சென்னை: எனது தொலைபேசியை ஒட்டு கேட்க உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதி மீது ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
என்னுடைய செல்போன், தொலைபேசி மற்றும் சில எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் சட்ட விரோதமாக ஒட்டு கேட்கப்படுகின்றன. இது குறித்து தமிழக தலைமை செயலருக்கு நான் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.
அரசியல் சட்ட விதி 19ன் கீழ் எனக்குள்ள அடிப்படை உரிமையை மீறியதற்காக முதலமைச்சர் கருணாநிதி மீது ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளேன்.
ஏற்கனவே கடந்த 1988 ஆம் ஆண்டு கர்நாடக முதலமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டே, தொலைபேசி ஒட்டு கேட்கும் விவகாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஏற்பட்ட கதிதான் முதலமைச்சர் கருணாநிதிக்கும் ஏற்படும்.
1997 ஆம் ஆண்டு தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி குல்தீப்சிங் தீர்ப்பு ஒன்றை கொடுத்துள்ளார். ஒரு தொலைபேசி ஒட்டு கேட்பதற்கான வரைமுறையையும் கொடுத்துள்ளார். அந்த வரைமுறையை முதலமைச்சர் கருணாநிதி பின்பற்றவில்லை.
சேது சமுத்திர திட்டம் தற்போது ICUக்கு ('தீவிர சிகிச்சை பிரிவு) போய்விட்டது. முதலமைச்சர் கருணாநிதிதான் அதற்கு ஆக்சிஜன் கொடுத்து தக்க வைத்துள்ளார். அந்த திட்டம் கைவிடப்படுவது உறுதி.
டி.ஆர்.பாலு எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவர் நேர்மையற்றவர் என்று நீதிமன்றம் மூலம் நிரூபிக்க முடிவு செய்துள்ளேன். அவர் மீது லஞ்ச ஒழிப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
தமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உரிமையை மீறி விட்டதாக அவர் மீது உரிமை மீறல் அரசு கொண்டு வந்துள்ளது. இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை சட்டசபையில் படித்ததற்காக உரிமை மீறல் கொண்டு வர முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. உரிமை மீறல் கொண்டு வந்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் சுவாமி.
Saturday, February 2, 2008
Tuesday, January 29, 2008
பாரீஸ் அழகிகள்-செலவு ரூ.2 கோடி!

சக்கரக்கட்டி படத்துக்காக ரூ. 2 கோடி செலவில் பத்து பாரீஸ் அழகிகளை வைத்து படு பிரமாண்டமாக ஒரு பாட்டைப் படமாக்கியுள்ளாராம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
தாணுவின் தயாரிப்பில் உருவாகும் படம் சக்கரக்கட்டி. பாக்யராஜின் மகன் சாந்தனு இப்படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். அவருக்கு இப்படத்தில் இரண்டு ஜோடிகள். ஒருவர் இஷிதா, இன்னொருவர் வேதிகா.
முனி படத்திற்கு முன்பாக வேதிகா நடிக்க வந்த படம் சக்கரக்கட்டிதான். ஆனால் முனி முன்னாடி எடுக்கப்படவே, அவர் 'முனி' நாயகி வேதிகா என்று அழைக்கப்படலானார். இப்போது காளை படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்த பின்னர் 'காளை' வேதிகா என்று அவருக்கு புது நாமகரணம் கிடைத்துள்ளது.
இந்த வேதிகாவும், இஷிதாவும் சேர்ந்து சக்கரக்கட்டியில் செமையாக நடித்துள்ளனராம். கிளாமரில் வேதிகா சூறாவளி என்றால், இஷிதா சுனாமியாக மாறியிருக்கிறாராம். இப்படத்துக்காக ஒரு ஆடம்பரமான பாடலை சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.
அதாவது 500 வருடத்திற்குப் பிறகு நியூயார்க் நகரம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து, அந்த கற்பனையை செட் போட்டு அதில் இந்தப் பாடலை படமாக்கினார்களாம்.
பாடல் படு ரிச் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக பாரீஸிலிருந்து பத்து 'பப்ளி' அழகிகளை கூட்டி வந்து ஆட விட்டுள்ளனர். அவர்களும் பம்பரமாக சுழன்று, 'பப்பளபளவென' ஆட்டம் போட்டுள்ளனராம்.
இந்தப் பாடலில் ஆடியவர்கள் சாந்தனுவும், வேதிகாவும். 'ஐ மிஸ் யூ டா' என்று ஆரம்பிக்கும் இந்த 'தமிழ்' பாடலை எழுதியவர் நா. முத்துக்குமார் (முழுக்க முழுக்க தமிழ்ல்லேயே பாட்டு எழுதினா வரி விலக்கு தருவாங்களாண்ணே?).
இப்படி ஒரு பாட்டை எடுத்தால் எவ்வளவு செலவாகும். ஆனதாம், கிட்டத்தட்ட ரூ. 2 கோடி செலவாகி விட்டதாம். செட்டுக்கே ஏகப்பட்ட லட்சங்கள் ஆனாதம், பாரீஸிலிருந்து வந்த அழகிகளுக்கும் கணிசமான லட்சங்களை வாரி விட நேரிட்டதாம்.
ஏன் இந்த 'கோடி வெறி' என்று இயக்குநர் கலாபிரபுவிடம் கேட்டால், பாடல் ரிச் ஆக இருக்க வேண்டும், பிரமிப்பாக இருக்க வேண்டும், இளைஞர்களை சட்டென்று கவர வேண்டும். அதனால்தான் செலவைப் பற்றிக் கவலைப்படாமல் எடுத்து விட்டோம் என்று விளக்கினார்.
கலாபிரபு வேறு யாருமல்ல தாணுவின் செல்லப் புதல்வன்தான். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் முழுக்க முழுக்க இளைஞர்களுக்கானதாம். எனவே துள்ளலும், துடிப்புமாக இளசுகளை கிறங்கடிக்குமாம்.
படம் 'கெட்டி'யா இருந்தா சரிதான்!
Subscribe to:
Posts (Atom)
