Friday, April 4, 2008

நயனிடம் சிம்பு 'இம்ப்ரஸ்' முயற்சி!

உண்ணாவிரதம் இருக்க வந்த இடத்தை பயன்படுத்திக் கொண்டு நயனதாராவை இம்ப்ரஸ் செய்ய முயற்சித்தார் சிம்பு. ஆனால் அவரோ சிம்பு பக்கமே திரும்பாமல் எஸ்கேப் ஆகி விட்டார்.

காதல் முறிந்து, வார்த்தைப் போரும் வலுத்து, ஒரு வழியாக எல்லாம் ஓய்ந்து, ரசிகர்களும் கிட்டத்தட்ட மறந்து போன விஷயம் சிம்பு - நயனதாரா காதல்.

ஆனால் சிம்புவால் மட்டும் இன்னும் நயனதாராவை மறக்க முடியவில்லை போலும். இன்று சென்னையில் நடந்த திரையுலகினரின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரதிபலித்தது.

எப்படியும் நயனதாரா வந்துதானே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருந்தாரோ என்னவோ, சிம்புவின் பார்வையில் ஒரு அலை காணப்பட்டது. நயனதாரா வந்தபோது அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்ற சிம்பு, நயனதாரா அருகில் இருந்த சீட்டில் டக்கென்று உட்கார்ந்து கொண்டார்.

நயனதாராவின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் நயனதாரா அந்தப் பக்கமே திரும்பவில்லை. மேலும் அருகில் இருந்த பிற கலைஞர்களுடன் பேசத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் திரிஷாவுடன் ஜாலியாக பேசத் தொடங்கினார். இம்ப்ரஸ் செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் சற்றே வருத்தம் அடைந்த சிம்பு, ஏமாற்றத்துடன் எழுந்து கர்நாடகம் தண்ணீர் கொடுக்காதது தவறு என்று மைக்கைப் பிடித்து பேச ஆரம்பித்தார்.

1 comment:

Anonymous said...

poi pakkutthulla ukkanddhu pattha madiri sollringga ??