகிறார்களாம். இதென்ன கொடுமைடா!
படத்தின் ரீமேக் உரிமையை ஒரு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர். அடுத்து படத்தின் இயக்குனர் ராஜாவுக்கு சம்பளம் 1 கோடியாம். ஜெயம் ரவிக்கு ஒன்றரை கோடி சம்பளமாம். மற்ற நடிகர்கள் சம்பளம் இல்லாமல் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் பட்ஜெட் மூன்றரைக் கோடியை எட்டியிருக்கிறது.
எப்படியும் படத்தின் பட்ஜெட் 7 கோடியை எட்டும் என்ற நிலையில் படத்தில் வேலை செய்யும் மற்ற டெக்னீஷியன்களின் சம்பளத்தை அடிமாட்டு ரேஞ்சுக்கு பேசுகிறார்களாம். இதென்ன கொடுமைடா!

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பட இயக்குனர் சிம்புதேவன் அடுத்து இயக்கும் படம் அறை 305ல் கடவுள்.
இப்படத்தில் கஞ்சா கருப்பு படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக ஏவிஎம் ல் 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான இந்திரலோகம் செட் அமைத்து கொண்டிருக்கிறார்கள்.
இந்திரலோகத்துக்கு சென்று கஞ்சா கருப்பு அழகிகளுடன் நடனம் ஆடுவதைப் போன்று காட்சி இருக்குமாம்.
இதற்காக மும்பையிலிருந்து பிரமாத அழகிகளை வரவழைத்து இப்பாடல் காட்சியை எடுக்கப் போகிறார்களாம். கஞ்சா கருப்பு யோகத்திற்கு அளவே இல்லை.
மாடர்ன் உடையில் நடிக்க ஆசைப்படும் நடிகைகள்
இப்போதெல்லாம் ஹோம்லியாக நடிக்க ஒன்றிரண்டு கதாநாயகிகள்தான் கிடைக்கிறார்கள். ஆனால் அவர்களும் மாடர்ன் உடை அணிந்து நவநாகரீகமாகவே நடிக்க ஆசைப்படுகிறார்கள். பருத்திவீரன் ப்ரியாமணி கிட்டத்தட்ட ஹோம்லி கதாபாத்திரத்தை வெறுக்கவே செய்கிறார்.
நல்லா மாடர்ன் கேர்ள் கேரக்டர் என்றால் ஆர்வமாக கதை கேட்கிறார். அதேபோல் தூத்துக்குடி கதாநாயகி கார்த்திகா அதற்கு பின் நடித்த பிறப்பு மற்றும் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் நாளைய பொழுதும் உன்னோடு படத்திலும் தாவணி பாவாடை என்பதால் அம்மணி வெறுத்து போய் அலைகிறார். எப்படியாவது மாடர்ன் உடை அணிந்து நடிப்பதே அவரது லட்சியமாக இருக்கிறதாம்.
நல்லா மாடர்ன் கேர்ள் கேரக்டர் என்றால் ஆர்வமாக கதை கேட்கிறார். அதேபோல் தூத்துக்குடி கதாநாயகி கார்த்திகா அதற்கு பின் நடித்த பிறப்பு மற்றும் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் நாளைய பொழுதும் உன்னோடு படத்திலும் தாவணி பாவாடை என்பதால் அம்மணி வெறுத்து போய் அலைகிறார். எப்படியாவது மாடர்ன் உடை அணிந்து நடிப்பதே அவரது லட்சியமாக இருக்கிறதாம்.
வடிவேலுக்கு சரியான போட்டி
வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இந்திரலோகத்தில் அழகப்பன் படத்திற்கும், கஞ்சா கருப்பு நடிக்கும் அறை எண் 305ல் கடவுள் படத்திற்கும் சரியான போட்டி இருக்கும் போலிருக்கிறது. இரண்டு படங்களுக்கும் பிரமாண்டமான செட் போடப்பட்டிருக்கிறது.
இரண்டு படங்களிலும் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இந்திரலோகத்தில் அழகப்பன் வரலாற்று படம் மாதிரியான அமைப்பை கொண்டிருக்கிறது. அறை எண் 305 ல் கடவுள் படம் படத்தின் கதை இன்றைய காலகட்டத்தை குறிப்பதாக இருந்தாலும் கடவுள் மற்றும் பாடல் காட்சிகள் வரலாற்று படத்தை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
யார் முந்த போகிறார்கள் என்று பார்ப்போம்.
இரண்டு படங்களிலும் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இந்திரலோகத்தில் அழகப்பன் வரலாற்று படம் மாதிரியான அமைப்பை கொண்டிருக்கிறது. அறை எண் 305 ல் கடவுள் படம் படத்தின் கதை இன்றைய காலகட்டத்தை குறிப்பதாக இருந்தாலும் கடவுள் மற்றும் பாடல் காட்சிகள் வரலாற்று படத்தை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
யார் முந்த போகிறார்கள் என்று பார்ப்போம்.
பாவனா செல்போனுக்கு தடா?!
துண்டு துக்கடா நட்சத்திரங்கள் கூட இரண்டு, மூன்று செல்போன்களை வைத்துக் கொள்வது இப்போது பேஷனாகிவிட்டது. ஆனால் பாவனாவின் நிலையோ வேறு மாதிரி... இருக்கிற செல்லையும் பிடிங்கி வைத்துக் கொண்டு மொத்தமாக தடா போட்டுவிட்டார் தாய்க்குலம்!
ஏன்? பாவனாவை வைத்து ஏற்கனவே படம் பண்ணின இயக்குனர் ஒருவர் ராத்திரி பகல் பார்க்காமல் போனைப் போட்டு கடலை போட ஆரம்பித்துவிடுகிறாராம்.
பாவனாவும் பதிலுக்கு கடலை போட பயந்துபோய் இப்படியொரு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் பாவனாவை பெத்தவர்கள்! இப்போது சித்திரம் பேசாதபடி பாதுகாப்பு வளையத்தையும் அதிகப்படுத்திவிட்டார்கள்.
ஏன்? பாவனாவை வைத்து ஏற்கனவே படம் பண்ணின இயக்குனர் ஒருவர் ராத்திரி பகல் பார்க்காமல் போனைப் போட்டு கடலை போட ஆரம்பித்துவிடுகிறாராம்.
பாவனாவும் பதிலுக்கு கடலை போட பயந்துபோய் இப்படியொரு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் பாவனாவை பெத்தவர்கள்! இப்போது சித்திரம் பேசாதபடி பாதுகாப்பு வளையத்தையும் அதிகப்படுத்திவிட்டார்கள்.
சென்னைக்கு வெள்ள அபாயம்-ஐ.நா.
உலக வெப்பமயமாதலால் சென்னை மற்றும் மும்பை நகரங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்படும் என்று ஐக்கிய தேச மக்கள் தொகை அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.
வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க பனிக்கட்டிகள் உருகி கடலின் மட்டம் உயரும். கடல் மட்டம் உயருவதால் கடல் எல்லைகள் நீளும். கடற்பகுதிகள் நீண்டால், கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் நிலை உண்டாகும் என்று அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
கடல் மட்டம் அதிகரிப்பதால் நிலத்தடி நீரின் குணமும் மாறிவிடும். நிலத்தடி நீரில் உப்புத் தன்மை அதிகரித்து குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும்.
இந்த பிரச்சினைகளினால் ஏற்கனவே கடும் அவதிக்குள் வாழும் கிராம மக்கள்தான் பெரும் பாதிப்பை அடைவார்கள் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.
கடல் பகுதி நகரங்களுக்கு இந்த நிலை என்றால், டெல்லி போன்ற கடலில் இருந்து அதிக தூரத்தில் உள்ள நகரங்களுக்கு இன்னும் ஒரு படி மேலே போய் கடும் வறட்சியும், அதிக வெப்பநிலையும் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகும்.
தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.
வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க பனிக்கட்டிகள் உருகி கடலின் மட்டம் உயரும். கடல் மட்டம் உயருவதால் கடல் எல்லைகள் நீளும். கடற்பகுதிகள் நீண்டால், கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் நிலை உண்டாகும் என்று அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
கடல் மட்டம் அதிகரிப்பதால் நிலத்தடி நீரின் குணமும் மாறிவிடும். நிலத்தடி நீரில் உப்புத் தன்மை அதிகரித்து குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும்.
இந்த பிரச்சினைகளினால் ஏற்கனவே கடும் அவதிக்குள் வாழும் கிராம மக்கள்தான் பெரும் பாதிப்பை அடைவார்கள் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.
கடல் பகுதி நகரங்களுக்கு இந்த நிலை என்றால், டெல்லி போன்ற கடலில் இருந்து அதிக தூரத்தில் உள்ள நகரங்களுக்கு இன்னும் ஒரு படி மேலே போய் கடும் வறட்சியும், அதிக வெப்பநிலையும் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகும்.
ஆயுதப் போட்டி இந்தியா விரும்பவில்லை : பிரதமர்!
எந்தவொரு நாட்டுடனும் அணு ஆயுதப் போட்டியில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் விஞ்ஞானிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தியா அண்டை நாடுகளுடன் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
இந்தியா நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், அண்டை நாடுகளுடன் நிலவும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண இந்தியா விரும்புவதாக கூறினார்.
சர்வதேச அளவில் நிச்சயமற்ற பாதுகாப்பு நிலவும் சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பு கருதி ஆயுதங்களை தயார்படுத்த வேண்டியிருப்பதாகக் கூறிய மன்மோகன் சிங், எந்தவொரு நாட்டுடனும் ஆயுத போட்டியில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை என்றும் கூறினார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் விஞ்ஞானிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தியா அண்டை நாடுகளுடன் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
இந்தியா நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், அண்டை நாடுகளுடன் நிலவும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண இந்தியா விரும்புவதாக கூறினார்.
சர்வதேச அளவில் நிச்சயமற்ற பாதுகாப்பு நிலவும் சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பு கருதி ஆயுதங்களை தயார்படுத்த வேண்டியிருப்பதாகக் கூறிய மன்மோகன் சிங், எந்தவொரு நாட்டுடனும் ஆயுத போட்டியில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை என்றும் கூறினார்.
வசதியான குடும்பங்களிலும் பெண் கொடுமை!
வசதியான குடும்பங்களிலும் பெண்களுக்கு கொடுமை நடக்கிறது என்று மேயர் சாருபாலா கூறியுள்ளார்.
பன்னாட்டு இன்னர் வீல் சங்க 321வது கிளப் நிர்வாகிகள் கூட்டம், திருச்சியில் நடைபெற்றது. இதில் 27 கிளப்புகளை சேர்ந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 321 இன்னர் வீல் கிளப் தலைவியாக மதுரையை சேர்ந்த ருகிராணி பதவி ஏற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேயர் சாருபாலா ஆர்.தொண்டைமான் பேசம் போது, தமிழகத்திலேயே திருச்சியில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிமகமாக பதிவாகிறது. ஏழை நடுத்தர குடும்பத்தில் மட்டுமல்ல, வசதியான குடும்பத்ததிலும் பெண்கள் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கூறினார்.
குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கும் பொற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டு, பிள்ளைகள் வெளிநாட்டிற்கு சென்றுவிடும் நிலை மாற வேண்டும் என்றும் பேசினார்.
பன்னாட்டு இன்னர் வீல் சங்க 321வது கிளப் நிர்வாகிகள் கூட்டம், திருச்சியில் நடைபெற்றது. இதில் 27 கிளப்புகளை சேர்ந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 321 இன்னர் வீல் கிளப் தலைவியாக மதுரையை சேர்ந்த ருகிராணி பதவி ஏற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேயர் சாருபாலா ஆர்.தொண்டைமான் பேசம் போது, தமிழகத்திலேயே திருச்சியில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிமகமாக பதிவாகிறது. ஏழை நடுத்தர குடும்பத்தில் மட்டுமல்ல, வசதியான குடும்பத்ததிலும் பெண்கள் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கூறினார்.
குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கும் பொற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டு, பிள்ளைகள் வெளிநாட்டிற்கு சென்றுவிடும் நிலை மாற வேண்டும் என்றும் பேசினார்.
வைகை நதிக்கு விடிவு பிறந்தது!
வைகை நதியை சீரமைத்து அது வரும் வழிகளை செம்மைப்படுத்தும் பணிகள் தற்போது துவங்கியுள்ளன.
மதுரை நகருக்குள் வைகை ஆற்றின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள் கான்கிரீட் கட்டிடங்கள் எழுந்தன. இந்த கட்டிடங்கள் வாடகைக்கும் விடப்பட்டன. இப்படி ஆக்கிரமிக்கப்பட்ட வைகை நதி அழகு இழந்தது மட்டுமின்றி, நீர் ஆதாரமும் கெட்டது. இதனை கருத்தில் கொண்டு வைகை நதி சீரமைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது.
வைகை நதி மதுரை நகருக்குள் பாயும் இடங்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் சில மாதங்களுக்கு முன் புல்டோசர் மூலம் அகற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான கான்கிரீட் கட்டிடங்கள் இடித்து தடைமட்டமாக்கப்பட்டன. எவருக்கும் எந்த காரணம் கொண்டும் இரக்கம் காட்டப்படவில்லை. மதுரை நகரின் கிழக்கு பகுதியான செல்லூர், வைகை வடகரை ஒட்டிய பகுதிகள் ஆழ்வார்புரம் போன்ற பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
அதன் பின் வைகை கரையோரம் செம்மண் மூலம் சுவர்கள் எழுப்பினர். அதை சாலையாக மாற்றவும் செய்தனர். நகருக்குள் 10 மைல் தூரத்திற்கு ரோடுகள் எழுப்பியதால் முழுக்க முழுக்க ஆக்கிரமிப்புகள் ஒழிந்தது. இது மத்திய அரசின் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் அரசும் மதுரையை புராதான நகரம் என்று பாதுகாக்க நிதியும் ஒதுக்கியது.
தற்போது மதுரை வைகை ஆற்று சுவர்புறங்களில் கருங்கற்கள் பதிக்கும் பணி துவங்கியுள்ளது. இப்பணி வைகையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி செலவில் துவங்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை சென்ற சில மாதங்களுக்கு முன் தொடங்கவேண்டிய பணியை தற்போது தாமதமாக தொடங்கினாலும் வெகு வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. கருங்கற்கள் மிக வலுவானதாக பதிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒரு அடிக்கு ஒரு அடி கன அளவுள்ள கற்கள் பதிக்கப்படுகின்றன. இதுபோன்ற கன அடி கற்கள் அணைப்பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்படும்.
ஆனால் மதுரை வைகை கரைகளில் பதிப்பதன் நோக்கம். . . சில ஆண்டுகளுக்கு முன் 1994-ல் வெள்ளம் மதுரைக்குள் நுழைந்தபோது மதுரையின் வட பகுதி முழுவதும் நீர் நுழைந்து மதுரையின் ஒரு பகுதியை முழுவதுமாக முழ்கடித்தது. அதுபோன்ற நிலை இனி ஏற்படக்கூடாது என்ற நோக்கில் தற்போது கற்கள் பதிக்கப்படுகின்றன. தொடக்கமாக 800 மீட்டர் தூரத்திற்கு கற்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது.
பின்னர் மற்ற இடங்களிலும் கற்கள் பதிக்கும் பணி நடைபெறும் என்று பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவத்தனர்.
இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க நதியை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. வைகை நதியில் மணல் அள்ளுவதால் நீர் ஆதாரங்கள் கெடுகின்றன. இப்படி மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை நதியில் பல கோடி மதிப்புள்ள மணல் அள்ளப்பட்டதால் அக்டோபரில் வைகையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் ராமநாதபுரம் பாசனத்திற்கு சென்றடையாமலேயே மண்ணிற்காக தோண்டப்பட்ட குழிகளில் தேங்கிவிட்டது.
இப்போதும் வைகையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் ராமநாதபுரம் பாசனத்திற்கு சென்றடையாமலேயே வைகையின் குழிகளில் தேங்கிவிட்டது. தற்போது இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாவண்ணம் இருக்க வைகை ஆற்றில் மணல் அள்ளுபவர்களுக்கு பெருந்தொகை அபராதம் விதிப்பதோடு மணல் அள்ளும் லாரியும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது :
மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றுப்படுகையில் உள்ள குடிநீர் திட்டம், நீh ஆதார அமைப்புகளை கருத்தில் கொண்டு ஆற்றுக்குள் மணல் குவாரிகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி கோச்சடை, கருமாத்தூர், கவரிமான் ஆகிய இடங்களில் ஆற்றுப் படுகையில் மணல் குவாரி அமைத்து மணல் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இப்படி குவாரி அமைக்க உதவிய பட்டா உரிமையாளர்கள் 35 பேருக்கு 4 கோடியே 35 லட்சம் அபாராம் விதிக்கப்பட்டது. இதேபோல வாடிப்பட்டி, சோழவந்தான், தென்கரை ஆகிய பகுதிகளில் மணல் குவாரி ஏற்படுத்தி மணல் திருடிய 34 நில உரிமையாளர்களுக்கு 53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து மணல் குவாரி அமைப்பவர்களை கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மணல் கடத்த பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. சில தினங்களுக்கு முன் 227 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு லாரி மூலம் மணல் கடத்தியவர்களுக்கு 45 லட்சத்து 65 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மதுரை மாவட்ட ஆட்சியர் சேது. ராமசந்திரன் கூறினார்.
தற்போது நவீனமாக வைகை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அமைந்துள்ள கிணறுகளிலிருந்து வியாபார நோக்கில் தண்ணீர் கடத்தப்படுகிறது. இதனால் வைகை பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் மிக மிக குறைந்து கொண்டே செல்கிறது. அரசு விதித்திருக்கும் தடையை மீறி கள்ளத்தனமாக விவசாய நீர் வியாபார நோக்கிற்காக கிணற்று நீர் பம்ப் மூலம் உறிஞ்சப்பட்டு தங்கும் விடுதிகள், உணவகங்கள், மண்டபங்கள் மற்றும் மினரல் வாட்டர்களுக்காக கடத்தப்படுகின்றன.
மதுரை அருகேயுள்ள உத்தரங்குடியில் நள்ளிரவில் கிணற்று நீர் பம்ம் மூலம் உறிஞ்சப்பட்டு கடத்தப்பட்டபோது ஊர் பொதுமக்களே லாரியையும், ஓட்டுநரையும் மடக்கி ஒத்தக்கடை காவல் நிலையத்தல் கடந்த 27 ஆம் தேதி ஒப்படைத்தனர். ஆகவே வைகையாற்று கரையோரம் உள்ள கிணறுகளில் நீர் கடத்தும் கும்பல்களை அரசு தக்க நடவடிக்கை மூலம் நீர் திருட்டு நடக்காமல் காக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர், மணல் திருட்டு ஆகியவற்றின் மூலம் சுலபமாக கொள்ளை கும்பல்கள் பெரும் பணம் சம்பாதிப்பதை அரசு உடனே கடும் நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தினால்தான் நீர் ஆதாரங்கள் காக்கப்படும். இவ்வாறு பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர்.
வைகை நதியைப் போல பிற நதிகளையும் அரசு காக்க தக்க நடவடிக்கை எடுத்தால் நல்லது.
மதுரை நகருக்குள் வைகை ஆற்றின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள் கான்கிரீட் கட்டிடங்கள் எழுந்தன. இந்த கட்டிடங்கள் வாடகைக்கும் விடப்பட்டன. இப்படி ஆக்கிரமிக்கப்பட்ட வைகை நதி அழகு இழந்தது மட்டுமின்றி, நீர் ஆதாரமும் கெட்டது. இதனை கருத்தில் கொண்டு வைகை நதி சீரமைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது.
வைகை நதி மதுரை நகருக்குள் பாயும் இடங்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் சில மாதங்களுக்கு முன் புல்டோசர் மூலம் அகற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான கான்கிரீட் கட்டிடங்கள் இடித்து தடைமட்டமாக்கப்பட்டன. எவருக்கும் எந்த காரணம் கொண்டும் இரக்கம் காட்டப்படவில்லை. மதுரை நகரின் கிழக்கு பகுதியான செல்லூர், வைகை வடகரை ஒட்டிய பகுதிகள் ஆழ்வார்புரம் போன்ற பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
அதன் பின் வைகை கரையோரம் செம்மண் மூலம் சுவர்கள் எழுப்பினர். அதை சாலையாக மாற்றவும் செய்தனர். நகருக்குள் 10 மைல் தூரத்திற்கு ரோடுகள் எழுப்பியதால் முழுக்க முழுக்க ஆக்கிரமிப்புகள் ஒழிந்தது. இது மத்திய அரசின் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் அரசும் மதுரையை புராதான நகரம் என்று பாதுகாக்க நிதியும் ஒதுக்கியது.
தற்போது மதுரை வைகை ஆற்று சுவர்புறங்களில் கருங்கற்கள் பதிக்கும் பணி துவங்கியுள்ளது. இப்பணி வைகையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி செலவில் துவங்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை சென்ற சில மாதங்களுக்கு முன் தொடங்கவேண்டிய பணியை தற்போது தாமதமாக தொடங்கினாலும் வெகு வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. கருங்கற்கள் மிக வலுவானதாக பதிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒரு அடிக்கு ஒரு அடி கன அளவுள்ள கற்கள் பதிக்கப்படுகின்றன. இதுபோன்ற கன அடி கற்கள் அணைப்பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்படும்.
ஆனால் மதுரை வைகை கரைகளில் பதிப்பதன் நோக்கம். . . சில ஆண்டுகளுக்கு முன் 1994-ல் வெள்ளம் மதுரைக்குள் நுழைந்தபோது மதுரையின் வட பகுதி முழுவதும் நீர் நுழைந்து மதுரையின் ஒரு பகுதியை முழுவதுமாக முழ்கடித்தது. அதுபோன்ற நிலை இனி ஏற்படக்கூடாது என்ற நோக்கில் தற்போது கற்கள் பதிக்கப்படுகின்றன. தொடக்கமாக 800 மீட்டர் தூரத்திற்கு கற்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது.
பின்னர் மற்ற இடங்களிலும் கற்கள் பதிக்கும் பணி நடைபெறும் என்று பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவத்தனர்.
இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க நதியை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. வைகை நதியில் மணல் அள்ளுவதால் நீர் ஆதாரங்கள் கெடுகின்றன. இப்படி மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை நதியில் பல கோடி மதிப்புள்ள மணல் அள்ளப்பட்டதால் அக்டோபரில் வைகையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் ராமநாதபுரம் பாசனத்திற்கு சென்றடையாமலேயே மண்ணிற்காக தோண்டப்பட்ட குழிகளில் தேங்கிவிட்டது.
இப்போதும் வைகையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் ராமநாதபுரம் பாசனத்திற்கு சென்றடையாமலேயே வைகையின் குழிகளில் தேங்கிவிட்டது. தற்போது இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாவண்ணம் இருக்க வைகை ஆற்றில் மணல் அள்ளுபவர்களுக்கு பெருந்தொகை அபராதம் விதிப்பதோடு மணல் அள்ளும் லாரியும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது :
மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றுப்படுகையில் உள்ள குடிநீர் திட்டம், நீh ஆதார அமைப்புகளை கருத்தில் கொண்டு ஆற்றுக்குள் மணல் குவாரிகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி கோச்சடை, கருமாத்தூர், கவரிமான் ஆகிய இடங்களில் ஆற்றுப் படுகையில் மணல் குவாரி அமைத்து மணல் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இப்படி குவாரி அமைக்க உதவிய பட்டா உரிமையாளர்கள் 35 பேருக்கு 4 கோடியே 35 லட்சம் அபாராம் விதிக்கப்பட்டது. இதேபோல வாடிப்பட்டி, சோழவந்தான், தென்கரை ஆகிய பகுதிகளில் மணல் குவாரி ஏற்படுத்தி மணல் திருடிய 34 நில உரிமையாளர்களுக்கு 53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து மணல் குவாரி அமைப்பவர்களை கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மணல் கடத்த பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. சில தினங்களுக்கு முன் 227 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு லாரி மூலம் மணல் கடத்தியவர்களுக்கு 45 லட்சத்து 65 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மதுரை மாவட்ட ஆட்சியர் சேது. ராமசந்திரன் கூறினார்.
தற்போது நவீனமாக வைகை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அமைந்துள்ள கிணறுகளிலிருந்து வியாபார நோக்கில் தண்ணீர் கடத்தப்படுகிறது. இதனால் வைகை பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் மிக மிக குறைந்து கொண்டே செல்கிறது. அரசு விதித்திருக்கும் தடையை மீறி கள்ளத்தனமாக விவசாய நீர் வியாபார நோக்கிற்காக கிணற்று நீர் பம்ப் மூலம் உறிஞ்சப்பட்டு தங்கும் விடுதிகள், உணவகங்கள், மண்டபங்கள் மற்றும் மினரல் வாட்டர்களுக்காக கடத்தப்படுகின்றன.
மதுரை அருகேயுள்ள உத்தரங்குடியில் நள்ளிரவில் கிணற்று நீர் பம்ம் மூலம் உறிஞ்சப்பட்டு கடத்தப்பட்டபோது ஊர் பொதுமக்களே லாரியையும், ஓட்டுநரையும் மடக்கி ஒத்தக்கடை காவல் நிலையத்தல் கடந்த 27 ஆம் தேதி ஒப்படைத்தனர். ஆகவே வைகையாற்று கரையோரம் உள்ள கிணறுகளில் நீர் கடத்தும் கும்பல்களை அரசு தக்க நடவடிக்கை மூலம் நீர் திருட்டு நடக்காமல் காக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர், மணல் திருட்டு ஆகியவற்றின் மூலம் சுலபமாக கொள்ளை கும்பல்கள் பெரும் பணம் சம்பாதிப்பதை அரசு உடனே கடும் நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தினால்தான் நீர் ஆதாரங்கள் காக்கப்படும். இவ்வாறு பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர்.
வைகை நதியைப் போல பிற நதிகளையும் அரசு காக்க தக்க நடவடிக்கை எடுத்தால் நல்லது.
உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறுமா தாஜ்மஹால்! 2
அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, கிரேக்கத்தின் ஆக்ரோபாலிஸ் என்றழைக்கப்படும் 2500 ஆண்டுக்கால பழமை வாய்ந்த பார்த்தீனன் கோயில், சீனத்தின் பெருஞ்சுவர், ரோமில் உள்ள மாபெரும் விளையாட்டுத் திடல், மெக்சிகோவில் உள்ள ஹிட்சா பிரமீட், எகிப்தில் உள்ள கெய்சா பிரமீடுகள், இந்தியாவின் தாஜ்மஹால் ஆகியன முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிசயங்கள் என்று கூறத்தக்க அளவிற்கு உலகெங்கிலும் உள்ள பல நூற்றுக்கணக்கான கட்டடங்கள், மாடமாளிகைகள், அழகு தோட்டங்கள், அற்புத ஓவியங்கள் என்று ஏராளமாக இருக்கின்றன. அவைகளின் அளவும், கட்டப்பட்ட நேர்த்தியும், அந்த கட்டுமானங்களோடு தொடர்புடைய வரலாறும், அது கட்டப்பட்டதில் உள்ள சூட்சமும் நிச்சயம் பிரமிக்கத்தக்கதாகவே உள்ளன. அந்த வகையில் சீனத்தின் பெருஞ்சுவரும், பாபிலோனின் தொங்கு தோட்டமும், எகிப்தின் பிரமீடுகளும், கிரேக்கத்தின் ஆக்ரோபாலிசும் சிறப்பு மிக்கவைதான். ஆயினும், இவை யாவற்றிலும் அரசு, ஆதிக்கம், பிரமாண்டம், கட்டடக்கலை, வரலாற்றுச் சிறப்பு ஆகியன இருந்தாலும் இந்தியாவின் தாஜ்மஹாலிற்கு உள்ள தனித்த, உயர்ந்த, இதயத்தின் ஆழத்திலும் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஓர் உன்னதத் தன்மையைப் பெற்றவை வேறெதுவும் இல்லை என்று துணிந்து கூறலாம்.
ஒரு பேரரசன், அதுவும் பல மனைவிகளைக் கட்டிக்கொள்ளலாம், பல பெண்களையும் வைத்துக் கொள்ளலாம் என்றவொரு தனித்த மத இன வழி பாரம்பரியத்தைச் சேர்ந்தவர், தனது மனைவியிடம் கொண்ட ஆழ்ந்த, மாறாக் காதலை வெளிப்படுத்துவதற்கு ஒரு மாளிகையைக் கட்டியிருக்கலாம், ஒரு தோட்டத்தை அமைத்திருக்கலாம், அழகிய சிலையை வடித்திருக்கலாம், ஏன் அருமை உருது மொழியில் கவிதையைக் கூட படைத்திருக்கலாம். ஆனால் மொகலாயப் பேரரசன் ஹாஜகான் தனது மனைவி மும்தாஜின் மீது கொண்ட காதலை, அந்தக் காதலின் அனைத்து பரிமாணத்தையும் உணர்வோடு ஒன்று கலந்துவிட்ட அனைத்து உணர்ச்சிகளையும் வெளியில் வடித்த அற்புதம்தான் தாஜ்மஹால்.
கட்டடக் கலைகளில் இந்தோ-மொகலாய கட்டடக் கலைக்கு பெரும் சான்றாகத் திகழும் தாஜ்மஹால், அதையும் தாண்டி பார்த்தவர், பார்க்காதவர், கேட்டவர், கதையால், வரலாற்றால் அறிந்தவர், காவியங்களில் உணர்ந்தவர்கள் என்று எல்லோர் மனதிலும் அழியாக் காதல் சின்னமாகவே பதிவாகியுள்ளது.
இவ்வளவு அழகான தாஜ்மஹால் எனும் ஓர் அரிய படைப்பை ஓர் பேரரசன் விட்டுச் சென்றதற்குக் காரணம், தனது மனைவி மீது கொண்ட காதல்தான் என்பது காதலுக்கு மட்டுமல்ல, காதல் மணவாழ்க்கையிலும் நீடிக்கும் மறையாமல் தொடரும் உணர்வு அது, காமத்தைக் கடந்த பிணைப்பு அது, கருத்திற்கும் எட்டாத உணர்வு அது, காலத்தின் மாற்றத்தினால் காணாமல் போகக்கூடிய பண்பல்ல காதல் என்பதையே தாஜ்மஹாலின் படைப்பும், இருப்பும் உணர்த்துகிறது. அதனால்தானோ என்னவோ, ஆன்மிகப் பாதையில் மாமுயற்சி மேற்கொண்ட அரவிந்தர், "அழியாக் காதலின் அற்புதச் சின்னம்" என்று இந்திய பண்பாட்டின் அடிப்படைகள் என்று தான் எழுதிய புத்தகத்தில் தாஜ்மஹாலைக் குறிப்பிடுகிறார்.
வாக்குகளும், செல்வாக்கும், ஆதரவும், பற்றுதல்களும் பட்டியல்களை நிர்ணயிக்கலாம். ஆனால் அவற்றில் இடம்பெற்றாலும், இடம்பெறாவிட்டாலும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் தாஜ்மஹால் என்றென்றைக்கும் ஆழம் காணமுடியாத அதிசயமாக நிலைத்திருக்கும்.
அதிசயங்கள் என்று கூறத்தக்க அளவிற்கு உலகெங்கிலும் உள்ள பல நூற்றுக்கணக்கான கட்டடங்கள், மாடமாளிகைகள், அழகு தோட்டங்கள், அற்புத ஓவியங்கள் என்று ஏராளமாக இருக்கின்றன. அவைகளின் அளவும், கட்டப்பட்ட நேர்த்தியும், அந்த கட்டுமானங்களோடு தொடர்புடைய வரலாறும், அது கட்டப்பட்டதில் உள்ள சூட்சமும் நிச்சயம் பிரமிக்கத்தக்கதாகவே உள்ளன. அந்த வகையில் சீனத்தின் பெருஞ்சுவரும், பாபிலோனின் தொங்கு தோட்டமும், எகிப்தின் பிரமீடுகளும், கிரேக்கத்தின் ஆக்ரோபாலிசும் சிறப்பு மிக்கவைதான். ஆயினும், இவை யாவற்றிலும் அரசு, ஆதிக்கம், பிரமாண்டம், கட்டடக்கலை, வரலாற்றுச் சிறப்பு ஆகியன இருந்தாலும் இந்தியாவின் தாஜ்மஹாலிற்கு உள்ள தனித்த, உயர்ந்த, இதயத்தின் ஆழத்திலும் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஓர் உன்னதத் தன்மையைப் பெற்றவை வேறெதுவும் இல்லை என்று துணிந்து கூறலாம்.
ஒரு பேரரசன், அதுவும் பல மனைவிகளைக் கட்டிக்கொள்ளலாம், பல பெண்களையும் வைத்துக் கொள்ளலாம் என்றவொரு தனித்த மத இன வழி பாரம்பரியத்தைச் சேர்ந்தவர், தனது மனைவியிடம் கொண்ட ஆழ்ந்த, மாறாக் காதலை வெளிப்படுத்துவதற்கு ஒரு மாளிகையைக் கட்டியிருக்கலாம், ஒரு தோட்டத்தை அமைத்திருக்கலாம், அழகிய சிலையை வடித்திருக்கலாம், ஏன் அருமை உருது மொழியில் கவிதையைக் கூட படைத்திருக்கலாம். ஆனால் மொகலாயப் பேரரசன் ஹாஜகான் தனது மனைவி மும்தாஜின் மீது கொண்ட காதலை, அந்தக் காதலின் அனைத்து பரிமாணத்தையும் உணர்வோடு ஒன்று கலந்துவிட்ட அனைத்து உணர்ச்சிகளையும் வெளியில் வடித்த அற்புதம்தான் தாஜ்மஹால்.
கட்டடக் கலைகளில் இந்தோ-மொகலாய கட்டடக் கலைக்கு பெரும் சான்றாகத் திகழும் தாஜ்மஹால், அதையும் தாண்டி பார்த்தவர், பார்க்காதவர், கேட்டவர், கதையால், வரலாற்றால் அறிந்தவர், காவியங்களில் உணர்ந்தவர்கள் என்று எல்லோர் மனதிலும் அழியாக் காதல் சின்னமாகவே பதிவாகியுள்ளது.
இவ்வளவு அழகான தாஜ்மஹால் எனும் ஓர் அரிய படைப்பை ஓர் பேரரசன் விட்டுச் சென்றதற்குக் காரணம், தனது மனைவி மீது கொண்ட காதல்தான் என்பது காதலுக்கு மட்டுமல்ல, காதல் மணவாழ்க்கையிலும் நீடிக்கும் மறையாமல் தொடரும் உணர்வு அது, காமத்தைக் கடந்த பிணைப்பு அது, கருத்திற்கும் எட்டாத உணர்வு அது, காலத்தின் மாற்றத்தினால் காணாமல் போகக்கூடிய பண்பல்ல காதல் என்பதையே தாஜ்மஹாலின் படைப்பும், இருப்பும் உணர்த்துகிறது. அதனால்தானோ என்னவோ, ஆன்மிகப் பாதையில் மாமுயற்சி மேற்கொண்ட அரவிந்தர், "அழியாக் காதலின் அற்புதச் சின்னம்" என்று இந்திய பண்பாட்டின் அடிப்படைகள் என்று தான் எழுதிய புத்தகத்தில் தாஜ்மஹாலைக் குறிப்பிடுகிறார்.
வாக்குகளும், செல்வாக்கும், ஆதரவும், பற்றுதல்களும் பட்டியல்களை நிர்ணயிக்கலாம். ஆனால் அவற்றில் இடம்பெற்றாலும், இடம்பெறாவிட்டாலும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் தாஜ்மஹால் என்றென்றைக்கும் ஆழம் காணமுடியாத அதிசயமாக நிலைத்திருக்கும்.
உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறுமா தாஜ்மஹால்!
உலகின் பிரமிக்கத்தக்க 7 அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவரும் 450 ஆண்டுக்கால பழமை வாய்ந்த தாஜ்மஹால் இன்று வெளியிடப்படவுள்ள புதிய 7 அதிசயங்களின் பட்டியலில் இடம்பெறுமா என்று அறிவதில் இந்தியர்கள் மட்டுமின்றி, வரலாற்றிலும், கலைப் படைப்புகளிலும் பேரார்வம் கொண்டோர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்!
சீனப் பெருஞ்சுவர், பைசா நகர சாய்ந்த கோபுரம், பாபிலோனியாவின் தொங்கு தோட்டம், எகிப்தின் பிரமீடுகள், பாரிஸ் நகரில் உள்ள ஈஃபிள் கோபுரம், ஆக்ராவில் யமுனை கரையில், எழிலிற்கு இலக்கணம் கூறி கட்டுமானக் கலைக்கு அத்தாட்சியாகவும், காதலின் சிறப்பை உணர்த்து சின்னமாகவும் திகழ்ந்துவரும் தாஜ்மஹால் ஆகியன உள்ளன.
புத்தாயிரம் ஆண்டில் 7வது ஆண்டான இவ்வாண்டில் 7வது மாதமான ஜூலையில், 7வது நாளான இன்று அதாவது 07.07.07 என்று வரும் இந்நாளில் புதிய 7 உலக அதிசயங்கள் எது எது என்கின்ற பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
பெர்னார்ட் வீபர் என்பவரின் தனித்த முயற்சியால் உலக மக்களின் கருத்தை வாக்கெடுப்பின் மூலம் அறிந்து அதன்மூலம் புதிய 7 அதிசயங்களை முடிவு செய்து அறிவிப்பது என்று திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு எந்தவிதத்திலும் ஆதரவளிக்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, சமூகம், பண்பாடு ஆகியவற்றிற்கான அமைப்பான யுனெஸ்கோ திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
யுனெஸ்கோ மேற்கொண்டு வரும் உலகப் பாரம்பரிய திட்டத்திற்கும், இந்த புதிய அதிசயப் படடியலிற்கான வாக்கெடுப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றாலும், உலக மக்கள் தங்கள் விருப்பங்களை வெளியிடும் ஒரு வாய்ப்பாகிவிட்டதால் இதற்கும் ஒரு வரவேற்பு உள்ளது.
வாக்களிப்பு மூலம் உலக அதிசயங்களை நிர்ணயிக்க முடிவு செய்து அதற்கான வாக்குப்பதிவு நேற்றுடன் முடிந்துவிட்டது. முடிவு இன்று போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் வெளியிடப்படவுள்ளது.
உலகெங்கிலும் உள்ள 20 அதிசயங்கள் இந்த வாக்குப் பதிவில் இறுதிக்கு தகுதி பெற்றன. 9 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். இன்னும் சில மணி நேரங்களில் அதிசயங்களின் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
சீனப் பெருஞ்சுவர், பைசா நகர சாய்ந்த கோபுரம், பாபிலோனியாவின் தொங்கு தோட்டம், எகிப்தின் பிரமீடுகள், பாரிஸ் நகரில் உள்ள ஈஃபிள் கோபுரம், ஆக்ராவில் யமுனை கரையில், எழிலிற்கு இலக்கணம் கூறி கட்டுமானக் கலைக்கு அத்தாட்சியாகவும், காதலின் சிறப்பை உணர்த்து சின்னமாகவும் திகழ்ந்துவரும் தாஜ்மஹால் ஆகியன உள்ளன.
புத்தாயிரம் ஆண்டில் 7வது ஆண்டான இவ்வாண்டில் 7வது மாதமான ஜூலையில், 7வது நாளான இன்று அதாவது 07.07.07 என்று வரும் இந்நாளில் புதிய 7 உலக அதிசயங்கள் எது எது என்கின்ற பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
பெர்னார்ட் வீபர் என்பவரின் தனித்த முயற்சியால் உலக மக்களின் கருத்தை வாக்கெடுப்பின் மூலம் அறிந்து அதன்மூலம் புதிய 7 அதிசயங்களை முடிவு செய்து அறிவிப்பது என்று திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு எந்தவிதத்திலும் ஆதரவளிக்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, சமூகம், பண்பாடு ஆகியவற்றிற்கான அமைப்பான யுனெஸ்கோ திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
யுனெஸ்கோ மேற்கொண்டு வரும் உலகப் பாரம்பரிய திட்டத்திற்கும், இந்த புதிய அதிசயப் படடியலிற்கான வாக்கெடுப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றாலும், உலக மக்கள் தங்கள் விருப்பங்களை வெளியிடும் ஒரு வாய்ப்பாகிவிட்டதால் இதற்கும் ஒரு வரவேற்பு உள்ளது.
வாக்களிப்பு மூலம் உலக அதிசயங்களை நிர்ணயிக்க முடிவு செய்து அதற்கான வாக்குப்பதிவு நேற்றுடன் முடிந்துவிட்டது. முடிவு இன்று போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் வெளியிடப்படவுள்ளது.
உலகெங்கிலும் உள்ள 20 அதிசயங்கள் இந்த வாக்குப் பதிவில் இறுதிக்கு தகுதி பெற்றன. 9 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். இன்னும் சில மணி நேரங்களில் அதிசயங்களின் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
