
இது என்ன... தலைப்பை மாற்றிப் போட்டு விட்டார்களோ என யோசிக்க வேண்டாம். நிஜம்தான்.
விரைவில் வெளிவரவுள்ள தீ படத்தில் நமீதா அரசியல்வாதியாக நடிக்கிறார். அவரது நாயகன் சுந்தர் சி முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
இதில் விசேஷம் (ரொம்ம்ப்ப விசேஷம்...!), படத்தின் ஆரம்பக் காட்சியில் சுந்தர் சி கிட்டத்தட்ட நிர்வாணமாக வருவதுதானாம்!
இது என்ன நமீதாவுக்கு வந்த சோதனை... என்ற யோசனையுடன், படத்தில் அப்படியொரு காட்சிக்கு என்ன அவசியம், ஏன் இந்த விபரீத யோசனை என்றோம் சுந்தரிடம்.
அவர் கூறியதாவது:
கதைப்படி ஹீரோ சென்னை நகருக்கு ஒன்றுமே இல்லாமல் வருகிறான். படிப்பு கிடையாது, பணம் கிடையாது, அட போட்டுக்க துணிகூட கிடையாது.
அப்படியொரு மோசமான நிலையிலிருந்து இரண்டே மாதங்களில் பெரிய பணக்காரனாக, அரசியல்வாதியாக மாறுகிறான்.
இந்தப் படத்தில் நான் ஏற்றுள்ள இரண்டு வேடங்களுமே, மிகவும் பேசப்படக் கூடியவை. அந்த அளவு சிறப்பாக வந்துள்ளது. என் நடிப்பு வாழ்க்கையில் மிகச்சிறந்த வேடங்களாக இவை அமையும், என்றார்.
'சண்ட' படத்தில் சுந்தருக்கு ஜோடியாக அறிமுகமான ராகினி இந்தப் படத்திலும் நடிக்கிறார். இவர் ஒரு விதத்தில் குஷ்பு மற்றும் சுந்தரின் தூரத்து உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு ஜோடி நமீதா.
அதிரடி அரசியல்வாதியாக அறிமுகமாகி, சுந்தர் மீது காதலாகிக் கசிந்துருகும் வேடமாம். கவர்ச்சியில் இதுவரை எந்தப் படத்திலும் நடிக்காத அளவு புகுந்து விளையாடி இருக்கிறாராம்

No comments:
Post a Comment