Saturday, December 8, 2007

டைட் ஷெட்யூலில் சினேகா


சினிமா, டிவி விளம்பரம் என படு பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறார் சினேகா. அடுத்த ஆண்டு பாதி வரை அவரது கால்ஷீட் டைரி புல்லாக இருக்கிறதாம்.

புதுப்பேட்டைக்கு முன்பு கொஞ்சம் போல தமிழில் டல்லடித்திருந்தது சினேகாவின் மார்க்கெட். புதுப்பேட்டை வந்ததும் கொஞ்சம் போல நிமிர்ந்தார் சினேகா. நிறையப் பட வாய்ப்புகள், அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

தமிழ் தவிர தெலுங்கிலும் சினேகாவுக்கென்ற உள்ள படங்கள் நல்ல இடைவெளியில் வந்ததால் இரு மொழிகளிலும் படு பிசியாக இருந்தார் சினேகா. கூடவே டிவி விளம்பரங்களும் சேர்ந்து கொண்டதால் படு டைட்டாகி விட்டது சினேகாவின் மார்க்கெட்.

இப்போது சினேகா சேரனுடன் பிரிவோம் சந்திப்போம், ஷாமுடன் இன்பா, ராகவேந்திரா லாரன்ஸுடன் பாண்டி என பிசியாக இருக்கிறார். தெலுங்கிலும் 2 படங்களில் நடிக்கவுள்ளார். இதுதவிர டிவி விளம்பரப் படங்களும் நிறையவே இருக்கிறதாம்.

இப்படி படு டைட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சினேகாவால் புதுப் படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதம் வரை கால்ஷீட் கொடுக்க தேதி இல்லையாம். அதன் பிறகுதான் புதுப் படங்களுக்குத் தரமுடியும் என்று கூறி வருகிறாராம்.

திரிஷாவின் குரலாசை!


திரிஷா புது முடிவெடுத்துள்ளார். அது, இனிமேல் சொந்தக் குரலில்தான் வசனம் பேசி நடிக்கப் போகிறாராம்.

நல்ல அழகோடு, இனிய குரல் வளமும் படைத்தவர் திரிஷா. ஆனாலும் இதுவரை அவர் ஒரு படத்தில் கூட சொந்தக் குரலில் பேசியதில்லை. தமிழைக் கூட எப்போதாவதுதான் பேசுவார். வாயைத் திறந்தாலே ஏபிசிடிதான்.

இந்த நிலையில் இனிமேல் தான் நடிக்கும் படங்களிலெல்லாம் சொந்தக் குரலில்தான் பேசி நடிக்கப் போகிறாராம் திரிஷா. முதல் முறையாக அபியும், நானும் படத்திலிருந்து சொந்தக் குரலுக்கு பிள்ளையார் சுழி போடுகிறாராம்.

திரிஷாவின் இந்த முடிவுக்கு ஒரு பிரஸ்டிஜ் காரணமும் இருக்கிறது. எங்கிருந்தோ வந்த ஆசின், நயனதாரா ஆகியோரெல்லாம் சொந்தக் குரலில் பேசும்போது பச்சைத் தமிழச்சியான நாம் மட்டும் டப்பிங் குரலில் பேசுவது நியாயமில்லையே என்ற எண்ணம்தான் திரிஷாவின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாம்.

அபியும், நானும் படத்தைத் தொடர்ந்து தான் நடித்து வரும் பிற படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசப் போவதாக அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளாராம் திரிஷா.

இருந்தாலும் திரிஷாவை சொந்தக் குரலில் பேச விடுவதா, அல்லது வழக்கம் போல டப்பிங் ஆர்ட்டிஸ்டான சவீதாவையே பேச விடுவதா என்பது குறித்து இயக்குநர் ராதா மோகன் இன்னும் முடிவு செய்யவில்லையாம். இருந்தாலும் திரிஷாவையே அவர் டப்பிங் பேச வைக்கக் கூடும் என்று தெரிகிறது.

திரிஷாவின் சொந்தக் குரல் முடிவுக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட வேண்டுமானால், சம்பந்தப்பட்ட கலைஞர்கள் சொந்தக் குரலில் பேசியிருக்க வேண்டும், இரவல் குரலில் பேசியிருந்தால் விருது கிடைக்காது.


அபியும் நானும் படத்தில் தனது கேரக்டருக்கு தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று திரிஷா எதிர்பார்ப்பதால்தான் சொந்தக் குரலில் பேச முடிவு செய்துள்ளதாக அந்த இன்னொரு தகவல் கூறுகிறது.

எப்படியோ, தனக்காக தானே பேசப் போகிறார் திரிஷா, அந்த வரைக்கும் சந்தோஷம்தானே!

சந்தோஷத்தில் தமன்னா!


கல்லூரி படத்தில் தனது நடிப்பு சிறப்பாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிவதாலும், படத்தின் ஓபனிங் சிறப்பாக இருப்பதாலும் நாயகி தமன்னா படு சந்தோஷமாக இருக்கிறார்.

கேடி படத்தில் அறிமுகமான தமன்னா அதன் பிறகு வியாபாரி உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்தார். நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்தார். ஆனால் தமிழில் அவருக்கு சரியான பிரேக்தான் கிடைக்கவில்லை.

கிளாமராக நடிக்கத் தயாராக இருந்தும் கூட அவருக்கு சரியான வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை. மாறாக தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வந்ததால் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார். அப்படியே தமிழிலும் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில்தான் ஷங்கரின் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள கல்லூரி படத்தின் நாயகி வாய்ப்பு தமன்னாவுக்கு வந்தது.

இப்போது கல்லூரி ஒரு வழியாக தியேட்டர்களுக்கு வந்து விட்டது. படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாம்,. குறிப்பாக தமன்னாவின் நடிப்பு அபாரம் என்ற பேச்சும் கிளம்பியுள்ளது. இதனால் தமன்னா சந்தோஷமாக உள்ளார்.

பட்டணத்து கல்லூரி மாணவி ஷோபனாவாக இப்படத்தில் வருகிறார் தமன்னா. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு சிறிய ஊருக்கு வரும் அவர் சந்திக்கும் நிகழ்வுகள்தான் படத்தின் கதை. தமன்னாவின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக படத்தைப் பார்த்த பத்திரிக்கையாளர்கள் புகழாரம் சூட்டி விடவே தமன்னா குஷியாகி விட்டார்.

இப்போது தமன்னாவைத் தேடி பட வாய்ப்புகள் ஓடி வர ஆரம்பித்துள்ளதாம். குறிப்பாக இரண்டு பெரிய நிறுவனங்கள் தமன்னாவை தங்களது படங்களில் புக் செய்துள்ளனவாம்.

அதில் ஒன்று ஏவி.எம்.மின் படம். சூர்யாவுக்கு ஜோடியாக இதில் நடிக்கிறார் தமன்னா. படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த். இந்த செய்தியை ஏற்கனவே சொல்லி விட்டோம்.

அடுத்த படத்தை தயாரிக்கப் போவது ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இதில் பாய்ஸ் நாயகன் சித்தார்த் நயாகனாக நடிக்கவுள்ளார்.

தனக்கு வந்த இந்தப் புது வாழ்வு குறித்து தமன்னா கூறுகையில், பாலாஜி சக்திவேல் சாருக்கு நான் பெரிய நன்றியைச் சொல்ல வேண்டும். கல்லூரி எனக்கு மிகப் பெரிய பெருமையைக் கொடுத்துள்ளது. நல்ல அறிமுகமாக இது அமைந்துள்ளது.

இப்படத்தில் நடித்தது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. நிறையக் கற்றுக் கொண்டேன். புதுப் பட வாய்ப்புகள் நிறைய வருகின்றன. ஆனால் அவசரப்பட்டு எதையும் ஒத்துக் கொள்ள விரும்பவில்லை. இப்போதைக்கு தமிழில் 2 படங்களில் மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளேன். தெலுங்கில் இரண்டு படங்கள் உள்ளன என்றார் தமன்னா.

லஞ்ச வழக்கில் நடிகர் சரவணனின் தந்தை சிறையில் அடைப்ப

சேலம்: லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சரவணனின் தந்தை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பருத்தி வீரன், நந்தா உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் சரவணன். இவருடைய தந்தை வீரமுத்து (70). சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்று விட்டார்.

கடந்த 1991ம் ஆண்டு சேலம், மெச்சேரி அருகேயுள்ள மனோரஞ்சிதம், சேசையா ஆகியோருக்கிடையே ஏற்பட்ட நிலத்தகராறில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த விவகாரம் குறித்து மனோரஞ்சிதம் மெச்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அப்போது மெச்சேரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த வீரமுத்து இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மனோரஞ்சிதத்திடம் ரூ.1,000 லஞ்சமாக கேட்டுள்ளார். மனோரஞ்சிதம் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

இதனையடுத்து லஞ்சம் வாங்கும்போது வீரமுத்துவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் கடந்த 2000ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி சேலம் நீதிமன்றம் வீரமுத்துவுக்கு 1 வருடம் சிறை தண்டனை விதித்தது.

தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வீரமுத்து மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இதனையடுத்து வீரமுத்து கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இதனால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் சேலம் தலைமை நீதித்துறை நடுவர் இளையராணி முன்னிலையில் சரணடைந்த அவர், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

குவைத்திலிருந்து சானா...!


சிம்பு சிலம்பவுள்ள சிலம்பாட்டம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐக்கிய அரபு தேசத்திலிருந்து அழகுக் குதிரை சானா கான் கோலிவுட்டுக்கு வருகிறார்.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் சிலம்பாட்டம். இதில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். கேமராமேன் சரவணன் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். வருகிற 7ம் தேதி இப்படம் தொடங்குகிறது. லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இது 25வது படம்.

இப்படத்தில் முதலில் சினேகா நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்டது. பின்னர் இவர் அந்த சினேகா இல்லை, சினேகா உல்லல் என்று இன்னொரு பேச்சு கிளம்பியது. பிறகு இருவருமே நடிக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.

தற்போது இருவருமே படத்தில் இல்லையாம். மாறாக, குவைத்தைச் ேசர்ந்த அழகு மாடல் சானா கான் நாயகியாக நடிக்கவுள்ளார்.

பார்க்க, நம்ம ஊர் பொண்ணு போல படு க்யூட்டாக இருக்கிறார் சானா கான். வசிப்பது குவைத்தாக இருந்தாலும், பிறந்தது மும்பையாம். பேஷன் டிசைனிங்கிலும், மாடலிங்கிலும் படு பிசியாக இருக்கும் சானா கானை கோலிவுட்டுக்குக் கூட்டி வருகிறார்கள் சிம்பு படம் மூலமாக.

வெள்ளிக்கிழமை சிலம்பாட்டம் படப்பிடிப்பு தொடங்கியது. பாவாடை, தாவணியில் அச்சு அசல் தமிழ்ப் பெண் போல அம்சமாக தோன்றி நடித்தார் சானா.

முதல் சீனை முடித்து விட்டு வந்த சானா நம்மிடம் பேசுகையில், எனது பெயரே சானா கான்தான். இந்தப் பெயரை படத்துக்காக மாற்ற விருப்பமில்லை. சானா கான் என்ற பெயர் ஏற்கனவே ரொம்ப பாப்புலரான பெயர்தான் என்பதால் மாற்ற விரும்பவில்லை.

குவைத்திலும், மும்பையிலும் 30 விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன். ஒரு மாடலாக, நான் சென்னைக்கு புதியவள் இல்லை. ஆனால் ஒரு சினிமா நடிகையாக இப்போதுதான் சென்னைக்கு வந்துள்ளேன். தமிழ்ப் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது.

சவாலுக்குரிய, கிளாமரான வேடங்களில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். கிளாமருக்கும், செக்ஸியாக தோன்றுவதற்கும் என்ன அளவுகோல் என்று எனக்குத் தெரியவில்லை. கதைக்குத் தேவைப்பட்டால் கண்டிப்பாக கிளாமர் காட்டி நடிக்க யோசிக்க மாட்ேடன் (அபிராமி, அபிராமி!)

இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் முன்பு சிம்புவை சந்தித்தேன். ரொம்ப எனர்ஜடிக்கான கிரியேட்டர் அவர். சுவாரஸ்யமான மனிதர். சென்னைக்கு வருவதற்கு முன்பு அவருடைய மன்மதன், வல்லவன் ஆகிய படங்களைப் பார்த்தேன்.

சிம்புவின் கிராமத்துக் காதலியாக நான் இப்படத்தில் நடிக்கிறேன். ரொம்ப க்யூட்டான, அனைவரும் விரும்பக் கூடிய வகையில் எனது கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனது வாழ்நாளிலேயே நான் இப்போதுதான் பாவாடை, தாவணி காஸ்ட்யூமையே அணிகிறேன். இந்த காஸ்ட்யூம் எனக்கு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது, எனது லுக்கையே மாற்றி விட்டது என்று அழகுப் புன்னகையுடன் கூறுகிறார் சானா.

இப்படத்தில் அப்பாவி இளைஞன் வேடத்தில் சிம்பு நடிக்கவுள்ளாராம். மன்மதன் படத்தில் வந்த அப்பாவி இளைஞன் போன்ற வேடமாம் இது. கோவில் பூசாரியாக வருகிறாராம் சிம்பு. சமய சந்தர்ப்பம் காரணமாக சட்டத்தைக் கையில் எடுக்க நேரிடுகிறதாம்.

தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள கோவில் நகரங்களில் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கவுள்ளது. படத்தில் லொள்ளு சபா சந்தானம், கஞ்சா கருப்பு, கருணாஸ் ஆகியோரும் இருக்கிறார்கள். தினா இசையமைக்கிறார்.

இந்த ஆண்டு சிம்புவின் படம் எதுவும் திரைக்கு வரவில்லை. கடைசியாக வந்த படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸான வல்லவன். தற்போது காளை மற்றும் கெட்டவன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் சிம்பு. இதில் கெட்டவன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காளை அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் திரைக்கு வரக் கூடும்.

Sunday, December 2, 2007