| ||||||||
| | ||||||||
| |
Saturday, July 21, 2007
கிரீடம்
அஜீத், த்ரிஷா, ராஜ்கிரண், சரண்யா, விவேக், சந்தானம், மீனாகுமாரி, ஹனீபா, மனோபாலா, ரவிகாலே, எம்.எஸ். பாஸ்கர், அறிமுகம் அஜய்குமார் நடிப்பில் திருவின் ஒளிப்பதிவில் ஜி.வி. பிரகாஷின் இசையில் விஜய் இயக்கியுள்ள படம். தயாரிப்பு சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் சுரேஷ் பாலாஜி.
அந்த ஊரில் ரவுடியிசம் கொடிகட்டிப் பறக்கிறது, வன்முறையால் மக்களைத் துன்புறுத்துகிறார்கள். அப்படி ஒரு மார்க்கெட்டில் அட்டகாசம் செய்யும் ரவுடிகளை புதிய இன்ஸ்பெக்டர் அஜீத் அடித்துத் துவைக்கிறார். கதிகலங்கிய ரவுடிகளை சங்கிலியால் இணைத்து பிணைத்து ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு போகிறார். அஹா ஆரம்பமே அசத்தலா இதுக்கே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் அது நிஜமல்ல கனவு. ராஜ்கிரண்தான் இப்படிக் கனவு காண்கிறார். நேர்மையான ஹெட் கான்ஸ்டபிளான ராஜ்கிரண், தன் மகன் அஜீத் போலிஸ் இன்ஸ்பெக்டராகி இப்படி அநியாயங்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்கிற அவரது விருப்பமே கனவாகிறது. அப்படியே அஜீத்தும் இன்ஸ்பெக்டர் தேர்வுக்குத் தயாராகிறார். இடையே ஒரு எம்.எல்.ஏ. மகன் போக்குவரத்துக்கு இடையூறு செய்வதுடன் போலிஸ்காரர் மீதும் கை வைத்து அடாவடி செய்ய, ஆவேசமான ராஜ்கிரண் அவன் மீது நடவடிக்கை எடுக்க காரை சீஸ் செய்கிறார். எம்.எல்.ஏ. செல்வாக்கால் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார். போன இடம் கோடியக்கரை . அங்கு ரவுடிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது. ஒரு பிரச்சினையில் ரவுடிகளை ராஜ்கிரண் தட்டிக்கேட்க அவரை அடித்து உதைக்கின்றனர். இதைக் கண்டு ஆவேசமடைந்த அஜீத் அந்த தாதா அஜய்குமதரைப் புரட்டி எடுக்கிறார். இதன் பிறகு அஜீத்தின் வாழ்க்கையில் பாதை மாறுகிறது.
தங்களின் சிம்ம சொப்பனமாக இருந்த வரதன் (அஜய்குமார்) வீழ்ந்தான் என்று அப்பகுதி மக்கள் அஜீத்தை வரவேற்று தலைவனாக உயர்த்திவிட, சிலர் அஜீத்தை அடுத்த தாதாவாக நினைக்க... தன் மகனின் பாதை மாறிவிட்டதே.. தன் கனவு பலிக்காதோ என்று வருத்தப்படுகிறார் ராஜ்கிரண்.
புலிவாலைப் பிடித்தது போல ஒரு நிலை அஜீத்துக்கு. தனக்கு வன்முறை தேவையில்லை. தான் ஒரு ரவுடியில்லை என்று அஜீத் நிரூபிக்க முயல அப்பா ராஜ்கிரணின் கோபத்துக்கும் காதலி த்ரிஷாவின் வருத்தத்துக்கும் ஆளாகிறார் அஜீத். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் வேலைக்கு தேர்வாகிறார். ஆனால் அடிபட்ட புலியான வரதனான அஜய்குமார் அஜீத் குடும்பத்தை அடித்து நொறுக்க, புயலாக மாறிய அஜீத் தாதாவை சூரசம்ஹாரம் செய்வது கிரீடம் படத்தின் க்ளைமாக்ஸ்.
இது ஒரு தாதா-ஹீரோ கதை என்று கூறலாம். ஆனால் இதுவும் ஒரு தாதா சம்பந்தப்பட்ட சாதா கதை என்று ஒதுக்கிவிட முடியாது. வாழ்க்கைச் சூழலில் வன்முறை நுழையும் வாய்ப்பை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். இதில் வரும் அஜீத்தின் குடும்பம் கலகலப்பான நடுத்தரக் குடும்பம். கடமை தவாறத போலிஸ்காரர் அப்பா ராஜ்கிரண், பாசமுள்ள வெள்ளந்தி அம்மா சரண்யா. வீட்டோடு மாப்பிள்ளை விவேக், வீட்டில் ராஜ்கிரண் இருந்தால் எலி. இல்லாவிட்டால் புலி என லூட்டி அடிக்கும் தம்பி, தங்கை.... என்று ஒரு யதார்த்தமான குடும்பச் சித்தரிப்பு ரசிக்க வைக்கிறது.
பிள்ளையார் சிலை திருடப் போய் த்ரிஷாவின் மனசைத் திருடும் அஜீத். அஜீத் - த்ரிஷா சம்பந்தப்பட்ட லவ் எபிசோட்... லவ்லி எபிசோட். திருடனைப் பிடிப்பதாக நினைத்து துரத்தி அஜீத் வீட்டுக்குள்ளேயே அதகளம் செய்யும் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் சரியான காமெடி. ஜாங்கிரி கலர்ஃபுல் ரங்கோலி.
ராஜ்கிரண் பாசமுள்ள அப்பா, நேர்மையான போலிஸ்காரர். பந்தமான பாத்திரம். குறிப்பாக அப்பா மகன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அபார நடிப்பை வழங்கி அஜீத்தின் சுமையைக் குறைத்து இருக்கிறார் ராஜ்கிரண்.
ஆரம்பத்தில் புள்ளிமானாகத் துள்ளித் திரியும் த்ரிஷா ஒரு கட்டத்துக்கு மேல் காணாமல் போய் விடுகிறார். கடைசியில் அஜீத்தை மணக்க முடியாமல் போகும்போது ஏமாற்றமாகத் தெரியலாம். ஆனால் அதுதான் யதார்த்தம்.
ஒரு பொறுப்பான போலிஸ் அதிகாரிக்கு என்ன இருக்க வேண்டும் என்பதற்காக பயம் என்று தரும் விளக்கத்தின் மூலம் அஜீத் பாத்திரம் பொறுப்பான இளைஞன் என்று காட்டப்படுவது இதம். தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மிகை நடிப்பு வந்து விடாமல் யதார்த்தத்தை பராமரித்துள்ளார் அஜீத். இறுதியில் அஜய்குமாரை தாக்கும் காட்சியில் அடி வாங்குவதும் அடி கொடுப்பதும்... கடைசியில் கொலை செய்துவிட்டுக் கதறுவதும் மனதில் ஆழப்பதிகிற அழுத்தமான காட்சிகள்.
வரதனாக வரும் அறிமுகவில்லன் அஜய்குமார் விழிகளாலேயே மிரட்டுகிறார். குப்பி சிவராசன் புகழ் ரவிகாலே இன்ஸ்பெக்டராக வந்து மனதில் பதிகிறார்.
இது ஒரு தாதா சார்ந்த கதை ஆக்ஷன் அதிரடி என்றுதான் கதைக்காட்சிகள் இருக்க முடியும் என்ற எண்ணத்துக்கு எதிராக... படம் முழுக்க யதார்த்தமான நகைச்சுவையை கலகலப்பாக அள்ளித் தெளித்து இருக்கும் விதம். ரசிக்கத் தக்கது.
அஜீத் - த்ரிஷா.... வாட்டர் டேங்கைக் காலி செய்துவிட்டு ரகசியமாகப் பேசுவதை தண்ணீர்க் குழாய் மூலம் குடும்பத்தினர் ஒட்டுக கேட்பது ரசனையான ரகளைக் காட்சி. வீட்டோடு மாப்பிள்ளை விவேக் ஒரு பக்கம், நண்பனாக வரும் சந்தானம் ஒரு பக்கம் என்று சிரிக்க வைத்தால், சீரியஸான காட்சியில் கூட ஹனீபா சிரிக்க வைக்கிறார்.
முன்பாதிப் படம் போவதே தெரியவில்லை. மறுபாதியில் கதையில் கனத்தை ஏற்றியிருக்கிறார்கள். எனவே நீளமாகத் தெரிகிறது. இந்த நீளம் விறுவிப்பைக் குறைக்காதது ஆறுதல்.
ஐந்து பாடல்கள்... கனவெல்லாம், விழியில் உன் விழியில் இனிக்கின்றன. மெட்டில் பழைய வாசனை வீசினாலும் கண்ணீர்த்துளியே பாடல் வரிகளிலும் காட்சியமைப்பிலும் கவர்கிறது. பாடல்கள் நா. முத்துக்குமார். எல்லாப் பாடல்களிலும் பொறிதட்டும் வரிகள் தென்படுகின்றன.
தாதா, வன்முறை சார்ந்த கதையில் மிகையற்ற செண்டிமென்டை அழகாகக் குழைத்து ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர். யதார்த்தமான நடிப்புக்கும் அழுத்தமான நடிப்புக்கும் வாய்ப்புள்ள இப்படம் அஜீத்திற்கு வெற்றிக் கிரீடம் அணிவிக்கும்.
அந்த ஊரில் ரவுடியிசம் கொடிகட்டிப் பறக்கிறது, வன்முறையால் மக்களைத் துன்புறுத்துகிறார்கள். அப்படி ஒரு மார்க்கெட்டில் அட்டகாசம் செய்யும் ரவுடிகளை புதிய இன்ஸ்பெக்டர் அஜீத் அடித்துத் துவைக்கிறார். கதிகலங்கிய ரவுடிகளை சங்கிலியால் இணைத்து பிணைத்து ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு போகிறார். அஹா ஆரம்பமே அசத்தலா இதுக்கே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் அது நிஜமல்ல கனவு. ராஜ்கிரண்தான் இப்படிக் கனவு காண்கிறார். நேர்மையான ஹெட் கான்ஸ்டபிளான ராஜ்கிரண், தன் மகன் அஜீத் போலிஸ் இன்ஸ்பெக்டராகி இப்படி அநியாயங்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்கிற அவரது விருப்பமே கனவாகிறது. அப்படியே அஜீத்தும் இன்ஸ்பெக்டர் தேர்வுக்குத் தயாராகிறார். இடையே ஒரு எம்.எல்.ஏ. மகன் போக்குவரத்துக்கு இடையூறு செய்வதுடன் போலிஸ்காரர் மீதும் கை வைத்து அடாவடி செய்ய, ஆவேசமான ராஜ்கிரண் அவன் மீது நடவடிக்கை எடுக்க காரை சீஸ் செய்கிறார். எம்.எல்.ஏ. செல்வாக்கால் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார். போன இடம் கோடியக்கரை . அங்கு ரவுடிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது. ஒரு பிரச்சினையில் ரவுடிகளை ராஜ்கிரண் தட்டிக்கேட்க அவரை அடித்து உதைக்கின்றனர். இதைக் கண்டு ஆவேசமடைந்த அஜீத் அந்த தாதா அஜய்குமதரைப் புரட்டி எடுக்கிறார். இதன் பிறகு அஜீத்தின் வாழ்க்கையில் பாதை மாறுகிறது.
தங்களின் சிம்ம சொப்பனமாக இருந்த வரதன் (அஜய்குமார்) வீழ்ந்தான் என்று அப்பகுதி மக்கள் அஜீத்தை வரவேற்று தலைவனாக உயர்த்திவிட, சிலர் அஜீத்தை அடுத்த தாதாவாக நினைக்க... தன் மகனின் பாதை மாறிவிட்டதே.. தன் கனவு பலிக்காதோ என்று வருத்தப்படுகிறார் ராஜ்கிரண்.
புலிவாலைப் பிடித்தது போல ஒரு நிலை அஜீத்துக்கு. தனக்கு வன்முறை தேவையில்லை. தான் ஒரு ரவுடியில்லை என்று அஜீத் நிரூபிக்க முயல அப்பா ராஜ்கிரணின் கோபத்துக்கும் காதலி த்ரிஷாவின் வருத்தத்துக்கும் ஆளாகிறார் அஜீத். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் வேலைக்கு தேர்வாகிறார். ஆனால் அடிபட்ட புலியான வரதனான அஜய்குமார் அஜீத் குடும்பத்தை அடித்து நொறுக்க, புயலாக மாறிய அஜீத் தாதாவை சூரசம்ஹாரம் செய்வது கிரீடம் படத்தின் க்ளைமாக்ஸ்.
இது ஒரு தாதா-ஹீரோ கதை என்று கூறலாம். ஆனால் இதுவும் ஒரு தாதா சம்பந்தப்பட்ட சாதா கதை என்று ஒதுக்கிவிட முடியாது. வாழ்க்கைச் சூழலில் வன்முறை நுழையும் வாய்ப்பை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். இதில் வரும் அஜீத்தின் குடும்பம் கலகலப்பான நடுத்தரக் குடும்பம். கடமை தவாறத போலிஸ்காரர் அப்பா ராஜ்கிரண், பாசமுள்ள வெள்ளந்தி அம்மா சரண்யா. வீட்டோடு மாப்பிள்ளை விவேக், வீட்டில் ராஜ்கிரண் இருந்தால் எலி. இல்லாவிட்டால் புலி என லூட்டி அடிக்கும் தம்பி, தங்கை.... என்று ஒரு யதார்த்தமான குடும்பச் சித்தரிப்பு ரசிக்க வைக்கிறது.
பிள்ளையார் சிலை திருடப் போய் த்ரிஷாவின் மனசைத் திருடும் அஜீத். அஜீத் - த்ரிஷா சம்பந்தப்பட்ட லவ் எபிசோட்... லவ்லி எபிசோட். திருடனைப் பிடிப்பதாக நினைத்து துரத்தி அஜீத் வீட்டுக்குள்ளேயே அதகளம் செய்யும் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் சரியான காமெடி. ஜாங்கிரி கலர்ஃபுல் ரங்கோலி.
ராஜ்கிரண் பாசமுள்ள அப்பா, நேர்மையான போலிஸ்காரர். பந்தமான பாத்திரம். குறிப்பாக அப்பா மகன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அபார நடிப்பை வழங்கி அஜீத்தின் சுமையைக் குறைத்து இருக்கிறார் ராஜ்கிரண்.
ஆரம்பத்தில் புள்ளிமானாகத் துள்ளித் திரியும் த்ரிஷா ஒரு கட்டத்துக்கு மேல் காணாமல் போய் விடுகிறார். கடைசியில் அஜீத்தை மணக்க முடியாமல் போகும்போது ஏமாற்றமாகத் தெரியலாம். ஆனால் அதுதான் யதார்த்தம்.
ஒரு பொறுப்பான போலிஸ் அதிகாரிக்கு என்ன இருக்க வேண்டும் என்பதற்காக பயம் என்று தரும் விளக்கத்தின் மூலம் அஜீத் பாத்திரம் பொறுப்பான இளைஞன் என்று காட்டப்படுவது இதம். தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மிகை நடிப்பு வந்து விடாமல் யதார்த்தத்தை பராமரித்துள்ளார் அஜீத். இறுதியில் அஜய்குமாரை தாக்கும் காட்சியில் அடி வாங்குவதும் அடி கொடுப்பதும்... கடைசியில் கொலை செய்துவிட்டுக் கதறுவதும் மனதில் ஆழப்பதிகிற அழுத்தமான காட்சிகள்.
வரதனாக வரும் அறிமுகவில்லன் அஜய்குமார் விழிகளாலேயே மிரட்டுகிறார். குப்பி சிவராசன் புகழ் ரவிகாலே இன்ஸ்பெக்டராக வந்து மனதில் பதிகிறார்.
இது ஒரு தாதா சார்ந்த கதை ஆக்ஷன் அதிரடி என்றுதான் கதைக்காட்சிகள் இருக்க முடியும் என்ற எண்ணத்துக்கு எதிராக... படம் முழுக்க யதார்த்தமான நகைச்சுவையை கலகலப்பாக அள்ளித் தெளித்து இருக்கும் விதம். ரசிக்கத் தக்கது.
அஜீத் - த்ரிஷா.... வாட்டர் டேங்கைக் காலி செய்துவிட்டு ரகசியமாகப் பேசுவதை தண்ணீர்க் குழாய் மூலம் குடும்பத்தினர் ஒட்டுக கேட்பது ரசனையான ரகளைக் காட்சி. வீட்டோடு மாப்பிள்ளை விவேக் ஒரு பக்கம், நண்பனாக வரும் சந்தானம் ஒரு பக்கம் என்று சிரிக்க வைத்தால், சீரியஸான காட்சியில் கூட ஹனீபா சிரிக்க வைக்கிறார்.
முன்பாதிப் படம் போவதே தெரியவில்லை. மறுபாதியில் கதையில் கனத்தை ஏற்றியிருக்கிறார்கள். எனவே நீளமாகத் தெரிகிறது. இந்த நீளம் விறுவிப்பைக் குறைக்காதது ஆறுதல்.
ஐந்து பாடல்கள்... கனவெல்லாம், விழியில் உன் விழியில் இனிக்கின்றன. மெட்டில் பழைய வாசனை வீசினாலும் கண்ணீர்த்துளியே பாடல் வரிகளிலும் காட்சியமைப்பிலும் கவர்கிறது. பாடல்கள் நா. முத்துக்குமார். எல்லாப் பாடல்களிலும் பொறிதட்டும் வரிகள் தென்படுகின்றன.
தாதா, வன்முறை சார்ந்த கதையில் மிகையற்ற செண்டிமென்டை அழகாகக் குழைத்து ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர். யதார்த்தமான நடிப்புக்கும் அழுத்தமான நடிப்புக்கும் வாய்ப்புள்ள இப்படம் அஜீத்திற்கு வெற்றிக் கிரீடம் அணிவிக்கும்.
Friday, July 20, 2007
நியூ லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும் சில நேரங்களில்
அமெரிக்காவில் வாழும் கமப்யூட்டர் இன்ஜினியரிங் இளைஞர்கள் நான்கு பேர் முதன்முறையாக திரைப்படம் தயாரிக்க விருப்பப்பட்டனர். இவர்களின் பூர்வீகம் ஆந்திர பிரதேசம்.
ஹாலிவுட்டில் பிரபலமாக உள்ள கதை வசனகர்த்தா ஆர், ராஜ் என்பவரின் கதையை தேர்வு செய்து தமிழ் திரைப்பட வளர்ச்சி, தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிந்து அதை தமிழில் தயாரிக்க ஆசைப்பட்டனர். இந்த கதைக்கு பொருத்தமான இயக்குனரை தங்களின் இணையதளத்தின் மூலம் தேடி வந்தனர். அப்போது மலையாளத்தில் வித்யா ரம்பம், தெய்வநாமத்தில், ஜானிவாக்கர், தேசானடனம், களியாட்டம், கர்ணம், சாந்தம், 4 ஸ்டூடண்ட்ஸ் ஆகிய படங்களோடு 29 படங்களை இயக்கியவரும், 4 தேசிய விருதுகளை பெற்றவருமான ஜெயராஜ் அவர்களிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறார்கள். இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போக உடனே இயக்க ஒப்புக் கொண்டார், இந்த கதைக்கு தகுந்த நடிகரை தேடும்போது தமிழில் பழைய நடிகர் அசோகன் என்பவரின் மகன் வின்சென்ட் அசோகன் என்பவரை தேர்வு செய்தார், தமிழில் ஏய், போக்கிரி, ஆழ்வார் போன்ற படங்களில் வில்லனாக நடித்த இவரே இந்த கதைக்கு பொருத்தமானவர் என்பதை முடிவு செய்த இயக்குநர் ஜெயராஜ் முதல் முறையாக வின்சென்ட் அசோகனை ஆன்டி ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார், இந்த கதைக்கு தகுந்த நடிகையை தேடிய போது சிறந்த முகபாவனையும், நடிப்பாற்றலும் உள்ள நவ்யா நாயரை தேர்வு செய்தார்கள். இப்படி எல்லா விதத்திலும் புதுமையான கூட்டணி இந்த கதையின் வலுவுக்கு உயிர் ஊட்டும்.
இயக்குனர்களிலும், தயாரிப்பாளர்களிடமும் சில நேரங்களில் இதேபோன்று நடப்பதுண்டு.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் 13 வருடங்களுக்குப் பிறகு பி. சுசிலா பாடிய பாடல் ஒன்றும், மற்றொரு பாடல் டி.எம்.எஸ். குரலில் அவருடைய மகனாக டிஎம்எஸ் பால்ராஜ் பாடிய பாடலும் சினிமாவின் பொற்காலத்திற்கு நம்மை அழைத்து செல்லும். இந்த அதிர்ஷ்டம் ரசிகர்களுக்கு சில நேரங்களில் கிடைக்கக் கூடிய அபூர்வ விருந்து.
மிக முக்கியமான வேடத்திலும் வினித்தும், ரமேஷ்கண்ணாவின் காமெடியும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
ரகுவரன் இதுவரை செய்திராத வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பின் போதே ஏராளமான கைத்தட்டல்களுடன் ஆனந்த கண்ணீருடன் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார்,
படப்பிடிப்பு முடிந்த பிறகும் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலக முடியாமல் மூன்று நாட்கள் மூணாறு நகரில் இருந்து கிளம்ப முடியாமல் தவித்திருக்கிறார். இதுவரை யாரும் பார்த்திராத புதுப்புது லொகேஷன்கள் அமைந்துள்ள மூணாறு ஊரில் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு எந்தவொரு படத்திலும் வந்திராத சென்னையிலுள்ள இடங்களில் இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
விரைவில் திரையில்....
ஹாலிவுட்டில் பிரபலமாக உள்ள கதை வசனகர்த்தா ஆர், ராஜ் என்பவரின் கதையை தேர்வு செய்து தமிழ் திரைப்பட வளர்ச்சி, தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிந்து அதை தமிழில் தயாரிக்க ஆசைப்பட்டனர். இந்த கதைக்கு பொருத்தமான இயக்குனரை தங்களின் இணையதளத்தின் மூலம் தேடி வந்தனர். அப்போது மலையாளத்தில் வித்யா ரம்பம், தெய்வநாமத்தில், ஜானிவாக்கர், தேசானடனம், களியாட்டம், கர்ணம், சாந்தம், 4 ஸ்டூடண்ட்ஸ் ஆகிய படங்களோடு 29 படங்களை இயக்கியவரும், 4 தேசிய விருதுகளை பெற்றவருமான ஜெயராஜ் அவர்களிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறார்கள். இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போக உடனே இயக்க ஒப்புக் கொண்டார், இந்த கதைக்கு தகுந்த நடிகரை தேடும்போது தமிழில் பழைய நடிகர் அசோகன் என்பவரின் மகன் வின்சென்ட் அசோகன் என்பவரை தேர்வு செய்தார், தமிழில் ஏய், போக்கிரி, ஆழ்வார் போன்ற படங்களில் வில்லனாக நடித்த இவரே இந்த கதைக்கு பொருத்தமானவர் என்பதை முடிவு செய்த இயக்குநர் ஜெயராஜ் முதல் முறையாக வின்சென்ட் அசோகனை ஆன்டி ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார், இந்த கதைக்கு தகுந்த நடிகையை தேடிய போது சிறந்த முகபாவனையும், நடிப்பாற்றலும் உள்ள நவ்யா நாயரை தேர்வு செய்தார்கள். இப்படி எல்லா விதத்திலும் புதுமையான கூட்டணி இந்த கதையின் வலுவுக்கு உயிர் ஊட்டும்.
இயக்குனர்களிலும், தயாரிப்பாளர்களிடமும் சில நேரங்களில் இதேபோன்று நடப்பதுண்டு.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் 13 வருடங்களுக்குப் பிறகு பி. சுசிலா பாடிய பாடல் ஒன்றும், மற்றொரு பாடல் டி.எம்.எஸ். குரலில் அவருடைய மகனாக டிஎம்எஸ் பால்ராஜ் பாடிய பாடலும் சினிமாவின் பொற்காலத்திற்கு நம்மை அழைத்து செல்லும். இந்த அதிர்ஷ்டம் ரசிகர்களுக்கு சில நேரங்களில் கிடைக்கக் கூடிய அபூர்வ விருந்து.
மிக முக்கியமான வேடத்திலும் வினித்தும், ரமேஷ்கண்ணாவின் காமெடியும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
ரகுவரன் இதுவரை செய்திராத வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பின் போதே ஏராளமான கைத்தட்டல்களுடன் ஆனந்த கண்ணீருடன் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார்,
படப்பிடிப்பு முடிந்த பிறகும் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலக முடியாமல் மூன்று நாட்கள் மூணாறு நகரில் இருந்து கிளம்ப முடியாமல் தவித்திருக்கிறார். இதுவரை யாரும் பார்த்திராத புதுப்புது லொகேஷன்கள் அமைந்துள்ள மூணாறு ஊரில் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு எந்தவொரு படத்திலும் வந்திராத சென்னையிலுள்ள இடங்களில் இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
விரைவில் திரையில்....
Thursday, July 19, 2007
அணு சக்தி ஒத்துழைப்பு : இந்தியா-யு.எஸ். இன்றும் பேச்சு!
இந்திய - யு.எஸ். அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர உருவாக்கப்பட வேண்டிய 123 ஒப்பந்தம் குறித்து இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது!
தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அயலுறவுச் செயலர் சிங்சங்கர் மேனன், இந்திய அணு சக்தி ஆணையத்தின் ஆர்.பி. குரோவர் ஆகியோர் கொண்ட இந்தியக் குழு, யு.எஸ். அயலுறவு அமைச்சகத்தின் அரசியல் விவகாரத்திற்கான சார்புச் செயலர் நிக்கோலாஸ் பர்ன்ஸ், ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரிச்சர்ட் பௌச்சர், அணு சக்தி பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு இயக்குநர் ராபர்ட் ஸ்ட்ராட்ஃபோர்ட் ஆகியோர் கொண்ட குழுவினருடன் இரண்டு நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
அவசியம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் அணு சோதனை நடத்துவது, பயன்படுத்திய யுரேனியம் எரிபொருளை மறு ஆக்கம் செய்வது போன்ற உரிமைகளை விட்டுத்தர இயலாது என்று இந்தியா கூறி வருவதால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையே தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அமெரிக்க அரசின் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீஃபன் ஹாட்லியும் சந்தித்துப் பேசினர். அதன்பிறகு இருதரப்பினரும் அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைசை சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது இந்திய தரப்பிற்கு உதவ அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கரும் வாஷிங்டனில் உள்ளார்.
இரண்டு நாள் பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் நல்ல புரிந்துணர்வை எட்டியுள்ளதாகவும், எனவே இன்றைய பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் பேச்சாளர் டோனி ஸ்னோ, "இந்திய-யு.எஸ். அணு சக்தி ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் மிக அவசியமான ஒன்று என்றும், அதனை வெற்றிகரமாக இறுதி செய்ய முயற்சித்து வருவதாகவும்" கூறியுள்ளார். (யு.என்.ஐ.)
தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அயலுறவுச் செயலர் சிங்சங்கர் மேனன், இந்திய அணு சக்தி ஆணையத்தின் ஆர்.பி. குரோவர் ஆகியோர் கொண்ட இந்தியக் குழு, யு.எஸ். அயலுறவு அமைச்சகத்தின் அரசியல் விவகாரத்திற்கான சார்புச் செயலர் நிக்கோலாஸ் பர்ன்ஸ், ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரிச்சர்ட் பௌச்சர், அணு சக்தி பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு இயக்குநர் ராபர்ட் ஸ்ட்ராட்ஃபோர்ட் ஆகியோர் கொண்ட குழுவினருடன் இரண்டு நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
அவசியம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் அணு சோதனை நடத்துவது, பயன்படுத்திய யுரேனியம் எரிபொருளை மறு ஆக்கம் செய்வது போன்ற உரிமைகளை விட்டுத்தர இயலாது என்று இந்தியா கூறி வருவதால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையே தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அமெரிக்க அரசின் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீஃபன் ஹாட்லியும் சந்தித்துப் பேசினர். அதன்பிறகு இருதரப்பினரும் அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைசை சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது இந்திய தரப்பிற்கு உதவ அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கரும் வாஷிங்டனில் உள்ளார்.
இரண்டு நாள் பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் நல்ல புரிந்துணர்வை எட்டியுள்ளதாகவும், எனவே இன்றைய பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் பேச்சாளர் டோனி ஸ்னோ, "இந்திய-யு.எஸ். அணு சக்தி ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் மிக அவசியமான ஒன்று என்றும், அதனை வெற்றிகரமாக இறுதி செய்ய முயற்சித்து வருவதாகவும்" கூறியுள்ளார். (யு.என்.ஐ.)
Wednesday, July 18, 2007
மும்பை தொடர் குண்டு வெடிப்பு: 3 பேருக்கு மரண தண்டனை!
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்கி மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கில் 100 பேர் குற்றவாளிகள் என மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் அறிவித்து அவர்களுக்கு படிப்படியாக தண்டனை வழங்கி வருகிறது.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அப்துல் கனி இஸ்மாயில் துர்க், பர்வேஷ் ஷைக், முகமது முஸ்டாக் தரனி ஆகிய மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்கி தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோடே இன்று தீர்ப்பளித்தார். இவர்கள் மூவரும் பல்வேறு இடங்களில் குண்டு வைத்து பலர் உயிரிழக்க காரணமாக இருந்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தனது தீர்ப்பில் கோடே கூறியிருந்தார்.
அப்துல் கனி இஸ்மாயில் முக்கிய குற்றவாளியான டைகர் மேமனுடன் சேர்ந்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வொர்லி சந்தையில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு வெடிக்கச் செய்ததில் பலர் கொல்லப்பட்டனர். பர்வேஷ் ஷைக் தெற்கு மும்பையில் உள்ள சந்தை ஒன்றில் வெடி குண்டுகள் நிரப்பிய இரு சக்கர வாகனத்தை வெடிக்கச் செய்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல் தெற்கு மும்பையில் உணவு விடுதியில் வெடி குண்டு வைத்ததற்காக முகமது முஸ்டாக்கிற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதி கோடே தெரிவித்தார். மும்பை தொடர் குண்டு வழக்கில் மரண தண்டனை அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 100 பேரில் இதுவரை 81 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கில் 100 பேர் குற்றவாளிகள் என மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் அறிவித்து அவர்களுக்கு படிப்படியாக தண்டனை வழங்கி வருகிறது.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அப்துல் கனி இஸ்மாயில் துர்க், பர்வேஷ் ஷைக், முகமது முஸ்டாக் தரனி ஆகிய மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்கி தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோடே இன்று தீர்ப்பளித்தார். இவர்கள் மூவரும் பல்வேறு இடங்களில் குண்டு வைத்து பலர் உயிரிழக்க காரணமாக இருந்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தனது தீர்ப்பில் கோடே கூறியிருந்தார்.
அப்துல் கனி இஸ்மாயில் முக்கிய குற்றவாளியான டைகர் மேமனுடன் சேர்ந்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வொர்லி சந்தையில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு வெடிக்கச் செய்ததில் பலர் கொல்லப்பட்டனர். பர்வேஷ் ஷைக் தெற்கு மும்பையில் உள்ள சந்தை ஒன்றில் வெடி குண்டுகள் நிரப்பிய இரு சக்கர வாகனத்தை வெடிக்கச் செய்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல் தெற்கு மும்பையில் உணவு விடுதியில் வெடி குண்டு வைத்ததற்காக முகமது முஸ்டாக்கிற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதி கோடே தெரிவித்தார். மும்பை தொடர் குண்டு வழக்கில் மரண தண்டனை அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 100 பேரில் இதுவரை 81 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
விசா ரத்து : ஹனீஃப் முறையீடு
கிளாஸ்கோ விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாற்றப்பட்ட இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃப், ஆஸ்ட்ரேலிய குடியேற்றத் துறை தனது பணி விசாவை ரத்து செய்ததையடுத்து பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்!
தனக்கு பிரிஸ்பேன் நீதிமன்றம் பிணைய விடுதலை அளித்த பின்னரும், ஆஸ்ட்ரேலிய காவல்துறை தொடர்ந்து தன்னை சிறையில் வைத்திருப்பதை எதிர்த்தும் தனது விசாவை குடியேற்றத்துறை ரத்து செய்ததை நிராகரிக்குமாறு கோரியும் மெல்போர்ன் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக ஹனீஃபின் வழக்கறிஞர் பீட்டர் ரஸ்ஸோ கூறியுள்ளார்.
ஹனீஃபிற்கு அளிக்கப்பட்ட பணி அனுமதியை (விசா) ரத்து செய்ததற்கு காரணம் கூறியுள்ள அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ், ஹனீஃப் குண நலன் சோதனையில் வெற்றி பெறவில்லை என்பதற்காக அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தனக்கு பிரிஸ்பேன் நீதிமன்றம் பிணைய விடுதலை அளித்த பின்னரும், ஆஸ்ட்ரேலிய காவல்துறை தொடர்ந்து தன்னை சிறையில் வைத்திருப்பதை எதிர்த்தும் தனது விசாவை குடியேற்றத்துறை ரத்து செய்ததை நிராகரிக்குமாறு கோரியும் மெல்போர்ன் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக ஹனீஃபின் வழக்கறிஞர் பீட்டர் ரஸ்ஸோ கூறியுள்ளார்.
ஹனீஃபிற்கு அளிக்கப்பட்ட பணி அனுமதியை (விசா) ரத்து செய்ததற்கு காரணம் கூறியுள்ள அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ், ஹனீஃப் குண நலன் சோதனையில் வெற்றி பெறவில்லை என்பதற்காக அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
பான் அட்டை சாதனை முறியடிப்பு
பிறந்து 33 நாட்களே ஆன குழந்தை நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டை வாங்கி ஏற்கனவே இருந்த சாதனையை முறியடித்துள்ளது.
மும்பையில் அனீஷா என்ற பெண் குழந்தையின் பெற்றோர் குழந்தை பிறந்து 33 நாட்களில் பான் அட்டை வாங்கி, ஏற்கனவே குறைந்த வயதில் பான் அட்டை வத்திருந்த கிருஷ்ண சமீர் தாக்கர் என்ற குழந்தையின் சாதனையை முறிடித்துள்ளனர்.
2006 அக்டோபர் மாதம் 26ஆம் தேதி பிறந்த அனீஷாவிற்கு டிசம்பர் 1ஆம் தேதி பான் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனை மிகப் பெருமையுடன் கூறினார் அனீஷாவின் தந்தை,
மிகக் குறைந்த வயதில் பான் அட்டை வைத்திருக்கும் பட்டியலில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் குழந்தை பர்னிக்கா, ரூர்கேலாவைச் சேர்ந்த ஆண் குழந்தை அயூஸ் ரஞ்சன், மும்பையைச் சேர்ந்த கிருஷ்ணே சமீர் தாக்கர் ஆகியோர் வரிசையில் 33 நாள்களில் பான் அட்டை பெற்று சாதனைகளை எல்லாம் முறியடித்துள்ளார் அனீஷா.
மும்பையில் அனீஷா என்ற பெண் குழந்தையின் பெற்றோர் குழந்தை பிறந்து 33 நாட்களில் பான் அட்டை வாங்கி, ஏற்கனவே குறைந்த வயதில் பான் அட்டை வத்திருந்த கிருஷ்ண சமீர் தாக்கர் என்ற குழந்தையின் சாதனையை முறிடித்துள்ளனர்.
2006 அக்டோபர் மாதம் 26ஆம் தேதி பிறந்த அனீஷாவிற்கு டிசம்பர் 1ஆம் தேதி பான் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனை மிகப் பெருமையுடன் கூறினார் அனீஷாவின் தந்தை,
மிகக் குறைந்த வயதில் பான் அட்டை வைத்திருக்கும் பட்டியலில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் குழந்தை பர்னிக்கா, ரூர்கேலாவைச் சேர்ந்த ஆண் குழந்தை அயூஸ் ரஞ்சன், மும்பையைச் சேர்ந்த கிருஷ்ணே சமீர் தாக்கர் ஆகியோர் வரிசையில் 33 நாள்களில் பான் அட்டை பெற்று சாதனைகளை எல்லாம் முறியடித்துள்ளார் அனீஷா.
அப்துல் கலாமிற்கு சார்லஸ்-II விருது!
இந்தியாவின் விஞ்ஞான முன்னேற்றத்திற்காக பெரும் பங்கு அளித்தார் என்று கூறி குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை பிரிட்டனின் மிக உயரிய விருதான இரண்டாவது சார்லஸ் அரசர் பதக்கத்திற்காக தேர்வு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு சமூகம் அறிவித்துள்ளது!
ஜப்பானின் பேரரசர் அக்கி ஹிட்டோவிற்குப் பிறகு இந்த உயர்ந்த விருது அளிக்கப்படும் பிரிட்டனைச் சேராத 2வது நபர் அப்துல் கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நம் நாட்டை வளர்ந்து நாடு என்ற நிலையில் வளர்ந்த நாடு என்பதற்கான பாதையை உருவாக்கி மாற்றத்தைக் கொண்டு வந்ததில் பெரும் பங்கு ஆற்றியவர் என்று ராயல் சொசைட்டியின் தலைவர் மார்ட்டின் ரீஸ் கூறியுள்ளார்.
விஞ்ஞானியாக இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் அப்துல் கலாம் பெரும் பங்கு அளித்துள்ளார் என்று ரீஸ் கூறியுள்ளார்.
கிங் சார்லஸ்-II மெடல் என்றழைக்கப்படும் இரண்டாம் சார்லஸ் பதக்கத்தை வழங்கும் விழா ஒரே நேரத்தில் டெல்லியிலும், லண்டனிலும் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவினால் அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் விழா பிறகு அறிவிக்கப்படும் என்று ராயல் சொசைட்டி கூறியுள்ளது.
ஜப்பானின் பேரரசர் அக்கி ஹிட்டோவிற்குப் பிறகு இந்த உயர்ந்த விருது அளிக்கப்படும் பிரிட்டனைச் சேராத 2வது நபர் அப்துல் கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நம் நாட்டை வளர்ந்து நாடு என்ற நிலையில் வளர்ந்த நாடு என்பதற்கான பாதையை உருவாக்கி மாற்றத்தைக் கொண்டு வந்ததில் பெரும் பங்கு ஆற்றியவர் என்று ராயல் சொசைட்டியின் தலைவர் மார்ட்டின் ரீஸ் கூறியுள்ளார்.
விஞ்ஞானியாக இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் அப்துல் கலாம் பெரும் பங்கு அளித்துள்ளார் என்று ரீஸ் கூறியுள்ளார்.
கிங் சார்லஸ்-II மெடல் என்றழைக்கப்படும் இரண்டாம் சார்லஸ் பதக்கத்தை வழங்கும் விழா ஒரே நேரத்தில் டெல்லியிலும், லண்டனிலும் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவினால் அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் விழா பிறகு அறிவிக்கப்படும் என்று ராயல் சொசைட்டி கூறியுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் முடிவு!
பா.ஜ.க. ஆதரவுடன் கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்துவரும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம், குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளது!
புதுடெல்லியில் பி.டி.ஐ. செய்தியாளரிடம் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தள பேச்சாளர் தனிஷ் அலி, பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தங்களது கட்சியின் தலைவர் தேவே கெளடாவை சந்தித்து பைரோன் சிங் ஷெகாவத்திற்கு ஆதரவு கேட்டதாகவும், ஆனால் தேவே கெளடா அதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளிடம் இருந்து சமதூரத்தில் இருக்கவே மதச்சார்பற்ற ஜனதா தளம் முடிவெடுத்துள்ளதால், குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவெடுத்துள்ளதாக தனிஷ் அலி கூறியுள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 50 சட்டப் பேரவை உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களின் மொத்த வாக்கு மதிப்பு 16,000 ஆகும்.
பா.ஜ.க. ஆதரவுடன் கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தும், பா.ஜ.க. ஆதரவு வேட்பாளரை மறுத்து அக்கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம்.
புதுடெல்லியில் பி.டி.ஐ. செய்தியாளரிடம் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தள பேச்சாளர் தனிஷ் அலி, பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தங்களது கட்சியின் தலைவர் தேவே கெளடாவை சந்தித்து பைரோன் சிங் ஷெகாவத்திற்கு ஆதரவு கேட்டதாகவும், ஆனால் தேவே கெளடா அதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளிடம் இருந்து சமதூரத்தில் இருக்கவே மதச்சார்பற்ற ஜனதா தளம் முடிவெடுத்துள்ளதால், குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவெடுத்துள்ளதாக தனிஷ் அலி கூறியுள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 50 சட்டப் பேரவை உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களின் மொத்த வாக்கு மதிப்பு 16,000 ஆகும்.
பா.ஜ.க. ஆதரவுடன் கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தும், பா.ஜ.க. ஆதரவு வேட்பாளரை மறுத்து அக்கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம்.
பேய், ஆவிகளை ஓட்டும் அதிசய சாக்கடைக் குட்டை





"ஹுஸைன் தேக்ரி" என்ற மாய மந்திர பள்ளத்தாக்கு பற்றி நம்மில் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாது. ஆனால் இங்கு உள்ள ஒரு சாக்கடை நீரில் குளித்தால் உங்களை பிடித்திருக்கும் பேய்களும், ஆவிகளும் தலை தெறிக்க ஓடுகிறதாம், இது அப்பகுதி மக்களின் நம்பிக்கை, இதோ நம் ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு நிகழ்வு!
அந்த இடத்திற்கு நாங்கள் காலையில் சென்றோம். நுழைவாயிலில் இரண்டு பெண்கள் ஒரு அசாதாரணமான நிலையில் இருந்ததைக் கண்டோம், ஜமுனா பாய், கௌசர் பி என்ற அந்த இரண்டு பெண்கள் எங்களைப் பார்த்து ஏதோ கூச்சலிட்டபடி இருந்தார்கள்.
ஜமுனா பாயின் கணவர் நம்மிடம் கூறும்போது, "சில நாட்களாவே ஜமுனாவின் நடத்தை விசித்திரமாக இருக்கிறது. பைத்தியம் மாதிரி பேச்சு, நடப்பு எல்லாம், இதனால் ஒரு பூசாரியை கேட்டேன். அவர் இந்த இடத்தைக் கூறினார், ஏனெனில் அவளை ஆவி பீடித்திருக்கிறதாம்" என்றார்.
இரண்டு வாரமா இங்குதான் இருக்கின்றோம், வந்ததிலிருந்து இப்படித்தான் கத்திக்கிட்டே இருக்கா, ஆனா இந்த சிகிச்சைக்கு பிறகு குணமாயிடும் என்று நம்புவதாகக் கூறினார்.அதன் பிறகு நாம் ஹஸ்ரத் இமாமின் ரோஜா (கல்லறை அமைந்துள்ள இடம்) என்ற இஸ்லாமியர்களின் புனித இடத்திற்கு சென்றோம். அங்கு நுழைந்ததுமே நமக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் ஆண்களும் பெண்களும் கூச்சலும் அழுகையுமாக இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தோம். அந்தச் சூழலே ஒட்டு மொத்தமாக ஈரல் குலையை நடுங்க வைப்பதாய் இருந்தது.
இது என்ன என்று இமாம் தைமுரியிடம் வினவினோம். இது போன்று பேய், ஆவி பிடித்தவர்கள் இங்கு குளிப்பார்கள். அதன்பிறகு சங்கிலியின் ஒரு முடிச்சு வலையிலும், அடுத்த முடிச்சு சம்பத்தப்பட்ட நபரின் கழுத்திலும் இடப்படும். இந்த சங்கிலி பிணைப்பிற்குப் பிறகு அந்த நபர் பேயின் ஆதிக்கத்திற்குள் வருவதாக நம்பப்படுகிறது. அதன் பிறகு இங்குள்ள ஒரு குளத்தில் குளிக்க வைக்கப்படுவார்கள் என்றார்.
அந்தக் குளத்திலிருந்த நீர் நமக்கு அதிர்ச்சி அளித்தது. நகரத்தின் ஒட்டுமொத்த கழிவு நீரும் குழாய் வழியாக கொட்டும் அந்த இடம்தான் இந்த சிகிச்சை அளிக்கும் குளமாம்.
சகினா என்ற சிறுமியை சந்தித்தோம். தன் தாயாரை ஆவி பிடித்திருக்கிறது என்றும், அது தன்னையும் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக இங்கு வந்து குளிப்பதாகவும் அவள் கூறியபோது வியப்பாக இருந்தது.
மற்றொரு பூசாரியான நவாப் சர்வரிடம், சாக்கடை நீரில் குளித்தால் வியாதிகள் வராதா? குணப்படுத்துகிறது என்று எப்படி நம்பப்படுகிறது என்றோம். அதற்கு அவர், இந்த சாக்கடை குளியல் ஆரோக்கியமானவர்களை ஒன்றும் செய்யாது, சில கெட்ட ஆன்மாக்களே இதனால் பாதிப்படையும் என்றார்.எப்படி இந்த நம்பிக்கை துவங்கியது?
நவாப் இஸ்மாயில் அலி கான் மற்றும் ஜாவ்ரா நவாப் காலத்தில் தசரா பண்டிகையும் மொகரம் பண்டிகையும் ஒரே நாளில் வந்த போது நவாப் தசராவில் பங்கேற்க முடிவு செய்தது முஸ்லிம்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது.
இதனால் முகரத்திற்கு முஸ்லிம்கள் கூடவில்லை. முகரத்திற்கு அடுத்த நாள் ஒரு பெண் கண்டெடுத்த வைரம் நவாபிடம் இந்த இடத்தில் சில ஆன்மாக்கள் அவதியுறுகின்றன என்று கூறியதாம். இதனால் தன் தவறை நவாப் உணர்ந்து துக்கத்திற்காக அனைவரையும் கூடுமாறு செய்தாராம். அன்று முதல் இந்த இடம் பல்வேறு பிரச்சனைகளால் வாடுபவர்களுக்கு குணமளிப்பதாக நம்பப்படுகிறது.
Monday, July 16, 2007
பொக்கிஷத்தை இயக்கும் சேரன்

கரு.பழனியப்பன் இயக்கும் பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சேரன் அடுத்து எல்.எம்.எம் கம்பெனிக்கு பொக்கிஷம் படத்தை இயக்கி நடிக்கப் போகிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியை மீராஜாஸ்மீனை வைத்து எடுத்தார்கள். அந்த படத்தைத்தான் சேரன் இயக்கப் போகிறார்.
புதுமுகம் அல்லது இதுவரை தமிழில் நடிக்காத மலையாள நடிகையை கதாநாயகியாகப் போடலாம் என்ற முடிவில் இருக்கிறார் சேரன். அதற்காக புதுமுகங்களையும் மலையாள நடிகைகளையும் வலைபோட்டுத் தேடி வருகிறார்.
கோபிகாவை விட அம்சமான ஒரு பெண்ணை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் சேரன்.
அறை எண் 305 ல் கடவுள் படப்பிடிப்பு ஆரம்பம்
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் அறை எண் 305ல் கடவுள் படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம்-ல் இன்று முதல் தொடங்கி இருக்கிறது.
முதல் படத்தில் நகைச்சுவையை கையெலெடுத்த இயக்குனர் இப்படத்திலும் காமெடியையே கையாளப் போகிறார்.
பிரமாண்டமான செட்டில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. படத்திற்கென்று தனியாக பூஜை விழா வைக்காமல் படப்பிடிப்பில் எளிமையாக பூஜை போட்டு தொடங்கி இருக்கிறார்கள்.
கஞ்சா கருப்பு, சந்தானம் இடம்பெறும் பாடல்காட்சி படப்பிடிக்கப்பட்டது.
முதல் படத்தில் நகைச்சுவையை கையெலெடுத்த இயக்குனர் இப்படத்திலும் காமெடியையே கையாளப் போகிறார்.
பிரமாண்டமான செட்டில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. படத்திற்கென்று தனியாக பூஜை விழா வைக்காமல் படப்பிடிப்பில் எளிமையாக பூஜை போட்டு தொடங்கி இருக்கிறார்கள்.
கஞ்சா கருப்பு, சந்தானம் இடம்பெறும் பாடல்காட்சி படப்பிடிக்கப்பட்டது.
Sunday, July 15, 2007
எல்லைக்கோடு அமைதிக் கோடாக மாற்றப்பட வேண்டும் - பிரதமர்

ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதம் இல்லாத மாநிலமாகவும், இந்தியா - பாகிஸ்தான் இடையே உறவுகளை மேம்படுத்தும் சின்னமாகவும் அது விளங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ஒரு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஜம்மு பல்கலைக்கழகத்தில் தனக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பிளப்பது அல்லது பிரிப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை என்று கூறிய மன்மோகன் சிங், தான் ஏற்கனவே கூறியது போல, எல்லைக்கோடுகள் மாற்றப்படாது, ஆனால் அவைகள் அர்த்தமற்றதாக்கப்பட வேண்டும் என்றும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அமைதிக்கான கோடாக மாற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.
தற்பொழுது பாகிஸ்தானுடன் நடந்து வரும் பேச்சுவாத்தையானது, கடந்த 60 ஆண்டுகளாக ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்கு தீர்வு காணும் விதமாகவும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் விதமாகவும் இருக்கும் என்று மன்மோகன் சிங் கூறினார்.
உண்மையான அரசியல் தலைமையிலான ஜனநாயகம் என்பது வாக்குகளிப்பு மூலம் மட்டுமே கிடைக்கும் என்றும், துப்பாக்கிகள் மூலம் பெறமுடியாது என்றும் கூறிய மன்மோகன் சிங், அமைதியும், அன்பும் நிறைந்த இந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலிற்கு தீர்வு காண்போம் என்று கூறினார்.
Subscribe to:
Posts (Atom)
